எயார்டெல் ரூ. 888 Freedom Plus Unlimited பெக்கேஜின் சலுகைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது

இலங்கை இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மொபைல் தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான Airtel Sri Lanka, தமது வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணத்திற்கு தொடர்ந்து மதிப்பு சேர்க்கும் வகையில், எயார்டெல் அதன் முற்கொடுப்பனவான ரூ. 888 Freedom Plus பெக்கேஜில் மூன்று பிரபலமான சமூக வலைத்தளங்களின் Appsகளைச் சேர்த்துள்ளது, இது அதிக மதிப்பு, சுதந்திரம் மற்றும் வரையறையற்ற அணுகலை வழங்குவதன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கை முழுவதும் வேகமாக அதிகரித்து வரும் வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப, விஸ்தரிக்கப்பட்ட 888 பெக்கேஜ் […]
இளைஞர் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக Family Pairing அம்சத்தை மேம்படுத்தும் TikTok

குறும் வீடியோக்களுக்கான முன்னணி தளமான TikTok, அதன் இளைஞர் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இரண்டு முக்கிய முயற்சிகள் குறித்து அறிவித்துள்ளது. பெற்றோர்கள் மற்றும் வயது வந்தவர்களின் மதிப்புமிக்க கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக, TikTok அதன் உள்ளடக்க Filter செய்யும் திறன்களை Family Pairingக்குள் விரிவுபடுத்தியுள்ளது. இந்தப் புதிய அம்சம் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் Appஐ பயன்படுத்தும் போது தங்கள் குழந்தைகள் உலாவும் உள்ளடக்கத்தை மேலும் தனிப்பயனாக்க உதவுகிறது. உள்ளடக்க Filter கருவியைப் […]
காணி கட்டட சொத்து முதலீட்டுக்கு சிறந்த நிதியுதவியை வழங்குவதற்கு Home Lands Holding உடன் இணையும் HNB

ரியல் எஸ்டேட் துறையை புத்துயிர் பெறச் செய்யும் முயற்சியில், இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, எதிர்கால வீட்டு உரிமையாளர்களுக்கு தங்களுடைய சொந்த காணி கட்டடங்களுக்காக முதலீடு செய்வதற்கு சிறந்த நிதித் தீர்வுகளை வழங்குவதற்காக ரியல் எஸ்டேட் நிறுவனமான Home Land Holdings இன் உத்தியோகபூர்வ வங்கிப் பங்காளியாக கையொப்பமிட்டுள்ளது. Home Landsஇன் விரிவான கோப்புறை முழுவதிலுமுள்ள காணி நிலங்களுக்கும் இந்த ஊக்குவிப்பு நடவடிக்கை பொருந்தும். பத்தரமுல்லையில் உள்ள Home Lands தலைமை அலுவலகத்தில் […]
இலங்கையில் தாதியர் கல்வியை மேம்படுத்துவதில் முன்னணி வகிக்கும் ICBT உடன் கைகோர்க்கும் நவலோக குழுமம்s

இலங்கையின் முன்னணி தனியார் சுகாதார சேவை வழங்குநரான நவலோக மருத்துவமனை குழுமம், மேம்பட்ட கல்வி வாய்ப்புகளுடன் தாதியர் நிபுணர்களை மேம்படுத்துவதற்காக ICBTயுடன் கைகோர்த்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் கடந்த மே 11ஆம் திகதி அன்று ICBT மேற்படிப்பு கல்வியகத்தின் தலைவர் மற்றும் பிரதி பொது முகாமையாளர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றில் கைச்சாத்திட்டனர். இந்த கூட்டாண்மை மூலம், நவ்லோக்க மருத்துவமனை செவிலியர்கள் ஐக்கிய இராச்சியத்தின் புகழ்பெற்ற சந்தர்லேண்ட் பல்கலைக்கழகம் வழங்கும் B’Sc (Hon.) பட்டப்படிப்பை ஆரம்பிக்க […]
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அண்மைய மின் கட்டணத் திருத்தங்களை வரவேற்கிறது JAAF

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் (PUCSL) ஜூலை – டிசம்பர் காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத்தில் அண்மையில் செய்யப்பட்ட திருத்தங்களை கூட்டு ஆடைகள் சங்கங்களின் மன்றம் (JAAF) வரவேற்றுள்ளது. 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மற்றும் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டணத் திருத்தங்கள் தொழிற்துறை சமர்ப்பிப்புகள் போன்ற விடயங்களை கவனத்தில் கொள்ளாமல், நெரிசல் இல்லாத (Off-peak) நேரங்களில் தொழிற்துறை மின்சாரக் கட்டணங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதனால் செயற்பாட்டுச் செலவுகள் முக்கியமாக அதிகரித்ததால், நெரிசல் இல்லாத (Off-peak) நேரங்களில் வேலையின்மை […]
பேண்தகைமை அபிவிருத்திக்கான ஒன்றுகூடல்: தோட்டத் தொழில் துறைக்கான முதலாவது Global Plantation Summitஐ நடத்தும் ஹெய்லிஸ்

