கூட்டு உழைப்பு மற்றும் பாரம்பரியத்தின் ஒளிரும் அடையாளம்! MAS இன்டிமோ குடும்பத்தின் அற்புதம் வாய்ந்த வெசாக் படைப்பு

8 மாடிக் கட்டிடத்தின் உயரத்திற்கு நிகராக 53 அடி உயரத்தில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் MAS Linea Intimo வெசாக் தோரனப் பந்தல், 15,000க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் மற்றும் 120 துணைக் கூண்டுகளால் ஒளிரூட்டப்பட்டுள்ளது. தனது துடிப்பான வண்ணங்கள் மற்றும் சுழலும் அடுக்குகளுடன், இத் தோரனப் பந்தல் கைவினைத்திறன் மற்றும் பொறியியல் கலையின் ஒரு சாதனையாகத் திகழ்கிறது. இந்த பிரம்மாண்ட வெசாக் தோரனப் பந்தல் எட்டு மாத கடின உழைப்பால் உருவாகியுள்ளது. இதில் Dye House குழுவின் […]

சுகாதாரத் துறையின் இலாப வரம்பு அழுத்தங்களைச் சமாளித்து, 2026 நிதியாண்டில் 11.2% வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள Sunshine Holdings

பன்முகப்படுத்தப்பட்ட வணிகங்களைக் கொண்ட இலங்கையின் கூட்டு நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, 2026 மார்ச் 31 உடன் முடிவடைந்த நிதியாண்டில் 65.9 பில்லியன் ரூபாயை ஒருங்கிணைந்த வருவாயாகப் பதிவு செய்துள்ளது. இது கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 11.2% வருடாந்த (YoY) வளர்ச்சியாகும். சுகாதாரத் துறையின் தொடர்ச்சியான விரிவாக்கம், நுகர்வோர் துறையின் மேம்பட்ட வேகம் மற்றும் விவசாய வணிகத்தின் பலத்த பங்களிப்பு ஆகியவற்றின் மூலம் இந்த வளர்ச்சி சாத்தியமானது. சுகாதாரத் துறையில் ஏற்பட்ட குறிப்பிட்ட இலாப வரம்பு அழுத்தங்கள் காரணமாக […]

கடந்த ஒரு வருடத்தில் 71% நிறுவனங்கங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன: Sophos அறிக்கை

Sophos நிறுவனத்தின் 2026ஆம் ஆண்டு அறிக்கையின்படி, கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்ட நிறுவனங்களில் 71% நிறுவனங்கள் கடந்த ஆண்டில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பதிவாகிய Ransomware (தரவுப் பறிமுதல்) தாக்குதல்களில் 67% தாக்குதல்களுக்கு, நிறுவனங்களின் கணக்குகள் அல்லது அடையாளங்கள் திருடப்பட்டமையே பிரதான காரணமாக இருந்துள்ளது. ஊழியர்களின் தவறுகள் மற்றும் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன் கணினிக் கட்டமைப்புகளில் தானியங்கி முறையில் உருவாக்கப்படும் கணக்குகள் சரியாகக் கட்டுப்படுத்தப்படாமையே இதற்கு முக்கியக் காரணமாகும். இந்தத் தாக்குதல்கள் […]

தேசிய மின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பை விரைவுபடுத்தவும் இலங்கையின் மிகப்பெரிய மின்கல எரிசக்தி சேமிப்பு திட்டம் அங்குரார்ப்பணம்

இலங்கை முழுவதும் உள்ள 16 துணை மின் நிலையங்களில் மின்கல எரிசக்தி சேமிப்பு அமைப்புகளை (Battery Energy Storage Systems) நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது. நாட்டில் இதுவரை செயல்படுத்தப்படும் மிகப்பெரிய எரிசக்தி சேமிப்புத் திட்டமான இதன் மூலம், தேசிய மின் கட்டமைப்பு வலுவடைவதுடன், தூய்மையான மற்றும் பாதுகாப்பான எரிசக்தி அமைப்பொன்றை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மின்கல எரிசக்தி சேமிப்பு அமைப்பும் பகல் வேளையில் 40 மெகாவாட் மணித்தியாலம் மின்சாரத்தை சேமித்து வைப்பதற்கும், […]

140 ஆண்டுகால சுவைமிகு நினைவுகளுடன், இலங்கையில் 65ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் Coca-Cola

உலக மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பிடித்துள்ள Coca-Cola, வெறும் குளிர்பானம் என்ற வரம்பைத் தாண்டி, கடந்த 140 ஆண்டுகளாக நுகர்வோரின் பேராதரவைப் பெற்ற உலகளாவிய வர்த்தக நாமமாகத் திகழ்கிறது. கடந்த 1886 ஆம் ஆண்டு மே 8 ஆம் திகதி, அட்லாண்டாவில் உள்ள ‘ஜேக்கப்ஸ்’ (Jacobs) மருந்தகத்தில் டாக்டர் ஜோன் பெம்பர்டன் (Dr. John Pemberton) என்பவரால் முதன்முறையாக நுகர்வோருக்கு அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் இந்த Coca-Cola-வின் பயணம் ஆரம்பமானது. அந்த வகையில், இலங்கையிலும் பல தலைமுறைகளின் நம்பிக்கையை […]

