குழந்தைப் பருவத்தை ஆர்வ உணர்வுடன் கொண்டாடிய Sunshine Holdings

Share

Share

Share

Share

நம்பிக்கைமிக்க எதிர்காலத்திற்கான அடித்தளம் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் ஆர்வத்தைப் புரிந்துகொள்வதில் உள்ளது என்பதை வலியுறுத்தும் வகையில், ‘எதிர்காலத்தைக் கேளுங்கள். குழந்தைகளின் உரிமைகளுக்காக எழுந்து நில்லுங்கள்’ என்ற தொனிப்பொருளின் கீழ் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் சர்வதேச சிறுவர்கள் தினத்தை தனது ஊழியர்களின் குழந்தைகளுடன் கொண்டாடியது. பத்தரமுல்லையில் அமைந்துள்ள ‘அப்பே கம’வில் நடைபெற்ற இந்த நிகழ்வில், குழுமத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அவர்களுடைய பெற்றோர்களும் கலந்து கொண்டனர். மகிழ்ச்சியான புத்தாக்கங்கள் மற்றும் ஒற்றுமை நிறைந்த ஒரு நாள் அனுபவத்தை இந்த நிகழ்வு வழங்கியது.

“நல்ல விடயங்களை வாழ்க்கைக்கு இணைத்துக் கொள்ளுதல்” என்ற அதன் நோக்கத்திற்கு இசைவாக, Sunshine Holdings ஆனது, குழந்தைகள் தங்களை சுதந்திரமாக ஆராய்ந்து பாக்கவும், கற்பனை செய்யவும், வெளிப்படுத்தவும் ஊக்குவிக்கும் செயல்பாடுகளுடன், படைப்பாற்றல், விளையாட்டு மற்றும் கற்றலால் நிரம்பிய ஒரு நாளைத் தொகுத்தளித்தது. கலை மற்றும் கதை சொல்லும் இடங்கள் முதல் குழுக்களாக இணைந்த விளையாட்டுக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் வரை, ஒவ்வொரு தருணமும் குழந்தைப் பருவத்தை வரையறுக்கும் எல்லையற்ற ஆர்வத்தைக் கொண்டாடியது. இந்த ஆண்டுக்கான சர்வதேச சிறுவர்கள் தினத்தின் குறிப்பிடத்தக்க இணைப்புகளாக, எதிர்காலக் குழந்தையின் செயல்திறனைப் பிரதிபலிக்கும் சுவர் ஓவியம் (Mural Painting) மற்றும் கணினி விளையாட்டுக்கள் (Computer Game Corners) அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அன்றைய தினத்தின் சிறப்பம்சங்களாக, ஓவியம், பாடல், நடனம் மற்றும் மாறுவேடப் போட்டி (Fancy Dress) என நான்கு போட்டிகள் இடம்பெற்றன. இதில் குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்று, அவர்களின் படைப்பாற்றல் மற்றும் நம்பிக்கையுடன் கூடிய மிகச் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு குழந்தையும் அவர்களின் முயற்சி மற்றும் கற்பனைக்காக விருதுகளைப் பெற்றனர். இது ஒவ்வொரு குழந்தையும் பார்க்கப்படவும், மதிக்கப்படவும், கொண்டாடப்படவும் தகுதியானவர்கள் என்ற Sunshineனின் நம்பிக்கையை வலுப்படுத்தியது.

பல ஆண்டுகளாக, Sunshineனின் சிறுவர்கள் தினம் குழுமத்திற்குள் மிகவும் எதிர்பார்க்கப்படும் குடும்ப நிகழ்வுகளில் ஒன்றாக மாறிவிட்டது. இந்த நாளானது ஊழியர்களும் அவர்களது அன்புக்குரியவர்களும் பணியிடத்திற்கு வெளியே வந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவும், தங்கள் குழந்தைகளைக் கொண்டாடவும், SUN குடும்பத்தை தனித்துவமாக்கும் பிணைப்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. இந்த நிகழ்வு, சக ஊழியர்கள் இணைவதற்கும், நல்லுறவை வளர்ப்பதற்கும், Sunshine சமூகத்தை ஒன்றிணைக்கும் பகிரப்பட்ட மதிப்புகளைக் கொண்டாடுவதற்கும் ஒரு அர்த்தமுள்ள வாய்ப்பை உருவாக்குகிறது.

Sunshine Holdings PLC நாட்டை கட்டியெழுப்புதல் என்ற நெறிமுறையை உறுதியாக நம்புகிறது. இந்த முயற்சியானது நமது நாட்டின் மிக முக்கியமான அங்கமான நமது குழந்தைகளை இலக்காகக் கொண்டுள்ளது. குழந்தைகள் தினம் கொண்டாட்டமானது இந்த அர்ப்பணிப்புக்கான ஒரு சான்றாகும். இதனூடாக குழந்தைகள், தங்கள் பெற்றோருடன் சேர்ந்து, உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு நாளை அனுபவிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. பொக்கிஷமான நினைவுகளை உருவாக்கவும், எதிர்காலம் இந்த இளம், நம்பிக்கைக்குரிய நபர்களுக்கு சொந்தமானது என்ற நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தும் ஒரு நாளாக இது அமைந்தது.

BYD ඉතිහාසයේ ප්‍රථම වරට මෝටර්...
TikTok හරහා මැණික් ගැන ලෝකෙටම...
எல்.பி.எல் 2026: உள்ளூர், சர்வதேச நட்சத்திர...
Samsung Sri Lanka Celebrates the...
Father’s Day Special: Meet the...
ජනශක්ති ෆිනෑන්ස් සමාගම ලාභදායීත්වය වැඩිදියුණු...
MAS Linea Intimo විසින් නිර්මාණය...
Sri Lanka’s IMF review: Stabilisation...
ජනශක්ති ෆිනෑන්ස් සමාගම ලාභදායීත්වය වැඩිදියුණු...
MAS Linea Intimo විසින් නිර්මාණය...
Sri Lanka’s IMF review: Stabilisation...
පසුගිය වසරේදී ආයතනවලින් 71%කට අවම...