GSCS இன்டர்நேஷனல் மற்றும் JAAF இணைந்து, உலகளாவிய மாற்றத்திற்கான நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது

Share

Share

Share

Share

GSCS International Ltd, உலகெங்கிலும் உள்ள 35 க்கும் மேற்பட்ட நாடுகளில் சான்றிதழ், மதிப்பீடு, தணிக்கை, சரிபார்ப்பு, ஆய்வு ஆகியவற்றிற்கான திறனை உருவாக்குகிறது, அந்த நாடுகளுக்கு நடைமுறையான, நிலையான மற்றும் நீண்டகால தாக்கத்தை மேம்படுத்துவதற்காக செயல்படுகிறது. SustainSphere 2.0 நிகழ்ச்சியானது GSCS International – Sri Lanka ஆல் இலங்கையில் ஆடைத் தொழிலை புதுமைப்படுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆடைத் தொழில்துறையின் நிலையான வளர்ச்சியின் எதிர்காலம் குறித்து கலந்துரையாடப்பட்ட இந்நிகழ்வில், கல்வி நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், வர்த்தக சங்கங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பல்வேறு வாடிக்கையாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆர்வமுள்ள பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முதலாவது சிறப்புரையை மொரட்டுவ பல்கலைக்கழக வசதிகள் முகாமைத்துவப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஹர்ஷினி மல்லவராச்சி நிகழ்த்தினார். நிகர பூஜ்ஜிய ஆடைகளை உற்பத்தி செய்வதற்கான ஒரு வழியாக மறைமுக பொருளாதாரம் பற்றிய கருத்துக்களை அவர் அங்கு சேர்த்தார்.

இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் திரு. அடீல் காசிம் அவர்கள் இரண்டாவது முக்கிய உரையை இங்கு நிகழ்த்தினார். இலங்கையின் பார்வைக்கான புத்தாக்கமான அணுகுமுறைகள், எதிர்கால போக்குகள் மற்றும் சமூகம் மற்றும் தொழிலாளர்கள் தொடர்பான சமீபத்திய சீர்திருத்தங்கள் குறித்து அவர் வலியுறுத்தினார்.

முக்கிய உரைகளுக்குப் பிறகு, GSCS International Ltdஇன் முகாமைத்துவப் பணிப்பாளர் அப்துல் மொடலேப் நடத்திய குழு விவாதத்தில், தொழில்களுக்கு சுற்றுச்சூழல் நட்பு முறையில் நிலையான உத்திகளை பின்பற்றுவதன் தாக்கம் மற்றும் புத்தாக்கங்களின் மூலம் நிலைத்தன்மையை எவ்வாறு பராமரிக்கலாம் என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும், இலங்கை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு பிரதிப் பணிப்பாளர் நாயகம் என்.எஸ். திரு. கமகே, ஹைட்ராமணி குழுமத்தின் நிலைத்தன்மையின் பொது முகாமையாளர் திருமதி லியோனி வாஸ், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கலாநிதி ஹர்ஷினி மல்லவாரச்சி மற்றும் ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் பொதுச் செயலாளர் திரு. யொஹான் லோரன்ஸ் ஆகியோர் பல்வேறு துறைகளில் நிலைத்தன்மையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் கருத்துக்களை முன்வைத்தனர்.

SustainSphere 2.0 திட்டம் அனைத்துத் தொழில்களிலும் நிலைத்தன்மையை ஒரு அடிப்படைத் தேவையாக மாற்றுவதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று GSCS நம்புகிறது. ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் நன்கு பொருந்தக்கூடிய இந்தத் திட்டம், உலகளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட எதிர்காலத் திட்டமாகவும் கருதப்படலாம்.

GSCS தொழிலாளர் மற்றும் மனித உரிமைகள் தணிக்கை, தயாரிப்பு சான்றிதழ், சுற்றுச்சூழல் மதிப்பீடுகள் மற்றும் மறைமுக பொருளாதார வாய்ப்புகள் போன்ற பகுதிகளில் தொழில்முறை சான்றிதழ் சேவைகளை வழங்குகிறது. தேசிய மற்றும் சர்வதேச தரங்களுக்கு இணங்குவதால், தொழில்கள் முழுவதும் உள்ள நிறுவனங்களுக்கு நிலையான வளர்ச்சியின் சிரமங்களை சமாளிக்க பங்களிக்கும் GSCS, உலக சந்தையில் அதன் போட்டித்தன்மை மற்றும் இணக்கத்தை நிலைநாட்ட உதவுகிறது.

இங்கு பேசிய ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் பொதுச் செயலாளர் திரு. யொஹான் லோரன்ஸ், நீடித்து நிலைக்க வழிவகுக்கும் ஆடைத் தொழிலில் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். சுற்றுச்சூழல் நட்பு மற்றும் நெறிமுறை சார்ந்த தயாரிப்புகளுக்கான வளர்ந்து வரும் உலகளாவிய சந்தை தேவையுடன் போட்டியிட நிலையான நடைமுறைகள் அவசியம் என்று அவர் கூறினார். இலங்கையின் ஆடைத் துறையானது நீண்டகாலமாக அதன் உயர் தரத்திற்கு அங்கீகாரம் பெற்றுள்ளதாகவும், விநியோகச் சங்கிலிகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கும், நிலையான இலக்குகளை அடைவதற்காக புத்தாக்கமான தீர்வுகளை மேற்கொள்வதற்கும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் திரு. லோரன்ஸ் சுட்டிக்காட்டினார்.

SustainSphere 2.0 போன்ற திட்டங்களின் மூலம் GSCS தொடர்ந்து தனது முயற்சிகளை முன்னெடுத்து வருவதால், நிலைத்தன்மையின் மூலம் புத்தாக்கங்களைத் தேடுவது எதிர்காலத்தில் ஒரு முக்கிய காரணியாக இருக்கும்.

AIஐ அடிப்படையாகக் கொண்ட நவ்லோகா மருத்துவமனை...
GSCS இன்டர்நேஷனல் மற்றும் JAAF இணைந்து,...
இந்த ஆண்டும் உலக சிறுவர் தினத்தைக்...
ජෝන් කීල්ස් සමාගම, කාමර 687කින්...
687 அறைகள் கொண்ட Cinnamon Life...
Kaspersky 2024 இன் முதல் பாதியில்...
Mahindra Ideal Finance හි නව...
Mahindra Ideal Finance appoints Mufaddal...
Kaspersky 2024 இன் முதல் பாதியில்...
Mahindra Ideal Finance හි නව...
Mahindra Ideal Finance appoints Mufaddal...
மஹிந்திரா ஐடியல் ஃபைனான்ஸின் புதிய முகாமைத்துவப்...