ஊடகவியலாளர் சந்திப்பு 2024 மே 29 கொழும்பு Institute of Chartered Financial Analyst ஏற்பாடு செய்த Capital Excellence Awards நிகழ்வு 18 ஜூன் 2024 அன்று நடைபெறும்

Share

Share

Share

Share

இலங்கை மூலதனச் சந்தையில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள Institute of Chartered Financial Analyst நிறுவனம் (CFA) ஏற்பாடு செய்துள்ள Capital Excellence Awards நிகழ்வு எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உள்ளூர் மூலதனச் சந்தையின் சிறப்பை மதிப்பிடுவதற்காக 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தனித்துவமான விருது வழங்கும் நிகழ்வின் 11ஆம் கட்டம் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது.

‘அரச-தனியார் உறவின் பலம்’ என்ற தொனிப்பொருளில், இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வு இலங்கையின் தற்போதைய அரச-தனியார் கூட்டுறவின் நிலை மற்றும் அவற்றின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்தியுள்ளது. மேலும், இந்த தொனிப்பொருளின் அடிப்படையிலான கலந்துரையாடலின் மூலம், அரச-தனியார் கூட்டாண்மையின் கடந்த கால அனுபவங்கள், தனியார் துறையின் பங்கு மற்றும் பிராந்திய முன்னோக்குகள் மூலம் அறிவைப் பெற நிதி ஆய்வாளர்கள் நிறுவனம் நம்புகிறது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த Chartered Financial Analysts நிறுவனத்தின் இலங்கைக்கான தலைவர் திரு அருண பெரேரா கருத்துத் தெரிவிக்கையில்,“நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு துறைகளில் திறமையான நிபுணர்கள் அதிக அளவில் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதையும், இந்தத் துறையில் திறன்களில் பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது. இத்துறையில் புதிதாக வருபவர்களுக்கு ஆராய்ச்சித் துறையில் ஏற்படும் நுட்பமான மாற்றங்களைப் புரிந்துகொள்வதற்கும், எதிர்பார்க்கப்படும் உயர்நிலை ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் தேவையான பயிற்சிகள் கிடைக்காததற்கு இதுவே காரணம். எனவே, இந்த புதிய ஆராய்ச்சி திறன்களை மேம்படுத்துவதற்கும், ஆராய்ச்சியின் தரத்தை அதிகரிப்பதற்கும் நாமும் முழுத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த Capital Excellence Awards அவர்களின் வளர்ச்சியில் ஒரு பெரிய மைல்கல்லைக் குறிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என தெரிவித்தார்.

பங்கு தரகர்கள், பகுப்பாய்வாளர்கள், Chartered Financial Analysts நிறுவனத்தின் நிபுணர்கள், பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சிரேஷ்ட முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் போன்ற தொழில்துறையின் பல்வேறு துறைகளை ஒன்றிணைக்கும் இந்த விருது வழங்கும் நிகழ்வு, தொழில்துறையின் சிறப்பையும் முதலீட்டு ஆராய்ச்சி நிலைமைகளையும் உயர்த்துவதற்கு ஒரு காரணமாக இருக்கும்.

இந்த விருது வழங்கும் நிகழ்வில், சிறந்த ஆராய்ச்சி குழு, சிறந்த ஆராய்ச்சி அறிக்கை, சிறந்த கள அறிக்கை, சிறந்த முதலீட்டு உறவுகள் குழு, சிறந்த யூனிட் அறக்கட்டளை குழு மற்றும் சிறந்த சுற்றுச்சூழல், சமூகம், ஆட்சி அறிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு இந்த விருது வழங்கும் நிகழ்வில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல விருதுகள் அந்தந்த துறைகளுக்கு வழங்கப்படும்.

பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாகச் சிறப்பை அங்கீகரிப்பதற்காக விருது வழங்கும் நிகழ்விற்காக Chartered Financial Analysts நிறுவனம் முதன்முறையாக சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG) விருதை அறிமுகப்படுத்தியுள்ளது என்பது மற்றொரு சிறப்பம்சமாகும். இந்த விருது வழங்கும் நிகழ்வின் வெற்றியாளர்கள், Financial Analysts நிறுவனத்தின் பட்டய உறுப்பினர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களைக் கொண்ட நிபுணர் மற்றும் நடுநிலையான நடுவர் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Chartered Financial Analysts நிறுவனம் என்பது 164 சந்தைகளில் 190,000 க்கும் மேற்பட்ட தொழில் நிபுணர்களுடன் தொழில்சார் சிறப்புக்கான தரநிலைகளை அமைக்கும் முதலீட்டு நிபுணர்களின் உலகளாவிய சங்கமாகும். 2001 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலாப நோக்கற்ற அமைப்பாகும், இது தொழில்சார் மேம்பாடு மற்றும் முன்னேற்றம் மற்றும் இலங்கையில் உள்ள பட்டய உறுப்பினர்கள் மற்றும் நிதி ஆய்வாளர்களின் விண்ணப்பதாரர்களின் முன்னேற்றத்தை ஆதரிக்கிறது. பட்டய நிதி ஆய்வாளர்கள் நிறுவனம் 250 க்கும் மேற்பட்ட CEO க்கள், தலைமை நிதி அதிகாரிகள், பல்வேறு துறைகளில் முகாமையாளர்கள், பங்கு ஆய்வாளர்கள், வங்கி நிபுணர்கள், முதலீட்டு ஆலோசகர்கள் மற்றும் பிற உயர் மட்ட நிதி வல்லுநர்கள் மற்றும் 300 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டுள்ளது.

 

JAAF මෙරට ඇඟලුම් ක්ෂේත්‍රයේ රැකියා...
ஹோமாகம ஜனாதிபதி கல்லூரியில் “Yalu Daskam”...
Renowned Global Experts to Inspire...
Sri Lanka Apparel achieves 5%...
Softlogic Life to introduce AI...
සිය කටහඬ භාවිත කරමින් TikTok...
TikTok ஊடாக சமூகத்தை விழிப்பூட்டும் Saasha...
‘වත්මන් පොල් අර්බුදය විසඳීම සඳහා...
සිය කටහඬ භාවිත කරමින් TikTok...
TikTok ஊடாக சமூகத்தை விழிப்பூட்டும் Saasha...
‘වත්මන් පොල් අර්බුදය විසඳීම සඳහා...
நாட்டின் ஆடைத் துறையில் வேலைவாய்ப்புக்காக மாற்றுத்திறனாளிகளை...