இலங்கையில் ஜவுளித் தொழில்துறையில் புத்தாக்கம் மற்றும் போட்டித்தன்மையை ஏற்படுத்துவதற்கு GTEX உடன் இணையும் JAAF

Share

Share

Share

Share

ஜவுளித் தொழில்துறையின் முன்னேற்றத்திற்காக மற்றொரு தனித்துவமான படியை முன்னெடுப்பதில் இலங்கை அண்மையில் வெற்றி கண்டுள்ளது. GTEX இன் இரண்டாம் கட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நான்கு நாள் திட்டத்தில் இணையவுள்ளது. GTEX என்பது பொருளாதார விவகாரங்களுக்கான சுவிஸ் மாநில செயலகத்தால் (SECO) நிதியளிக்கப்பட்ட ஒரு திட்டமாகும் மற்றும் சர்வதேச வர்த்தக மையத்தால் (ITC) ஏற்பாடு செய்யப்பட்டது. நிலையான எதிர்காலத்திற்கான இலங்கையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், இந்த நிகழ்ச்சித் திட்டமானது ஜவுளி மற்றும் ஆடைத் தொழில்துறைக்கான வட்ட பொருளாதார வணிக மாதிரிகள் பற்றிய பட்டறை மற்றும் பயிற்சியாளர்களுக்கான 2 நாள் பயிற்சி செயலமர்வு ஆகியன இதில் உள்ளடங்கும்.

கடந்த டிசம்பர் 16ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை நடைபெற்ற இந்த மாநாட்டில் சுமார் 90 பேருக்கு ஜவுளித்துறையின் வட்டப் பொருளாதாரம் குறித்து விரிவான புரிந்து கொள்ளுதலும் அளிக்கப்பட்டது. குறிப்பாக, வட்டப் பொருளாதாரத்திற்கான திட்டமிடல், மீள்பயன்பாடு மற்றும் மீள்சுழற்சிக்கான பொருட்களை அதிகரிப்பது மற்றும் ஜவுளி மீள்சுழற்சியில் உயர் தொழில்நுட்பங்கள் மற்றும் தரத் சிறந்த தன்மைகளை ஆராய்தல் போன்ற தலைப்புகளின் கீழ் பல முக்கிய அமர்வுகள் நடைபெற்றன. உலகளாவிய நிலையான ஜவுளி வர்த்தகத்தில் இலங்கையை முன்னணி நாடாக மாற்றுவதே இந்த பயிற்சி செயலமர்வின் நோக்கமாகும்.

19 இலங்கை கல்வியாளர்கள், ஜவுளி தொழில் நிபுணர்கள் மற்றும் அரசாங்கப் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் பயிற்சியாளர்கள் அமர்வுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சித் திட்டம், உள்ளூர் அறிவை அதிகரிப்பதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள சுற்றறிக்கை நடைமுறைகளின் அளவு மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த முடியும். மேலும், 2025 GTEX திட்டத்திற்குள், 500 தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது, இது புத்தாக்கமான வணிக மாதிரியை மிகவும் பரவலாகப் பயன்படுத்துவதற்கான திறனை வழங்குகிறது.

ITC ஃபைபர்ஸின், ஜவுளி மற்றும் ஆடைதுறையின் பிரதானி Matthias Knappe இந்த நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவிக்கையில், “நிலைத்தன்மை என்பது அவசியம். இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக, இலங்கையின் ஜவுளித் தொழில்துறையானது உலக சந்தையில் போட்டித்தன்மையுடன் இருப்பதற்குத் தேவையான அறிவை வழங்கி வருவதுடன், வட்டப் பொருளாதாரத்திற்கான அவசரத் தேவையை பூர்த்தி செய்வதற்கும் உதவி வருகின்றது.” என தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த JAAFன் பொதுச்செயலாளர் திரு. யொஹான் லோரன்ஸ் “இந்த வேலைத்திட்டம், பொறுப்பு வாய்ந்த மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற ஜவுளித் துறையை உருவாக்குவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. சர்வதேச தரத்திற்கு ஏற்ப இலங்கையில் தொழில்துறையை வடிவமைத்து உலகளாவிய சந்தை தேவைக்கு அதிக பலத்தை வழங்குவது மிகவும் முக்கியமானது.” என தெரிவித்தார்.

GTEX/MENATEX, இலங்கை, எகிப்து, ஜோர்தான், மொராக்கோ மற்றும் துனிசியா ஆகிய நாடுகளில் உள்ள ஜவுளி மற்றும் ஆடைத் துறைகளின் ஏற்றுமதி போட்டித்தன்மையை ஆதரிக்கும் ஒரு திட்டமானது, நிலையான மற்றும் வட்ட பொருளாதாரத்தில் கவனம் செலுத்துகிறது, அதே நேரத்தில் தொழில் உருவாக்கம் மற்றும் வறுமைக் குறைப்புக்கான துறையின் சாத்தியக்கூறுகளில் கவனம் செலுத்துகிறது.

தொழில்துறையில் மாற்றத்தை ஊக்குவிப்பதன் மூலம், இந்த திட்டம் பங்கேற்பாளர்கள் சர்வதேச நிலைத்தன்மை தரங்களை பூர்த்தி செய்ய உதவுகிறது மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (SDGs) நெருக்கமாக ஒத்துப்போகிறது. இலங்கையில், GTEX JAAF, ஏற்றுமதி மேம்பாட்டு சபை (EDB), மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகம் போன்ற முக்கிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த நடைமுறைகளை திறம்பட செயல்படுத்துகிறது.

சமமான சுற்றாடல் பொறுப்புகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகளைப் பேணுகின்ற அதேவேளை, போட்டித்தன்மை வாய்ந்த, நிலையான எதிர்காலத்திற்கு இலங்கையை தயார்படுத்துவதே இந்த கூட்டு முயற்சியின் இலக்காகும்.

Janashakthi Finance Wins Silver at...
Lina Manufacturing wins two awards...
Sri Lanka International Insurance Summit...
MAS සමුහයේ සහ Brandix ලංකා...
Capital Trust Properties wins Asia...
CIC හෝල්ඩින්ග්ස් 2026/27 පළමු කාර්තුවේදී...
Janashakthi Finance relocates Kandy branch...
Samsung Sri Lanka හි නවතම...
CIC හෝල්ඩින්ග්ස් 2026/27 පළමු කාර්තුවේදී...
Janashakthi Finance relocates Kandy branch...
Samsung Sri Lanka හි නවතම...
HNB FINANCE பணிப்பாளர் சபைக்கு சிவராஜா...