தனது 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு மத நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் HNB FINANCE

Share

Share

Share

Share

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLC, இந்த ஆண்டு தனது 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், நிறுவனம், அதன் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை ஒன்றிணைத்து பல்வேறு சிறப்பு மத வழிபாட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது.

நாவலையில் உள்ள HNB FINANCEஇன் தலைமை அலுவலக வளாகத்தில் பௌத்த மற்றும் கிறிஸ்தவ மத வழிபாடுகள் நடைபெற்றன. பௌத்த மத நிகழ்ச்சி இரவு முழுவதும் பக்தி பிரசங்கமாக ஏற்பாடு செய்யப்பட்டு, மறுநாள் இருபத்தைந்து பிக்குகளுக்கு அண்ணதானம் வழங்கலுடன் நிறைவடைந்தது. இந்த நிகழ்வு நாவல விக்கிரமசிங்கராம விகாரையின் விஹாராதிபதியான வணக்கத்திற்குரிய கலங்குட்டியே சோரத தேரரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. HNB FINANCE இன் 25 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற கிறிஸ்தவ பிரார்த்தனை வழிபாடு கொழும்பு 08 இல் உள்ள புனித அலோசியஸ் தேவாலயத்தில் வணக்கத்திற்குரிய பிரசாத் ஹர்ஷன ஆண்டகை நடத்தினார்.

இந்நிகழ்வுகளில் HNB FINANCE PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத், துணைப் பொது முகாமையாளர் மதுரங்க ஹீன்கெந்த, சிரேஷ்ட அதிகாரிகள், தலைமை அலுவலகம் மற்றும் கிளை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சர்வமத நிகழ்ச்சித் தொடரின் இந்து சமய நிகழ்ச்சி மட்டக்களப்பு அணைபந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வர இந்து கோவில் வளாகத்தில் வணக்கத்திற்குரிய பாலசிவராமன் தலைமையில் நடைபெற்றது. மனிதவள துணைப் பொது முகாமையாளர் திரு. ருவன் பெர்னாண்டோ மற்றும் தலைமை அலுவலக அதிகாரிகள், மட்டக்களப்பு, கல்முனை உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இயங்கும் HNB FINANCE கிளைகளின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உட்பட ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின்போது கருத்து தெரிவித்த HNB FINANCE PLC நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத், “இந்த நாட்டில் நிதித்துறையின் முகத்தை மாற்றும் பெருமைமிக்க பயணத்தைத் தொடங்கிய HNB FINANCE PLC, கடந்த இரண்டரை தசாப்தங்களாக வாடிக்கையாளர் தேவைகளை தொடர்ந்து கண்டறிந்து அந்தத் தேவைகளுக்கு ஏற்ப அதன் சேவைகளை மேம்படுத்தி வரும் நாட்டின் சில நிதி நிறுவனங்களில் ஒன்றாகும். இலங்கை முழுவதும் எங்கள் கிளை வலையமைப்பை விரிவுபடுத்துவதும், ஒரு நாடாக நாங்கள் எதிர்கொண்ட மிகவும் சவாலான காலகட்டங்களில் கூட, எங்கள் ஊழியர்களையும் வாடிக்கையாளர்களையும் பாதுகாக்கும் அதே வேளையில் இலாபத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பேணுகையில் செயல்படுவதும் உண்மையிலேயே சவாலான அனுபவமாகும். இந்த அனைத்து சவால்களிலும் எங்கள் மிகப்பெரிய பலம், இரண்டரை தசாப்தங்களுக்கும் மேலாக எங்களை நம்பிய எங்கள் அர்ப்பணிப்புள்ள ஊழியர்கள் குழு மற்றும் எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர் தளமாகும். நாங்கள் இவ்வளவு தூரம் வந்த பயணத்தைப் பற்றி சிந்திக்கும்போது, இந்த அணிகள் நிறுவனத்தின் நற்பெயருக்கு அவர்கள் செய்த பங்களிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது, மேலும் இந்த 25 வது ஆண்டு நிறைவை அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறேன். HNB FINANCE அவர்களின் ஆசீர்வாதங்களுடன் தொடர்ந்து வலுவடையும் என்று நான் நம்புகிறேன்.” என தெரிவித்தார்.

TikTok 2026 පළමු කාර්තුවේ ප්‍රජා...
ITC Ratnadipa Secures Coveted ‘Sustainable...
LPL තරඟාවලිය ශ්‍රී ලංකාවේ අනාගත...
ITC Ratnadipa Introduces Rūhāniyat, an...
JKCG Auto and Green EV...
කලාපීය වර්ධනය ශක්තිමත් කිරීම සඳහා...
“இலங்கையின் இளம் வீரர்களை பட்டை தீட்ட...
නව ජවයකින් සහ නව මුහුණුවරකින්...
කලාපීය වර්ධනය ශක්තිමත් කිරීම සඳහා...
“இலங்கையின் இளம் வீரர்களை பட்டை தீட்ட...
නව ජවයකින් සහ නව මුහුණුවරකින්...
Prime Lands Residencies සමාගමේ ‘The...