வட்டவளை பிளான்டேஷன்ஸ் பிஎல்சி, ரியாஸ் மிஹுலரை தலைவராக நியமிப்பு மற்றும் சுனில் ஜி. விஜேசிங்கவிற்கு பிரியாவிடை

Share

Share

Share

Share

வட்டவளை பிளான்டேஷன்ஸ் பிஎல்சியின் தலைவராக ரியாஸ் மிஹுலரை நியமிப்பதாக அறிவித்தது, சுனில் ஜி. விஜேசின்ஹ, நிறுவனத்துடன் 12 வருட நீண்ட பதவிக் காலத்தை முடித்துவிட்டு பதவி விலகினார்.

ரியாஸ் மிஹுலர் நிதி மற்றும் பெருநிறுவனத் துறைகளில் ஒரு திறமையான நிபுணராவார், அவருடைய வாழ்க்கை முழுவதும் பல்வேறு குறிப்பிடத்தக்க சிரேஷ்ட முகாமைத்துவ பதவிகளை வகித்துள்ளார். அவர் 2012 முதல் 2022 வரை KPMG ஸ்ரீலங்கா மற்றும் மாலத்தீவுகளின் முகாமைத்துவ பங்காளராகப் பணியாற்றினார் மற்றும் KPMG இன் மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய பிராந்தியக் குழுவின் தலைவராக இருந்தார், அங்கு அவர் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் செயல்பட்டார். மிஹுலரின் நிபுணத்துவம் கணக்கியல் மற்றும் முகாமைத்துவம் ஆகிய இரண்டு பிரிவிலும் கடமையாற்றியதுடன், இது இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவகத்தின் தவலைவர் மற்றும் கூட்டுறவு ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்.

தற்போது, மிஹுலர் பல்வேறு பொது நிறுவனங்களின் (PLCs) பணிப்பாளராக உள்ளார், இதில் வட்டவலை பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் PLC ஆகியவை அடங்கும். இவர் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் ஆணையாளராகவும், இலங்கை மத்திய வங்கியின் பங்குதாரர் ஈடுபாட்டு குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

பிரியாவிடைப் பெற்றுக் செல்லும் தலைவர் சுனில் ஜி. விஜேசிங்க கடந்த 12 வருடங்களாக வட்டவளை பிளான்டேஷன்ஸ் பிஎல்சி மற்றும் வட்டவளை டெய்ரி லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளிலும் பணியாற்றியுள்ளார். செப்டம்பர் 2023 இல், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பரஸ்பர புரிந்துணர்வை ஊக்குவிப்பதற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், ஜப்பான் அரசாங்கத்தால் அவருக்கு ‘Order of the Rising Sun’ விருது வழங்கப்பட்டது.

5S அமைப்பு மற்றும் பல்வேறு ஜப்பானிய வேலை முறைகளை செயல்படுத்தியதன் மூலம் வட்டவளை பெருந்தோட்ட நிறுவனத்தில் அவர் தலைவராக இருந்த காலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டது. EFC கூட்டங்களில் ஊதிய விவாதங்களில் விஜேசின்ஹ தீவிரமாக ஈடுபட்டது மற்றும் ஆலோசகராக அவரது பங்கு, பட்டறைகள் மற்றும் தலைமைத்துவ பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்துவது, பெருநிறுவன சிறப்புக்கான அவரது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. ஏறக்குறைய 12 வருட அர்ப்பணிப்புமிக்க சேவை மற்றும் நிர்வாகத்தின் பின்னர், சவால்களுக்கு மத்தியில் பின்னடைவு மற்றும் மூலோபாய வழிகாட்டுதலின் பாரம்பரியத்தை விட்டுச் சென்ற விஜேசின்ஹா தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

வட்டவளை பிளான்டேஷன்ஸ் பிஎல்சி ரியாஸ் மிஹுலரை அன்புடன் வரவேற்கிறது, அவர் தனது வழிகாட்டுதலின் கீழ் புதிய நிறுவன மைல்கற்களை அடைவதில் வெற்றி பெற வாழ்த்துகிறார், அதே நேரத்தில் சுனில் ஜி விஜேசிங்கா நிறுவனத்திற்கு அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு மற்றும் தலைமைத்துவத்திற்காக மனமார்ந்த விடைபெறுகிறார்.

 

දරුවන්ගේ ආරක්ෂාව, සමාජ මාධ්‍ය හා...
සුන්දරත්වයෙන් අනූන කොළඹ නගරයේ ඉහළම...
TikTok introduces new tools to...
லிப்டன் பெயரை உலகிற்கு கொண்டு சென்ற...
7% உயர் வளர்ச்சியுடன் 2025 நிதியாண்டில்...
ආබාධ සහිත පුද්ගලයින් සඳහා ඇඟලුම්...
Samsung Electronics Ranked No.1 in...
Pelican Island Presents a Jazz...
ආබාධ සහිත පුද්ගලයින් සඳහා ඇඟලුම්...
Samsung Electronics Ranked No.1 in...
Pelican Island Presents a Jazz...
மாற்றுத்திறனாளிகளுக்கான ஆடை பாடத்திட்டத்தை சரிபார்க்கும் துறைசார்...