முற்போக்கான தோட்ட முகாமைத்துவத்தில் இலங்கையின் முன்னோடிகளான ஹேலிஸ் பிளான்டேஷன்ஸ், ஆரம்ப சர்வதேச பேண்தகைமை உச்சி மாநாட்டை ஆரம்பித்துள்ளதாக அறிவித்தது – எதிர்வரும் காலங்களில் இது உள்ளூர் மற்றும் உலகளாவிய நிபுணர்களை ஒன்றிணைத்து அவர்களின் நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்வதற்கும், தோட்டத் தொழிலை மறுவடிவமைக்கும் ஆற்றலுடன் கூடிய அதிநவீன புத்தாக்கங்களை வெளிப்படுத்துவதற்கும் ஆகும். புத்திஜீவிகள், அரசு மற்றும் அரசு சாரா அதிகாரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றை ஒன்றிணைத்து, இந்த மாநாடு 21 ஜூலை 2023 அன்று நடைபெறும். இந்த மாநாடு ‘நிலையான […]
இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவராக பிரதாபன் மயில்வாகனம் நியமிக்கப்பட்டுள்ளார்

இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனத்தின் (SLCPI) 62 ஆவது வருடாந்த பொதுக் கூட்டம் ஜூன் 23 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது. உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களை உள்ளடக்கிய நாட்டிலுள்ள தனியார் மருந்து சந்தையில் 80% க்கும் அதிகமான பங்கைக் கொண்ட 60க்கும் மேற்பட்ட உறுப்பு நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட அமைப்பாகச் சேவையாற்றிவருவதுடன் மதிப்புமிக்க கறையற்ற வரலாற்றைக் கொண்டுள்ளது. 2022/2023 ஆம் ஆண்டிற்கான சம்மேளனத்தின் தலைவராக பிரதாபன் மயில்வாகனத்தை சபை ஏகமனதாகத் தேர்ந்தெடுத்தது. Emerchemie […]
சுவ அரண: இலங்கையின் முதலாவது குழந்தைநல நோய் அறிகுறி சிகிச்சை நிலையம் மஹரகமவில் அங்குரார்ப்பணம்

இலங்கையின் முதலாவது குழந்தைநல நோய் அறிகுறி சிகிச்சை நிலையமான சுவ அரண புற்றுநோயுடன் கூடிய குழந்தை நோயாளிகளுக்காக கதவுகளை அகலத் திறக்கிறது. இந்த முன்னோடித் திட்டம் சுகமளிப்பதற்கான ஸ்தலமாக இருக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டதாகும். இது இலங்கையில் புற்றுநோயுடன் கூடிய குழந்தை நோயாளிகளுக்கு பிள்ளைகளுக்கு உடல்ரீதியான, உணர்வுரீதியான, உளவியல்ரீதியான சிகிச்சைகளை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, உதவியுடனான பராமரிப்புச் சூழலை முழுமையாகக் கொண்டு வருவதற்குரிய குழந்தைநல நோய் அறிகுறி சிகிச்சை இடப்பரப்பிற்குரிய தேவையை பூர்த்தி செய்கிறது. ‘சுவ அரண’வின் […]
புதிய சுற்றுச்சூழல் நடவடிக்கையை மேற்கொள்வதாக அறிவிக்கும் Samsung Electronics

Samsung Electronics அண்மையில் தனது புதிய சுற்றுச்சூழல் செயற்பாடு குறித்து அறிவித்துள்ளது, இது காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான உலகளாவிய முயற்சிகளுடன் இணைவதற்கான ஒரு விரிவான முயற்சியாகும். நிறுவன அளவிலான நிகர பூஜ்ஜிய கார்பன் வெளியேற்றத்தை மேற்கொள்வதற்கான உறுதிப்பாடுகள் மற்றும் அதிக புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான திட்டங்கள், அத்துடன் ஆற்றல் திறன் கொண்ட தயாரிப்புகளை உருவாக்க புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து ஆராய்ச்சி செய்தல், நீர் மறுபயன்பாடு மற்றும் கார்பன் பிடிப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும். 2030 […]
Coca-Cola Beverages Sri Lanka மற்றும் Uber Eats Sri Lanka இணைந்து “Ride for Recycling” திட்டத்தை ஆரம்பித்துள்ளன

Coca-Cola Beverages Sri Lanka Limited (CCBSL) மற்றும் Uber Eats ஆகியன பிளாஸ்டிக் கழிவுகளை பொறுப்புடன் அகற்றுவதற்காக ‘Ride for Recycling’ என்ற தனித்துவமான வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளன. இந்த திட்டத்தின் மூலம் பொதி விநியோகச் சேவை (Courier Partners) பங்காளிகள் கொழும்பில் உள்ள வீடுகள் மற்றும் உணவகங்களில் இருந்து நேரடியாக PET பிளாஸ்டிக்கை சேகரிக்க முடியும். உலக சுற்றுச்சூழல் தினம் 2023 மற்றும் அதன் தொனிப்பொருளான “பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கான தீர்வுகள்” என்ற அடிப்படையில் இந்த […]