இலங்கையின் விவசாய கலாசாரத்தை மேம்படுத்த நொச்சியாகம விவசாயிகளுடன் இணைந்து ‘HNB சருசார’வை அறிமுகப்படுத்தும் HNB

Share

Share

Share

Share

இலங்கையின் தனியார் துறையின் மிகப் பெரிய வாடிக்கையாளர் வங்கியான HNB, நாட்டின் விவசாயத்தை இனிவரும் காலத்துக்கு ஏற்ற வகையில் நவீனமயமாக்கி விவசாயிகளுக்கு வெற்றிகரமான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில் அண்மையில் மற்றுமொரு தனித்துவமான முன்னோக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படி அநுராதபுரம் நொச்சியாகமயில் ‘HNB சருசார’ நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்து வைத்தது. புத்தாக்கமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாய முறைகளை மேம்படுத்துதல், உற்பத்தித்திறனை அதிகரிப்பது மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட சரியான விவசாய நுட்பங்கள் குறித்து அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது, மேலும் இதில் கலந்துகொண்ட 700 க்கும் மேற்பட்ட விவசாய தொழில்முனைவோர் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் கிடைத்தது.

நொச்சியாகம பிரதேசத்தில் உள்ள 16,000 இற்கும் மேற்பட்ட விவசாயிகளின் விவசாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கொண்டுவரும் நோக்கில் HNBயின் புதிய விவசாய வணிகப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட தொடர் நிகழ்ச்சிகளின் ஆரம்ப நிகழ்ச்சியாகவும் இதனைக் குறிப்பிடலாம். நாடு முழுவதும் பரந்துவிரிந்துள்ள 20க்கும் மேற்பட்ட முன்னணி விவசாயத் தீர்வு வழங்குநர்கள், விவசாயிகளுக்கு விவசாயக் கண்காட்சியைக் காணும் வாய்ப்பை வழங்கினர், இதில் விவசாயிகள் விதைகள் முதல் விவசாய பயிர்களின் அறுவடை வரை அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர்.

இந்த விசேட நிகழ்விற்காக, HNBயின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி தமித் பல்லேவத்த, HNB மைக்ரோ நிதித் தலைவர் மஹிந்த செனவிரத்ன, HNB சிறு மற்றும் நடுத்தர நிறுவனப் பொருட்கள் மற்றும் உறவுகளின் தலைவர் என். கீதீஸ்வரன், HNB பிராந்திய வர்த்தகத் தலைவர் (வடமத்திய பிராந்தியம்) நிரோஷ் எதிரிசிங்க மற்றும் HNB பிராந்திய நுண்நிதி முகாமையாளர் (வடமத்திய பிராந்தியம்) ஹிரான் கருணாரத்ன உட்பட, HNB நொச்சியாகம வாடிக்கையாளர் பிரிவின் முகாமையாளர் திரு. நுவன் சந்திரசேகர தலைமையிலான பணியாளர்கள் மற்றும் தலைவர்கள். வட மத்திய பிராந்தியத்தில் உள்ள வாடிக்கையாளர் பிரிவுகளும் இதில் கலந்து கொண்டனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த HNBயின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. தமித் பல்லேவத்த, “பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்ட நொச்சியாகமவில் நிறுவப்பட்ட முதலாவது வங்கியான HNB இப்பிரதேச மக்களுடன் நல்லுறவைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளாக, விவசாய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம் மூலம் அவர்களின் விளைச்சலை அதிகரிக்கவும், அதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தேவையான வழிகாட்டுதல்களையும் ஒத்துழைப்புகளையும் வழங்கியுள்ளோம். எதிர்காலத்தில், விவசாயிகளுக்கு இதேபோன்ற ஒத்துழைப்புகளை வழங்குவதுடன், விவசாயத் துறை மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு தேவையான பங்களிப்பையும் வழிகாட்டுதலையும் வழங்குவோம்.” என தெரிவித்தார்.

மேலும், நவீன தொழில்நுட்பம், அதிநவீன வசதிகளை வழங்குவதன் மூலம் HNB சருசார திட்டத்தின் மூலம் விவசாய மக்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நிதி உதவி மற்றும் புத்தாக்க சாதனங்கள், பயிற்சி மற்றும் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு HNB உறுதிபூண்டுள்ளதாக திரு. பல்லேவத்த தெரிவித்தார். விவசாயத் துறைக்கான உத்திகள் மற்றும் நிதி வசதிகள், விவசாயத்திற்கான அறிவு நிறைந்த தலைமுறையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

HNB நுண்நிதித் துறைக்கு மிகவும் தனித்துவமான வாய்ப்பாக அமைந்த HNB சருசார நிகழ்ச்சித்திட்டத்தின் தொடக்கத்தின் மூலம், நாடு முழுவதும் பரவியுள்ள 30,000 விவசாய தொழில்முயற்சியாளர்களுக்கு, எதிர்வரும் காலங்களில் தமது உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கில், தமது வியாபார வெற்றிக்கு தேவையான ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது. விவசாய தொழில்முனைவோருக்கு உள்ளூர் மற்றும் உலகளாவிய சந்தையில் நுழைவதற்கான வாய்ப்பை உருவாக்கும் HNB கமி புபுதுவ திட்டத்துடன் இணைந்து, நாட்டின் கிராமப்புறங்களின் வளர்ச்சிக்காக புதிய விவசாய தொழில்முனைவோரை உருவாக்கி அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது.

 

Remote Ransomware on the Rise:...
කෘෂි යන්ත්‍රෝපකරණ සඳහා පහසු ලීසිං...
Sampath Bank Launches SL’s First...
அவசரகால மருத்துவமனை சிகிச்சை சேவைகளை மேலும்...
இலங்கைக்கு முதல் முறையாக, அதிவேக நெடுஞ்சாலைகளில்...
Healthguard expands footprint with new...
2025 Softlogic Life විකුණුම් සමුළුවේදී...
Samsung Sri Lanka Launches Exciting...
Healthguard expands footprint with new...
2025 Softlogic Life විකුණුම් සමුළුවේදී...
Samsung Sri Lanka Launches Exciting...
Chevron felicitates female-owned and operated...