SVAT ஒழிப்பை அவசரமாக மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை அரசை வலியுறுத்துகிறது JAAF

Share

Share

Share

Share

எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி கூட்டப்பட்ட வரி (SVAT) முறை ஒழிக்கப்படுவதற்கான காலக்கெடு 1 ஏப்ரல் 2025 அன்று முடிவடையும் நிலையில், இலங்கை ஆடைத் தொழிலின் உச்ச அமைப்பான ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF), தொழில்துறையில் அதிகரித்து வரும் அழுத்தங்களைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவை அரசு அவசரமாக மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.

“உலகளாவிய சந்தையில் ஆடைத் துறை தற்போது கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இதன் தாக்கம் ஏற்றுமதி அளவு குறைந்து வருவதில் தெளிவாக தெரிகிறது. இத்தகைய சூழலில், சாத்தியமான மற்றும் திறமையான பணத்தைத் திரும்பப் பெறும் வழிமுறையை முதலில் உருவாக்காமல், SVATஐ நீக்குவது, நாட்டின் மொத்த ஏற்றுமதிப் பட்டியலில் சுமார் பாதி பங்களிப்பைக் கொண்டிருக்கும் ஆடைத் தொழில் உட்பட அனைத்து ஏற்றுமதியாளர்களின் பணப்புழக்கத்தையும் பெரிதும் பாதிக்கும். இந்தக் கொள்கையை மறுபரிசீலனை செய்யத் தவறினால், இந்தத் துறையில் நிதி நெருக்கடியை நிச்சயம் அதிகரிக்கும். மேலும், மிகவும் திறமையான அமைப்புகளிலும், பணம் திரும்பப் பெறும் செயல்முறைகளில் தவிர்க்க முடியாமல் சிக்கிக்கொள்ளும் என்பதால், இலங்கையின் ஏற்றுமதிப் போட்டித்தன்மையை மேலும் பாதிக்கும்.” என JAAFஇன் SME துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பந்துல பெர்னாண்டோ தெரிவித்தார்.

“செல்லுபடியாகும் VAT பணத்தைத் திரும்பப் பெறுவதை கணிசமாக விரைவுபடுத்துவதாக” (Significantly speed up valid VAT refunds) அதிகாரிகள் உறுதியளித்திருந்தாலும், பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான நேரத்தில் இதுவரை எந்த அளவிடக்கூடிய முன்னேற்றமும் இல்லை என்று ஆடைத் தொழில் அதன் நிலைப்பாட்டைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. செல்லுபடியாகும் VAT பணத்தைத் திரும்பப் பெறுவதை விரைவுபடுத்துவதில் எந்த உறுதியான முன்னேற்றமும் இல்லாத நிலையில், SVAT திட்டத்தை ரத்துச் செய்வதற்ககான எந்தவொரு முடிவும் விபரீத விளைவை ஏற்படுத்தும், குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் (SME) துறைக்கு இது பொருந்தும் என்று பெர்னாண்டோ தெரிவித்தார்.

“SME துறை தற்போது கடுமையாகப் போராடி வருகிறது. SVAT அமைப்பு நீக்கப்பட்டால் SME துறையின் பணப்புழக்கத்தில் பெரும் சுமையாக இருக்கும். 45 நாட்களுக்குள் பணத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று சட்டம் இருந்தபோதிலும், 2010 ஆம் ஆண்டு வரையிலான நிலுவையில் உள்ள VAT பணத்தை ஏற்றுமதியாளர்கள் பெற வேண்டியுள்ளது. மேலும், இந்த தாமதமான பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு எந்த வட்டியும் வழங்கப்படுவதில்லை. அந்த நேரத்தில், இலங்கை ரூபாய் அதன் மொத்த மதிப்பில் 69% இழந்துள்ளது. இத்தகைய திறமையின்மைகள் SME ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு கடக்க முடியாத தடைகளை உருவாக்கும், பெரிய நிறுவனங்களுக்கும் கூட பணப்புழக்கத்தை கடுமையாக பாதிக்கும்,” என அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், JAAF பொதுச் செயலாளர் யொஹான் லோரன்ஸ், IMF திட்டத்தின் ஒரு பகுதியாக அரசாங்கத்தின் வருவாய் இலக்குகளை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியத்தை JAAF மற்றும் அதன் உறுப்பினர்கள் அங்கீகரித்து பாராட்டுவதாக வலியுறுத்தினார். இருப்பினும், SVAT திட்டத்தை நீக்குவதற்கான முடிவு துரதிர்ஷ்டவசமாக இரண்டு தவறான அனுமானங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அதாவது: தற்போதைய அமைப்பு வருவாய் அரிப்பை உருவாக்குகிறது மற்றும் SVAT நீக்கம் அரசின் வருவாய் வசூலை அதிகரிக்கும் என்பதே அந்த அனுமானங்கள்.

