உலக புவி தினம் 2024இல் நிலைத்தன்மைக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கு கௌரவம்

Share

Share

Share

Share

மகத்தான சவால்களுக்கு மத்தியில் கழிவு நிர்வகிப்பு வெற்றிகரமாக முன்னேறி வரும் நேரத்தில் ஏப்ரல் 22ஆம் திகதி உலக புவி தினம் கொண்டாடப்பட்டது. Coca-Cola அறக்கட்டளையின் நிதி பலத்துடன் World Vision Lanka தலைமையிலான ASPIRE திட்டம் அந்த வெற்றிக்கு உறுதுணையாக உள்ளது என்பது இரகசியமல்ல. பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதைத் தாண்டி, முறையான கழிவு நிர்வாகத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு முழுமையான நடவடிக்கை என்றும் இந்தத் திட்டத்தை குறிப்பிடலாம். ASPIRE திட்டம் பிளாஸ்டிக் சேகரிப்பை அதிகரிப்பது, மீள்சுழற்சி செய்யும் திறனை விரிவுபடுத்துதல், PET பிளாஸ்டிக்கை பொறுப்புடன் அப்புறப்படுத்துதல் மற்றும் கழிவு நிர்வகிப்பில் ஈடுபட மக்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2024 உலக புவி தினத்திற்காக, நிகழ்ச்சித்திட்டத்துடன், நிலையான சூழலுக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட லசந்த தீபால், கயான் சமீர, சமிலா சுரங்கி பெரேரா மற்றும் மஞ்சுளா ராமலிங்கம் போன்ற சுற்றுச்சூழல் ஆதரவாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

ஒரு பிரச்சனையை பெரும் வாய்ப்பாக மாற்றியவர் லசந்த தீபால்

வெலிவேரிய பிரதேசத்தில் வசிக்கும் தந்தையும் கணவனுமான லசந்தவின் பயணம் உறுதியான மற்றும் பலமான பயணமாகும். தனது குடும்பத்திற்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய சவாலை எதிர்கொண்ட அவர், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்வாதாரத்தைத் தேடிக்கொண்டிருந்தார்.

சில சமயங்களில் சமூகத்தின் நிதி அழுத்தங்கள் மற்றும் செல்வாக்குகளுக்கு முகங்கொடுக்காமல், லசந்த ASPIRE திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் தனது விருப்பத்தை நிறைவேற்றினார், மேலும் ASPIRE இன் பயிற்சித் திட்டங்களின் மூலம் பெற்ற அறிவு மற்றும் திறன்களை நன்கு பயன்படுத்தி நிதி வலிமையைப் பெறவும் பணியாற்றினார். அந்த திட்டத்தின் வழிகாட்டுதலின் கீழ், ஒரு தொழிலதிபராக அவர் தனது தொழில்களை மேம்படுத்தவும், தனது சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள முடிந்தது.

இன்றுவரை, வெற்றிகரமான வியாபார முயற்சிகளுக்கு அப்பால், பாடசாலை மூலிகைத் தோட்டங்களை உருவாக்குவதற்கு லசந்த உழைத்துள்ளார், இதன் மூலம் சமூக ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக பாடசாலை மாணவர்களுக்கு கல்வி மற்றும் நிலையான வளங்களை வழங்குவதற்கு உழைத்துள்ளார்.

வாழ்க்கைப் போராட்டத்தை வெற்றிப் பாதைக்குக் கொண்டு வந்தவர் கயான் சமீர

இன்று, ஒரு தொழிலதிபராக, கயானின் பயணம் அவரது இடைவிடாத முயற்சிகளின் விளைவாகும், அவர் தனது குடும்பத்தின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது மட்டுமல்லாமல், பலருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி அந்த குடும்பங்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் பங்களித்தார்.

தனது குடும்பத்தின் பாரத்தை சுமந்த கயான், தனது சிறிய அளவிலான பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு தொழிலை மேலும் விரிவுபடுத்துவதில் சிரமத்தை எதிர்கொண்ட நேரத்தில், ASPIRE மூலம் தனது நிதி மற்றும் வரையறுக்கப்பட்ட வளங்களைத் திரட்டி வணிகத்தை மேம்படுத்த முடிந்தது. ASPIRE இன் பயிற்சி திட்டங்கள், தொழில்நுட்ப ஆதரவு, தேவையான ஆதாரங்களை வழங்குதல் ஆகியவற்றின் மூலம், கயான் தனது வணிகத்தை வளர்க்க சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நிறுவனங்களுடன் நெருக்கமாக பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார்.

