இலங்கைச் சுற்றுலாத்துறையில் புதிய மைல்கல்: City of Dreams Sri Lanka-வின் Nüwa ஹோட்டலுக்கு 5 நட்சத்திர அங்கீகாரம்

கொழும்பு, வெள்ளிக்கிழமை, 08 மே 2026: தெற்காசியாவின் முதலாவது முழுமையான ஒருங்கிணைந்த சொகுசு உல்லாச விடுதியான City of Dreams Sri Lanka-வின் கீழ் இயங்கும் அதன் முதன்மைச் சொகுசு ஹோட்டலான Nüwa, தமக்குக் கிடைத்துள்ள கௌரவமிக்க 5-நட்சத்திர (5-Star) அங்கீகாரத்தைக் கௌரவிக்கும் வகையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு மற்றும் கொண்டாட்ட நிகழ்வை நடத்தியது. பிராந்தியத்தின் முன்னைணி சொகுசு விருந்தோம்பல் இலக்குகளில் ஒன்றாக தனது நிலையை இந்த மைல்கல் சாதனை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. Nüwa-வில் உள்ள நேர்த்தியான […]
இலங்கையின் பெருந்தோட்டத் துறை உற்பத்தியை வீழ்ச்சியடையச் செய்யும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள உரத் தட்டுப்பாடு

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமை காரணமாக, உரத்தின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு குறித்து இலங்கையின் பெருந்தோட்டத் துறையின் முக்கிய அமைப்பான இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதன் காரணமாக, அந்தப் பிராந்தியத்தினூடான கப்பல் போக்குவரத்து 90 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உர உற்பத்திக்கான மூலப்பொருட்களின் உலகளாவிய வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்த நீரிணை ஊடாகவே இடம்பெறுவதால், இந்தத் தடைகள் ஏற்கனவே உலகம் முழுவதுமுள்ள […]
City of Dreams பெருமையுடன் வழங்கும் செஃப் சுரேஷ் பிள்ளையின் விசேட சமையல் கலை நிகழ்ச்சி

இலங்கையின் City of Dreams இல் உள்ள Cinnamon Life, இந்த மே மாதத்தில் பிராந்தியத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு சமையல் கலை நிகழ்வை நடத்தவுள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்திய சமையல் கலை நிபுணர் சுரேஷ் பிள்ளை, 2026 மே 8 மற்றும் 9 ஆகிய திகதிகளில் ‘Indiya’ உணவகத்தின் சமையலறையை பொறுப்பேற்று, இரண்டு நாட்கள் நடைபெறும் பிரத்தியேக சமையல் கலை நிகழ்ச்சியை வழங்கவுள்ளார். மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு கிடைக்கும் இந்த உயர்தர […]
ஜனசக்தி பைனான்ஸ், பெண்களின் புத்திசாதுரியமான நிதி வளர்ச்சிக்கு வலுவூட்டும் வகையில் “சக்தி” திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது

JXG இன் துணை நிறுவனமான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி, பெண்களுக்கென பிரத்தியேக நிலையான வைப்புத் திட்டமான “சக்தி” ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது அனைவரையும் உள்ளீர்க்கும் நிதி மற்றும் எதிர்காலத்திற்கான சாதுரியமான சேமிப்பு என்பவற்றிற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. இன்றைய பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட “சக்தி”, பாரம்பரிய நிலையான வைப்புத் திட்டத்திலிருந்து வேறுபட்டது. இது பெண்களுக்கு அவர்களின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆதரவளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் தமது தொழில் வாழ்க்கையை ஆரம்பிப்பது முதல் வணிகத்தை முன்னேற்றுதல், தமக்கும் தங்கள் […]
Samsung இன் புதிய Galaxy A57 5G மற்றும் A37 5G ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் இலங்கையில் அறிமுகம்

Samsung Sri Lanka நிறுவனம் தனது புகழ்பெற்ற Galaxy A தொடரின் புதிய வரவுகளான Samsung Galaxy A57 5G மற்றும் Samsung Galaxy A37 5G ஆகியவற்றை இலங்கையில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. சக்திவாய்ந்த செயல்பாடு, நவீன செயற்கை நுண்ணறிவு (AI) வசதிகள் மற்றும் நீண்டகால நம்பகத்தன்மை ஆகியவற்றை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்;ள இப்புதிய சாதனங்கள், மேம்பட்ட கையடக்கத் தொலைபேசி தொழில்நுட்பத்தை அன்றாட பயனர்களுக்கும் எளிதில் கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த இரண்டு சாதனங்களினதும் பிரதான […]
TikTok வழியாகக் கொண்டாடப்படும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு: எல்லைகளைக் கடந்த ஒரு கலாச்சாரத் திருவிழா