இலங்கையில் பூனைகள் கைவிடப்படுவதைத் தடுக்க TikTok மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் CocoBunny Family

உங்களிடம் ஒரு செல்லப் பூனை இருந்தால், வீட்டில் உண்மையான பாஸ் (boss) யார் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். நள்ளிரவில் ஓடிப்பிடித்து விளையாடுவது, அதிகாலையிலேயே அசுத்தமான படுக்கைப் பெட்டியை சுத்தம் செய்ய வைப்பது என, அவை தங்களின் ராஜ்ஜியத்தை நம் வீடுகளில் நடத்துகின்றன. இத்தகைய குட்டிப் பூனைகளின் குறும்புத்தனங்களுக்கும் கோபங்களுக்கும் ஈடுகொடுத்து, நம் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அவற்றைச் சுற்றியே அமைத்துக் கொள்கிறோம். ஏனெனில், அவை வெறும் செல்லப்பிராணிகள் அல்ல் நம் வீட்டுப் பிள்ளைகள். இப்படிப்பட்ட பூனைகளின் மீதான […]

உலகப் பெருங்கடல் தினத்தை முன்னிட்டு விசேட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரத்தைக் கொண்டாடும் City of Dreams இன் “The Shoppes”

உலகப் பெருங்கடல் தினத்தை முன்னிட்டு, ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’ (City of Dreams Sri Lanka) இல் அமைந்துள்ள The Shoppes வணிக வளாகம், பெருங்கடல்களின் அழகு, அற்புதம் மற்றும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கில் விசேட வார இறுதி நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது. ஜூன் மாதத்தில் நடத்தப்படவுள்ள இந்த நெஞ்சைக் கவரும் நிகழ்வில் பங்கேற்குமாறு சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் கடல்சார் ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னணி கடல்சார் பாதுகாப்பு அமைப்பான ‘தி பேர்ல் […]

ஏழாவது ஆண்டாக உலகளாவிய Gaming Monitor சந்தையில் முதலிடத்தை தக்கவைத்து Samsung சாதனை

ஒவ்வொரு மில்லிசெக்கனும் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கும் தற்போதைய Gaming உலகில், Samsung Electronics நிறுவனம் தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. செயல்திறன், துல்லியம் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு பெயர் பெற்ற உலகளாவிய சந்தையில், Samsung தொடர்ந்து ஏழாவது ஆண்டாக உலகளவில் முதற்தர (No.1) Gaming Monitor வர்த்தக நாமமாக தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. சர்வதேச தரவு நிறுவனத்தின் (IDC) சமீபத்திய தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் உலகளாவிய Gaming Monitor வருவாய் சந்தையில் […]

லங்கா பிறீமியர் லீக் 2026: ஐந்து அணிகளின் நேரடி ஒப்பந்த வீரர்கள் விபரம் அறிவிப்பு

கொழும்பு, இலங்கை (மே 29, 2026): இலங்கையின் மிகப்பிரமாண்ட டி20 கிரிக்கெட் திருவிழாவான ‘லங்கா பிறீமியர் லீக் 2026’ (6ஆவது அத்தியாயம்) தொடருக்கான ஆரம்பகட்டப் பணிகள் சூடுபிடித்துள்ளன. இதன்படி, எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி திங்கட்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள உத்தியோகபூர்வ வீரர்கள் வரைவு (Player Draft) நிகழ்விற்கு முன்னதாகவே, முன்னணி உள்நாட்டு மற்றும் சர்வதேச நட்சத்திரங்கள் அடங்கிய நேரடி ஒப்பந்தப் பட்டியலை (Pre-signed Players) லங்கா பிறீமியர் லீக் தொடரின் நிர்வாகம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. ரசிகர்களால் பெரிதும் […]

லங்கா பிறீமியர் லீக் 2026 வீரர்கள் வரைவு நிகழ்ச்சி: விளையாட்டுத்துறை அமைச்சருக்கு IPG நிறுவனம் உத்தியோகபூர்வ அழைப்பு

இலங்கையின் முன்னணி பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரான ‘லங்கா பிறீமியர் லீக் (LPL) 2026’ தொடருக்கான ஆரம்பகட்டப் பணிகள் சூடுபிடித்துள்ளன. இதன் முக்கிய கட்டமாக, வீரர்களைத் தேர்வு செய்யும் ‘பிளேயர் டிராப்ட்’ (Player Draft) நிகழ்விற்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழை, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களிடம், ஐபிஜி (IPG) நிறுவனத்தின் ஸ்தாபகரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அனில் மோகன் அண்மையில் வழங்கினார். இலங்கையின் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் லங்கா […]