பெண்களுக்கு அதிகாரம் அளித்து ஒரு சமூகத்தை மாற்றியவர் சமிலா சுரங்கி பெரேரா

தன் இடைவிடாத முயற்சியால் வாழ்க்கையை வென்ற துணிச்சல் மிக்க பெண்மணியாக சமிலாவை குறிப்பிடலாம். பொருளாதாரச் சிக்கல்களுக்கு மத்தியில், தாயாகவும், மனைவியாகவும், குடும்பத்தை வழிநடத்த தகுந்த வழியைத் தேடிய சமிலா, ஒரு பெண்ணாக சமூகத்தின் பல்வேறு தடைகளை எதிர்கொண்டார். ஆனால் ASPIRE இன் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவின் மூலம், அவர் சிரமங்களை சமாளித்து வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ள முடிந்தது.

பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பாளராக நாளுக்கு நாள் முன்னேறி, பல பெண்களுக்கு வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தார். அங்கு, அக்குடும்பங்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம், குறிப்பாக வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதற்கு சமிலா பணியாற்றினார்.

தைரியமாக வாழ்க்கையை வென்றவர் மஞ்சுளா ராமலிங்கம்

பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் எதிர்கொண்டு தன்னுடைய சொந்த முயற்சியில் தொழிலதிபரான மஞ்சுளா, ASPIRE மூலம் மிகவும் வெற்றிகரமான தொழிலதிபராக மாறி, தனது வாழ்க்கையில் பல எதிர்பார்ப்புகளை நிறைவேற்றினார். இதன் மூலம் தனது மகளின் மருத்துவராகும் கனவை நனவாக்கும் முதல் படியான தன் மகளை பல்கலைகழகத்தில் சேர்த்தார்.

மஞ்சுளாவின் கழிவு சேகரிப்பு மையத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி மற்ற பெண்களுக்கு அதிகாரம் அளிக்க மஞ்சுளா பணியாற்றினார். தான் அனுபவித்த சிரமங்களை கடந்து வந்த வாழ்க்கையில் வெற்றி பெற்ற மஞ்சுளா, தனது சமூகத்தில் உள்ள மற்ற பெண்களுக்கும் அதே வாய்ப்பை உருவாக்க பாடுபடுவதன் மூலம் சமூகத்தின் மீதான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறார்.

லசந்த, கயான், சமிலா, மஞ்சுளா போன்ற தொழில் முனைவோர் தங்கள் முயற்சிகள், அர்ப்பணிப்பு மற்றும் ASPIRE இன் வழிகாட்டுதலின் மூலம் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு அவர்களின் பங்களிப்பு அளப்பரியது என்பதால், உலக புவி தினத்தில் அவர்களை அதிகம் பாராட்ட வேண்டும். அவர்களின் வாழ்க்கைக் கதைகள் ஒவ்வொரு நபருக்கும் ஊக்கம் மற்றும் பலத்தை அளிக்கும் மற்றும் World Vision Lanka இன் ASPIRE திட்டமானது, The Coca-Cola Foundation போன்ற இலாப நோக்கற்ற திட்டங்களால் இயக்கப்படுவதும் புவி தினத்தில் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Coca-Cola அறக்கட்டளை தொடர்பாக

Coca-Cola அறக்கட்டளையின் நோக்கம் உலகெங்கிலும் உள்ள Coca-Cola நிறுவனம் செயல்படும் மற்றும் எங்கள் ஊழியர்கள் வசிக்கும் மற்றும் பணிபுரியும் சமூகங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். சிக்கலான உலகளாவிய சவால்களைச் சமாளிக்கும் மற்றும் நீடித்த தாக்கத்தை உருவாக்கும் மாற்றும் யோசனைகள் மற்றும் நிறுவனங்களை நாங்கள் ஆதரிக்கிறோம். சுத்தமான தண்ணீருக்கான நிலையான அணுகல், காலநிலை மீள்தன்மை மற்றும் பேரிடர் ஆபத்துக்கான தயார்நிலை மற்றும் பதில், வட்டப் பொருளாதாரம், பொருளாதார வலுவூட்டல் மற்றும் நமது கிராமப்புற சமூகங்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. 1984 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, உலகெங்கிலும் உள்ள சமூகங்களை வலுப்படுத்த Coca-Cola அறக்கட்டளை 1.5 பில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டொலர் தொகையை வழங்கியுள்ளது.

 

How Vietnam turned FTAs into...
Sampath Bank Strengthens Ocean Plastic...
උපරිම ඉතිරියක් සහ සුවිශේෂී මිල...
JKCG Auto partners with BOC...
Minoli Wickramasinghe appointed President of...
City of Dreams பெருமையுடன் வழங்கும்...
ஜனசக்தி பைனான்ஸ், பெண்களின் புத்திசாதுரியமான நிதி...
Janashakthi Foundation and President’s Fund...
City of Dreams பெருமையுடன் வழங்கும்...
ஜனசக்தி பைனான்ஸ், பெண்களின் புத்திசாதுரியமான நிதி...
Janashakthi Foundation and President’s Fund...
ජනශක්ති පදනම සහ ජනාධිපති අරමුදල...