Selenia Dimens mammography அமைப்புடன் நவீன மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் தொழில்நுட்பத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் Hemas

Share

Share

Share

Share

இலங்கையிலுள்ள பெண்களிடையே மார்பகப் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு பிரதிபலிக்கும் வகையில், இலங்கையின் முன்னணி தனியார் மருத்துவமனை சேவை வலையமைப்பான ஹேமாஸ் மருத்துவமனை குழுமம், அண்மையில் இலங்கைக்கு Selenia Dimensions mammography தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் இலங்கையிலுள்ள பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் நிலைமைகளை மிகத் துல்லியமாக முன்கூட்டியே கண்டறிய முடியும் என்பதுடன், மார்பகப் புற்றுநோயிலிருந்து முழுமையாக விடுபடுவதற்கு அல்லது அதனை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்துவதற்கு இது வாய்ப்பளிக்கும்.

புற்றுநோய் மனித மரணத்திற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது மற்றும் தரவுகளின்படி, மார்பக புற்றுநோயானது பெண்களிடையே மிகவும் பொதுவான வகை புற்றுநோயாகும். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, 2020 இல் இலங்கையில் பதிவான மொத்த புற்றுநோயாளிகளில் 13.4% மார்பக புற்றுநோயாளிகள், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களில் 25.7% பேர் மார்பக புற்றுநோயாளிகள் மற்றும் 2020இல் மொத்த மார்பக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 3,975 ஆக இருந்தது. இலங்கையில் அத்தியாவசிய வசதிகள் இல்லாமை மற்றும் மார்பக புற்றுநோய் பற்றிய அறியாமை காரணமாக, நாட்டில் மார்பக புற்றுநோயாளிகளின் இறப்பு விகிதம் 42.5% ஆக உயர்ந்துள்ளது.

உலகளவில், 2020 ஆம் ஆண்டில் 2.26 மில்லியனுக்கும் அதிகமான மார்பக புற்றுநோய்கள் பதிவாகியுள்ளன, இது உலகளவில் பதிவான அனைத்து புற்றுநோய்களில் 12.5% ​​ஆகும். மார்பக புற்றுநோயானது பெண்களில் மிகவும் பொதுவான புற்றுநோயாகும் மற்றும் ஒட்டுமொத்தமாக மிகவும் பொதுவான புற்றுநோயாக இருக்கலாம்.

மேலும், உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, மார்பக புற்றுநோயால் 30.3% இறப்பு விகிதம் உள்ளதுடன் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்கொள்ளும் ஆபத்து, இது பெண்களிடையே பதிவாகும் அனைத்து புற்றுநோய்களிலும் 25.8% ஆகும்.

பெரும்பாலான வளர்ந்த நாடுகளில், மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிப்பது மேம்பட்ட நிலையில் உள்ளது. நாட்டில் மார்பகப் புற்றுநோயின் வளர்ச்சியைக் காட்டும் இலங்கையில் நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான தொழில்நுட்பம் போதுமானதாக இல்லாததால் சுகாதாரத்துறை ஒரு சவாலை எதிர்கொண்டுள்ளது.

தனது தேசிய பொறுப்பை அங்கீகரித்துள்ள தனியார் துறை மருத்துவமனை குழுவாக, வத்தளை ஹேமாஸ் மருத்துவமனை சாதகமான தீர்வை வழங்குவதன் மூலம் 2023 மார்ச் 23 அன்று தனது சமீபத்திய மேமோகிராம் முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இது மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதில் தேசிய பங்களிப்பைச் செய்ய அவர்களுக்கு உதவியது. ஹேமாஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் நிறைவேற்று பணிப்பாளருமான திருமதி கஸ்தூரி செல்வராஜா வில்சன் தலைமையில் இந்த சமீபத்திய மேமோகிராம் இயந்திரத்தின் நோய் கண்டறிதல் சிகிச்சை முறை ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய ஹேமாஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் நிறைவேற்று பணிப்பாளருமான திருமதி கஸ்தூரி செல்வராஜா வில்சன், ஹேமாஸ் மருத்துவமனை குழுமத்திற்கு ஆர்என்ஏ 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த நவீன மேமோகிராம் இயந்திரத்தை அறிமுகம் செய்திருப்பது நிச்சயமாக மற்றொரு அழியாத மைல்கல் என்று சொல்லலாம். பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஹேமாஸ் மருத்துவமனை குழுமத்தின் முயற்சிகள். இந்த இயந்திரத்தின் மாதிரிகளை பரிசோதிக்கும் திறனின் காரணமாக, மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து ஆரம்ப நிலையிலேயே சிகிச்சையை ஆரம்பிக்க முடியும். எனவே, உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து, சரியான நேரத்தில் மேமோகிராம் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம், மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, ஆரம்ப நிலையிலேயே சிகிச்சையைத் தொடங்கி, இந்நிலையிலிருந்து முற்றிலும் விடுபட, ஒட்டுமொத்த பெண் சமூகத்தையும் கேட்டுக்கொள்கிறோம்.” என தெரிவித்தார்.

இலங்கை புதிய சந்தை வாய்ப்புகளை 15...
2025 ஆம் ஆண்டு மே மாத...
කොකා-කෝලා බෙවරේජස් ශ්‍රී ලංකා ආපසු...
TikTok හරහා රසවත් ආහාර සංස්කෘතියක...
BPPL Holdings PLC completes the...
Cinnamon Life සූප ශාස්ත්‍ර ක්ෂේත්‍රයේ...
சமையல் கலைத் துறையில் புது வரலாறு...
50 சதவீத நிறுவனங்கள் ransomware தாக்குதலுக்கு...
Cinnamon Life සූප ශාස්ත්‍ර ක්ෂේත්‍රයේ...
சமையல் கலைத் துறையில் புது வரலாறு...
50 சதவீத நிறுவனங்கள் ransomware தாக்குதலுக்கு...
සමාගම්වලින් අඩකඩ වැඩි ප්‍රමාණයක් ඩොලර්...