இலங்கை ஆடை உற்பத்தி துறையின் பல்வேறு நிலைகளை மேம்படுத்த அரசாங்கக் கொள்கையும் ஆதரவும் அவசியம்

Share

Share

Share

Share

முன்னேற்றத்தின் பல்வேறு நிலைகளைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இலங்கையின் ஜவுளித் தேவையில் 50% – 60% இறக்குமதி செய்யப்படுவதாக ஜவுளி மற்றும் ஆடைத் துணை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (FAAMA) தலைவர் சஹான் ராஜபக்ஷ தெரிவித்தார். இறக்குமதியின் மீதான இந்த சார்பு, தொழில்துறையின் முன்னணி நேரத்தை நீடிக்கிறது மற்றும் வேகத்தை மேம்படுத்துவதற்கும் சுறுசுறுப்பான மாதிரிகளைக் கையாளுவதற்குமான திறனைப் பாதிக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த இறக்குமதிகளில் 40% பருத்தியைக் கொண்டுள்ளது, 70% செயற்கைப் நூல்களால் ஆனது.

இலங்கையின் ஜவுளி மற்றும் ஆடை உபகரண உற்பத்தியாளர்களின் வழிகாட்டி அமைப்பான FAAMA, கூட்டு ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் (JAAF) துணை அமைப்பாகும். 40க்கும் மேற்பட்ட உறுப்பு நிறுவனங்களைக் கொண்ட இந்தச் சங்கம், ஆடைத் துறையின் விநியோக சங்கிலிக்கான ஒருங்கிணைந்த குரலாக செயல்படுகிறது. ஜவுளி மற்றும் ஆடை உபகரண உற்பத்தியாளர்கள் வாய்ப்புகளை அடையாளம் காணவும், போக்குவரத்து, கொள்கைகள் மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இணைந்து பணியாற்றுவதற்கு FAAMA உதவுகிறது.

உள்நாட்டு தொழிற்சாலைகளுக்குள் விநியோக சங்கிலிகளை உட்புகுத்துவது தயாரிப்பு நேரத்தை குறைக்கவும், ஏற்கனவே செங்குத்துச் சேர்க்கையை (Vertical Integration) கொண்டுள்ள நாடுகளுடன் இலங்கை போட்டியிடவும் உதவும் என்று ராஜபக்ஷ வலியுறுத்தினார். “சீனா, வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் அனைத்தும் செங்குத்துச் சேர்க்கையைக் கொண்டுள்ளன. இந்த செங்குத்துச் சேர்க்கையை கொண்டிருப்பது முதலீட்டாளர்கள் உள்ளூர் விநியோக சங்கிலியில் தயாரிப்புகளை இயற்கையாகவே உருவாக்க அனுமதிக்கும், இதன் விளைவாக சரக்குக் கட்டணங்கள் குறையும்” என்று அவர் கூறினார்.

ஜவுளி மற்றும் பருத்தி துணித் தொழில் செங்குத்து ஒருங்கிணைப்புக்கு பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார். தற்போது, தேவையான வளங்களில் 40-50% Hayleys Fabric, Teejay மற்றும் Ocean Lanka போன்ற நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. ஜவுளியின் செயல்பாட்டின் அடிப்படையில் மதிப்பு கூட்டப்பட்ட சந்தையே தொழில்துறையின் சிறப்பு.

ஜவுளி மற்றும் ஆடை அணிகலன்கள் உற்பத்தித் தொழிலுக்கு அரசாங்கக் கொள்கை ஆதரவு மிகவும் அவசியமாக உள்ளது, ஏனெனில் அது தொடர்ந்து அதிக மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களை எதிர்த்து அந்தத் தொழிற்துறை போராடுகிறது, இது தொழில்துறை செயல்பாட்டு செலவுகளை அதிகரிக்கிறது. எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரியை (SVAT) ஒழிப்பதன் மூலம் தொழில்துறையின் மீது ஏற்படுத்தக்கூடிய பாதகமான தாக்கம், வணிகங்களின் பணப்புழக்கத்தை பாதிக்கிறது என்பதையும் இராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். “ஆவணங்கள் மற்றும் செலவுகளின் அதிகரிப்புடன், முதலீட்டாளர்கள் இலங்கைக்குள் நுழைவதை ஊக்கப்படுத்துவார்கள்.”

தயாரிப்பு மற்றும் இயந்திர மேம்பாட்டிற்கான அறிவைப் பயன்படுத்திக் கொள்வதற்காக வெளிநாட்டு நேரடி முதலீட்டின் மூலம் கூட்டாண்மைக்கான மகத்தான சாத்தியக்கூறுகளையும் தொழில்துறை காண்கிறது. “கடந்த சில வருடங்களாக தொழில்துறையில் அதிக முதலீடு இல்லை” என்று ராஜபக்ஷ கூறினார். “இலங்கையின் முதலீட்டுச் சூழலை மேம்படுத்துவது இலங்கையின் ஜவுளி மற்றும் ஆடை உபகரண உற்பத்தித் தொழிற்துறை மற்றும் அதன் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதில் நிச்சயமாக ஒரு கருவியாக இருக்கும்.” என அவர் மேலும் தெரிவித்தா

 

தெற்காசியாவில் முதன்முறையாக BYD-இன் ஏழு ஆசனங்களைக்...
Huawei Unveils Three Key Values...
ලෝක කුසලාන ක්‍රිකට් උන්මාදය ප්‍රේක්ෂකයා...
දකුණු ආසියාවේ සිය කුළුඳුල් ප්‍රවේශය...
The Selvern Trust unlocks new...
Fortune GP Farms Strengthens Poultry...
Janashakthi Life 2025 වසරේ රු....
Selvern භාරය වෙතින් SELVE app:...
Fortune GP Farms Strengthens Poultry...
Janashakthi Life 2025 වසරේ රු....
Selvern භාරය වෙතින් SELVE app:...
உற்பத்தியின் தரம் மற்றும் விநியோகத் திறனை...