பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் RPC தமது ஊழியர்களுக்கு தீபாவளி முற்பணத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது

Share

Share

Share

Share

பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் (RPCs) தமது ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முற்பணத்தை தீபாவளி பண்டிகையுடன் ஆரம்பித்து வைப்பதாக இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) இன்று அறிவித்துள்ளது.

அதன்படி, அனைத்து RPC ஊழியர்களும் முந்தைய 20,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்ட பண்டிகைக்கால முற்பணத்தைப் பெற்றுள்ளனர், இது 25% அதிகரிப்பைப் காட்டுவதுடன், அதே நேரத்தில் ஊழியர்கள் 25,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாக 20% அதிகரிப்பைப் பெற்றுக்கொள்வார்கள்.

இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் லலித் ஒபேசேகர கூறுகையில்: “தீபாவளி பண்டிகையின் கலாச்சார முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்காக RPCகள் முன்கூட்டியே மற்றும் தாங்களாகவே இந்த முடிவை எடுத்துள்ளனர். இந்த அதிகரித்த முற்பணத்தை வழங்குவதன் மூலம் – இது சமீபத்திய ஊதிய உயர்வு விகிதத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது, RPC கள் ஊழியர்களுக்கு ஆதரவளிப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்துகின்றன, மேலும் அவர்கள் இந்த பண்டிகைக் காலத்தை மேம்பட்ட மன அமைதி மற்றும் நிதிப் பாதுகாப்புடன் அனுசரிக்க அனுமதிக்கிறது.” என தெரிவித்தார்.

தீபாவளி முற்பணத்திற்கான அதிகரிக்கப்பட்ட தொகையானது, சம்பளப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட சமீபத்திய முன்னேற்றத்தை தொடர்ந்து, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் நாளொன்றுக்கு 1,000 ரூபாயில் இருந்து 1,350 ரூபாயாக அதிகரித்தது, மேலும் உற்பத்தித்திறன் கூறுகள் மூலம் தொழிலாளர்கள் ஒவ்வொரு கிலோவிற்கும் பெருந்தோட்ட விதிமுறைகளுக்கு அமைய தங்கள் வருவாயை அதிகரிக்க அனுமதிக்கிறது.

இந்த சம்பள உயர்வுக்கு முன்னரும் கூட, இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர்கள், RPC களால் மேற்கொள்ளப்பட்ட வீடுகள், சுகாதாரம் மற்றும் பல நலன்புரி முன்முயற்சிகளை தவிர்த்து, உலகளாவிய போட்டியாளர்களிடையே அதிக ஊதியம் பெற்றவர்களில் ஒருவராக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“ஒவ்வொரு கண்டத்திற்கும் ஒரு சிகரம் –...
அமெரிக்காவின் புதிய தீர்வை வரி அறிவிப்பு...
Sri Lanka Unlocks New Market...
Sampath Bank Launches Priority Reserve...
2025 වසරේ මැයි මස අපනයන...
Shantha Bandara Appointed President at...
கண்கவர் திருமண கனவுகளை நனவாக்க Weddings...
Capital Trust named one of...
Shantha Bandara Appointed President at...
கண்கவர் திருமண கனவுகளை நனவாக்க Weddings...
Capital Trust named one of...
Dankotuwa Porcelain partners Kiros Hospitality...