இலங்கையில் ஏப்ரல் மாதம் பிறக்கும்போதே ஒரு விதமான மாயாஜாலமும் கூடவே வந்துவிடுகிறது. விடியற்காலையில் எதிரொலிக்கும் குயிலின் சத்தம், புத்தாண்டு நெருங்கிவிட்டதை நமக்கு முன்கூட்டியே அறிவிக்கிறது. இதனைத் தொடர்ந்து, சிங்கள மற்றும் தமிழ் வீடுகள் அனைத்தும் சித்திரைப் புத்தாண்டிற்கான ஆயத்தப் பணிகளில் மும்முரமாக ஈடுபடத் தொடங்குகின்றன. அடுப்பங்கரைகளில் இரவு நேரங்களிலும் விளக்குகள் அணையாது; கொண்டைக்கவுன், கொக்கிஸ், பெனி வளலு, ஆஸ்மி மற்றும் ரவா லட்டு போன்ற தின்பண்டங்கள் வரிசையாகத் தயாரிக்கப்படுகின்றன. புத்தாடை அணிதல், உறவினர்கள் மற்றும் அயலவர்களுடன் பரிசுகளைப் […]
இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் Huawei: AI மற்றும் Pre Wi-Fi 8 வலையமைப்பு தீர்வுகள் அறிமுகம்

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் 5G தொழில்நுட்பங்களின் வேகமான வளர்ச்சியால் உலகளாவிய ரீதியில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, இலங்கையின் நிறுவன ரீதியிலான தரவுத் தொடர்பு (Datacom) வலையமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் ‘Huawei Intelligent IP Summit 2026’ அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. தொழில்துறை தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த மாநாட்டில், அரசுத் துறை, பெருநிறுவனங்கள், கல்வி, உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் டிஜிட்டல் மாற்றத்திற்கு ஒரு வலுவான வலையமைப்பு […]
தேயிலை உற்பத்தியையும் முக்கிய ஏற்றுமதி சந்தைகளையும் சீராக வைத்திருப்பதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை எனத் தோட்ட உரிமையாளர்கள் கூறுகின்றனர்

மேற்கு ஆசியா மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, பெருந்தோட்டத் துறையின் செலவு அமைப்புகளை அவசரமாக மறுஆய்வு செய்து முறைப்படுத்துமாறு இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது, இலங்கையின் மொத்த வருடாந்த தேயிலை ஏற்றுமதியில் சுமார் 45% — அதாவது இலங்கையின் மொத்த 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் தேயிலை ஏற்றுமதி வருமானத்தில் சுமார் 680 மில்லியன் அமெரிக்க டொலர் — ஈரான், ஈராக், ஐக்கிய அரபு […]
ஆடம்பரமான மற்றும் நிகரற்ற சேவையின் மூலம் கொழும்புக்கு பெருமையை சேர்க்கும் City of Dreams Sri Lanka

தெற்காசியாவின் முதலாவது முழுமையான ஒருங்கிணைந்த சொகுசு விடுதி என்ற பெருமையுடன், ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’ (City of Dreams Sri Lanka) நாட்டின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. தனது மைல்கல் திறப்பு விழாவைத் தொடர்ந்து, ‘நுவா’ (Nüwa) எனும் முதன்மை சொகுசு ஹோட்டலையும், ‘சினமன் லைஃப்’ எனும் துடிப்புமிக்க நவீன ஹோட்டலையும் ஒரே உலகத்தரம் வாய்ந்த இடத்திற்குள் இது கொண்டு வந்துள்ளது. மெல்கோ ரிசார்ட்ஸ் அண்ட் என்டர்டெய்ன்மென்ட் (Melco […]
Prime Constructions இன் தரம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை மீள உறுதி செய்து ISO 9001:2015 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது

ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடியான Prime Group இன் நிர்மாணப் பிரிவான Prime Constructions (Pvt) Ltd (PCL), ISO 9001:2015 சான்றிதழைப் பெற்றுள்ளது. தரம், நம்பிக்கை மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியமங்கள் ஆகியவற்றுக்கான நிறுவனத்தின் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி, ஒரு முக்கிய மைல்கல்காக இந்த சான்றிதழ் அமைந்துள்ளது. ISO 9001:2015 இனால் Prime Constructions நிறுவனத்தின் திட்டமிடல் முதல் இறுதி விநியோகம் வரையிலான ஒவ்வொரு கட்டமும், சீரான மற்றும் தரமான செயல்முறைகளின் ஊடாகவே […]