நவலோக்க ஆய்வகத்திற்கு ISO 15189:2022 சான்றிதழ்

Share

Share

Share

Share

இலங்கையின் சுகாதாரத் துறையில் புகழ்பெற்ற நிறுவனமான நவலோக்க ஆய்வகம், ISO 15189 சான்றிதழின் சமீபத்திய தரவரிசையான ISO 15189:2022 க்கு மேம்படுத்தப்பட்ட இலங்கையின் முதல் ஆய்வகமாக தனது சாதனையை பெருமையுடன் அறிவித்தது. இலங்கை முழுவதிலும் உள்ள மருத்துவ மற்றும் பரிசோதனை ஆய்வகங்களின் தரங்களைப் பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கும் பொறுப்பான தேசிய அதிகாரமளிக்கப்பட்ட ஒரு நிறுவனமாக செயற்படும் இலங்கை தர அங்கீகாரச் சபையால் இந்த சான்றளிக்கப்பட்டது. இந்த சான்றிதழின் மையத்தில் 87 சோதனைகளின் பரந்த அளவிலான ஒரு வலுவான சோதனை நோக்கம் உள்ளது. இது மருத்துவ உயிர்வேதியியல், இரசாயன நோயியல், நுண்ணுயிரியல், நோய்த்தடுப்பு மற்றும் செரோலஜி போன்ற முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது.

இந்த சாதனை குறித்து கருத்து தெரிவித்த நவலோக்க ஆய்வக முகாமைத்துவம், “இலங்கை தர அங்கீகார சபையினால் ISO 15189:2022 சான்றிதழைப் பெற்ற முதலாவது ஆய்வுகூடமாக இந்த மைல்கல்லை எட்டியதில் நாங்கள் பெருமையடைகிறோம். இந்தச் சாதனை, தரமான மருத்துவச் சேவையை வழங்குவதற்கான எங்களின் நிலையான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இலங்கையில் சுகாதாரத் தரங்களை தொடர்ந்து மேம்படுத்துவதன் மூலம், நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் பங்குதாரர்களிடையே நம்பிக்கையை வளர்த்து, எங்கள் சமூகத்திற்கு துல்லியமான மற்றும் நம்பகமான நோயறிதல் முடிவுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என தெரிவித்தது.

நவலோக்க ஹொஸ்பிடல்ஸ் பி.எல்.சி.யின் ஆய்வகப் பிரிவாக 1985 இல் நிறுவப்பட்டது, நவலோக்க ஆய்வகங்கள் நற்பெயர் மற்றும் நம்பிக்கையின் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. சமீபத்தில், நவ்லோக்க ஆய்வகம் 20,000 சதுர அடி அலகுகளாக புதுப்பிக்கப்பட்டது மற்றும் அதன் போக்குவரத்து உட்கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டது. உயர்நிலை சுகாதார சேவைகளை வழங்குவதற்கான நமது திறனை இது மேலும் மேம்படுத்துகிறது.

நவலோக்க ஆய்வகத்தின் வெற்றிக்குப் பின்னால் உள்ள ஒரு முக்கிய காரணியாக, இலங்கை மருத்துவ சபையினால் (SLMC) சான்றளிக்கப்பட்ட BSc, MSc, MBA மற்றும் MPhil போன்ற பல தகுதிகளைக் கொண்ட 30 க்கும் மேற்பட்ட ஆலோசகர்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு நிபுணர்கள் கைகோத்துக்கொண்டுள்ளமை ஆகும்.

14 க்கும் மேற்பட்ட நிபுணத்துவ ஆய்வாளர்களைப் பயன்படுத்தி அடிப்படை பகுப்பாய்வு முதல் சிறப்பு நோயெதிர்ப்பு ஆய்வுகள் வரை பலவிதமான சோதனைகளைச் செய்ய ஆய்வகம் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்புக்கு ஏற்ப, உலர் வேதியியல் பகுப்பாய்வுகளைப் பயன்படுத்துவதை நோக்கி நகர்கிறது, இது நீர் ஆதாரங்களை சேமிப்பது மட்டுமல்லாமல், உலகளவில் சுற்றுச்சூழலில் நேர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

நவலோக்க ஆய்வகங்கள் இந்த வரலாற்று மைல்கல்லைக் கொண்டாடும் வேளையில், அதன் முக்கிய மதிப்புகளான சிறப்பம்சம், ஒருமைப்பாடு மற்றும் கருணை ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த மகத்தான சாதனையானது, தரமான சுகாதாரப் பாதுகாப்பில் முன்னோடியாக முன்னோக்கிச் செல்வதற்கான நவ்லோக்க ஆய்வகத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

EFC National Best Employer Awards...
கண்டி நகரில் நவீன விருந்தோம்பல் சேவையின்...
Sunshine Holdings records LKR 48.9...
Huawei Hosts the 1st Global...
Sunshine Foundation for Good strengthens...
வரலாற்று சிறப்புமிக்க காலியில் LANKATILES தனது...
2026இல் பள்ளி மாணவர்களின் கல்விக்கு தொடர்ந்து...
Appe Lanka Restores Naranthalu Tank...
வரலாற்று சிறப்புமிக்க காலியில் LANKATILES தனது...
2026இல் பள்ளி மாணவர்களின் கல்விக்கு தொடர்ந்து...
Appe Lanka Restores Naranthalu Tank...
CINEC CAMPUS Earns IESL Conditional...