SVATஐ ரத்து செய்ய அரசு எடுத்துள்ள முடிவுக்கு JAAF வரவேற்பு

Share

Share

Share

Share

01 ஏப்ரல் 2025 வரை எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி கூட்டப்பட்ட வரி (SVAT) ஒழிப்பை ஒத்திவைக்க அண்மையில் அமைச்சரவை எடுத்த முடிவிற்கு ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) தனது வரவேற்பைத் தெரிவித்துள்ளது. SVAT ஒழிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு முன் “வலுவான வரி திரும்பப்பெறும் பொறிமுறையை” நிறுவுவதை உறுதி செய்வதற்கான முடிவை JAAF குறிப்பாகப் பாராட்டியுள்ளது. தொழில்துறையைப் பாதுகாக்க பல்வேறு தரப்பினர் எவ்வளவு கடினமாக உழைத்துள்ளனர் என்பதை இந்த முடிவு காட்டுகிறது மற்றும் அவர்களின் முயற்சிகளுக்காக JAAF அவர்களையும் பாராட்டியுள்ளது.

ஆடை ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி குறைந்து நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த ஒத்திவைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, முறையான பணத்தைத் திரும்பப்பெறும் வழிமுறை இல்லாமல் SVATஐ அகற்றுவது அவர்களின் பணப்புழக்கத்திற்கு இடையூறு ஏற்படும் சாத்தியக்கூறு உள்ளது. எனவே இந்த ஒத்திவைப்பு அவர்களுக்கு அந்த ஆபத்தைத் தவிர்க்க உதவுகிறது.

SVAT முறையை ஒழிப்பதற்கான பொருத்தமான நடவடிக்கையாக வலுவான வரி திரும்பப்பெறும் பொறிமுறையை நிறுவும் வரை முறையான அணுகுமுறை தேவை என்று ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

“இந்த ஒத்திவைப்பு புதிய வரி முறைக்கு மாற்றத்தை எளிதாக்குவதன் மூலம் எங்கள் தொழில்துறைக்கு முக்கியமான ஒத்துழைப்புக்களை வழங்குகிறது. தொழில் தொடர்ந்து வளர்ச்சியடைவதையும் செழிப்புடன் இருப்பதையும் உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.” என JAAF வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

2025 நான்காம் காலாண்டில் 13 வயதிற்குட்பட்டவர்களின்...
தொடர்ச்சியாக 20ஆவது ஆண்டாகவும் உலகின் முதற்தர...
කොකා-කෝලා පදනම සහ හේලීස් වැවිලි...
සම්ප්‍රදාය සහ නවීනත්වය එක්තැන් කළ...
Jazz Powers 1,000 Telecom Sites...
5G-A மற்றும் 6G தொழில்நுட்பத்தில் புதிய...
LankaPay Technnovation Awards 2026 හිදී...
BYD ශ්‍රී ලංකාව තුළ වාහන...
5G-A மற்றும் 6G தொழில்நுட்பத்தில் புதிய...
LankaPay Technnovation Awards 2026 හිදී...
BYD ශ්‍රී ලංකාව තුළ වාහන...
TikTok releases Q4 2025 Community...