“SVAT அமைப்பு, ஆடை உற்பத்திக்கான இடைநிலை பொருட்களை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் முறையான ஆடைத் துறையின் விஷயத்தில் இந்தக் கூற்று உறுதிப்படுத்தப்படவில்லை. தொழில்துறை பின்தங்கிய ஒருங்கிணைப்பு பயணத்தில் உள்ளது. மூலப்பொருட்களின் விநியோகம் இறக்குமதியிலிருந்து உள்ளூர் உற்பத்திக்கு மாறிவிட்டது. SVAT அமைப்பை அகற்றுவது இந்தப் போக்கை மாற்றியமைத்து, அதிக இறக்குமதிகளுக்கு வழிவகுக்கும்,” என்று லோரன்ஸ் எச்சரித்தார்.

தொழில்துறை நிபுணர்களின் கூற்றுப்படி, SVATஐ ரத்துச் செய்வதன் முதன்மை விளைவு, ஏற்றுமதியாளர்கள் மற்றும் உள்நாட்டு வருவாய் துறை (IRD) இடையே அதிகரித்த பணப்புழக்கமாக இருக்கும், வருவாய் அதிகரிப்பு அல்ல. SVATக்கு முன் VAT பணத்தைத் திரும்பப் பெறுவதில் இலங்கையின் வரலாறு குறிப்பிடத்தக்க தாமதங்களால் குறிக்கப்பட்டது. 18 மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக, ஏற்றுமதியாளர்களுக்கு குறிப்பிடத்தக்க நிதி நெருக்கடிகள் ஏற்பட்டன.

வரலாற்று ரீதியாக, VAT பணத்தைத் திரும்பப் பெறும் அமைப்புகள், குறிப்பாக ஏற்றுமதி அல்லாத துறைகளில், மோசடிக்கு ஆளாகின்றன. SVAT அமைப்பு துஷ்பிரயோகத்திற்கான வாய்ப்பைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த அபாயத்தை திறம்பட குறைக்கிறது. SVATஐப் பயன்படுத்தி ஏற்றுமதிப் பொருட்களாக மாற்றுவதற்கு உள்ளூர் உள்ளீடுகளை வாங்கும் ஏற்றுமதியாளர்களுக்கு உள்ளூர் விற்பனை குறைவாக இருப்பதால், சாத்தியமான தவறான பயன்பாடு குறைகிறது. மாறாக, வவுச்சர் அடிப்படையிலான SVAT அமைப்புடன் ஒப்பிடும்போது, திறமையற்ற கட்டணம் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறும் அமைப்பில் மோசடிக்கான வாய்ப்பு கணிசமாக அதிகமாக உள்ளது.

மேலும், VAT பணத்தைத் திரும்பப் பெறும் முறையை மீண்டும் அறிமுகப்படுத்துவது, ஆடை ஏற்றுமதியாளர்கள் உள்நாட்டில் வாங்குவதற்குப் பதிலாக மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய வழிவகுக்கிறது. இந்த மாற்றம் பணப்புழக்கத்தை பாதிப்பது மட்டுமல்லாமல், இறக்குமதியை அதிகரிக்கும். உள்நாட்டு மதிப்பு கூட்டுவதற்கான ஊக்கத்தையும் குறைக்கும். இது வர்த்தக சமநிலையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

SVATஇன் கீழ், ஆடை ஏற்றுமதியாளர்கள் VATக்கான உடனடி பண வெளியேற்றம் இல்லாமல் உள்ளூர் மூலப்பொருட்களை வாங்க முடியும், இது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. திறமையற்ற பணத்தைத் திரும்பப் பெறும் அமைப்பு மூலம், உள்ளூர் பொருட்களை வாங்குவதற்கான ஊக்கத்தொகை குறைகிறது. இத்தகைய சூழ்நிலை இறுதியில் இலங்கையின் ஆடைத் தொழில் வழங்கும் தனித்துவமான செங்குத்து ஒருங்கிணைப்பு நன்மைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும். இது துறையின் நம்பகத்தன்மை மற்றும் அது ஆதரிக்கும் வேலைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம்.

“VAT பணத்தைத் திரும்பப் பெறும் முறையை மீண்டும் அறிமுகப்படுத்துவது, தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் மதிப்பீடுகளுக்கு உள்நாட்டு வருவாய் துறையிடமிருந்து (IRD) கணிசமான வளங்களை கோரும். இது நிர்வாக செலவுகள் அதிகரிப்பதற்கும், விலைமதிப்பற்ற வளங்கள் தவறாக ஒதுக்கப்படுவதற்கும் வழிவகுக்கும். IRD மற்றும் தொழில் துறை இரண்டின் மீதும் மேலதிக சுமை தேவையற்றது மற்றும் எதிர்மறையானது,” என்று லோரன்ஸ் மேலும் கூறினார்.

 

Sri Lanka Unlocks New Market...
Sampath Bank Launches Priority Reserve...
2025 වසරේ මැයි මස අපනයන...
Shantha Bandara Appointed President at...
கண்கவர் திருமண கனவுகளை நனவாக்க Weddings...
Capital Trust named one of...
Dankotuwa Porcelain partners Kiros Hospitality...
Samsung Reinforces Commitment to Smart...
Capital Trust named one of...
Dankotuwa Porcelain partners Kiros Hospitality...
Samsung Reinforces Commitment to Smart...
ශ්‍රී ලංකාව තුළ සිය ප්‍රවේශය...