வணிக விசா பிரச்சினை குறித்து அவசர நடவடிக்கை எடுக்குமாறு JAAF கோரிக்கை

Share

Share

Share

Share

ஆகஸ்ட் 2 முதல் இடைநிறுத்தப்பட்டுள்ள குறுகிய கால வணிக வீசாக்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான பிரச்சனைகளை அவசரமாறு தீர்க்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு ஒன்றிணைந்த ஆடை சங்கங்களைின் மன்றம் (JAAF), கோரிக்கைவிடுத்துள்ளது.

வாங்குபவர்கள், இயந்திரங்கள் வழங்குபவர்கள், தொழில்நுட்ப சேவை வழங்குபவர்கள் உள்ளிட்ட அனைத்து உத்தியோகபூர்வ வெளிநாட்டு வணிகப் பயணிகளும், வணிக வீசா வழங்கும் தகுதியான அமைப்பு இல்லாததால் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக JAAF குறிப்பிட்டுள்ளது.

On Arrivalஇல் சுற்றுலா விசாக்கள் கிடைக்கின்ற போதிலும், இந்த வழிமுறையின் மூலம் வணிக விசா வழங்கும் வசதி தற்போது இல்லை. குறுகிய கால வணிக வருகைகளுக்காக வரும் வெளிநாட்டவர்கள் சுற்றுலா விசாக்களுக்கு தகுதியற்றவர்கள், இது வெளிநாட்டு வணிக வருகையாளர்களுக்கு இடமளிக்கும் நாட்டின் திறனில் ஒரு முக்கியமான இடைவெளியை விட்டுச்செல்கிறது. ஏற்றுமதி மற்றும் வணிக விரிவாக்கத்திற்கு சர்வதேச ஈடுபாடு இன்றியமையாததாக இருக்கும் குறிப்பாக ஆடை மற்றும் உற்பத்தி போன்ற துறைகளில், நாட்டின் பொருளாதார மீட்சிக்கு இந்த வருகையாளர்கள் அவசியம் என்று JAAF சுட்டிக்காட்டுகிறது.

வருகை தர விரும்பும் வணிக வருகையாளர்களுக்கு இலங்கைக்குள் நுழைவதற்கான உதவியான வழிகாட்டலை வழங்காமல், குடிவரவு இணையத்தளம் காலாவதியாகியுள்ளது, இது குழப்பத்தை அதிகரிக்கிறது. இந்த தெளிவின்மை மேலும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கி, சர்வதேச வணிகத்தின் செயற்பாடுகளை பாதிக்கிறது. மேலும், 35 நாடுகளுக்கு வீசா இல்லாத நுழைவு (Visa-Free Entry) குறித்து விவாதங்கள் நடைபெற்றாலும், இந்த கொள்கையின் செயல்படுத்தல் தாமதமாகியுள்ளது, இதனால் நிலைமை மேலும் சிக்கலாகிறது.

“இலங்கையின் தொழில் முயற்சிகள் அவற்றின் தொடர்ச்சியான மீட்பு முயற்சிகளில் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளன. அத்தகைய தருணத்தில், சரக்குகள் மட்டுமின்றி, பணியாளர்களின் செயற்பாடுகளையும் சீராக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். பயணத்தின் போது மாதிரிகள், ஆவணங்கள் மற்றும் பிற பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் உட்பட வணிகப் பயணிகள் பெரும்பாலும் குறிப்பிட்ட தேவைகளைக் கொண்டுள்ளனர். இலங்கையின் வர்த்தக மற்றும் ஏற்றுமதி சமூகத்தின் நலனுக்காக, சர்வதேச வர்த்தக பயணத்தை எளிதாக்கும் தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கு விரைவான நடவடிக்கை தேவை, மேலும் இலங்கை வர்த்தக நட்பு நாடு என்ற நம்பிக்கையை மீட்டெடுக்கிறது.” என JAAF செயலாளர் நாயகம் யொஹான் லோரன்ஸ் தெரிவித்தார்.

எனவே, JAAF, வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் குறுகிய கால, ஒற்றை நுழைவு வணிக வீசாக்களை வழங்க அங்கீகரிக்க அரசை வலியுறுத்தியது. இது உண்மையான வணிகப் பயணிகள் சரியான வீசாவில் இலங்கைக்கு சட்டப்பூர்வமாக பயணம் செய்ய உறுதி செய்யும், இது வர்த்தகம் மற்றும் தொழிலுக்கு மேலும் இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் (SLTPB) உடனான அண்மைய கலந்துரையாடல்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றன. இருப்பினும், காலக்கெடு எதுவும் வழங்கப்படவில்லை, மேலும் வணிகங்கள் குறிப்பிடத்தக்க தாமதங்களையும் நிச்சயமற்ற தன்மையையும் தொடர்ந்து அனுபவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

EFC National Best Employer Awards...
கண்டி நகரில் நவீன விருந்தோம்பல் சேவையின்...
Sunshine Holdings records LKR 48.9...
Huawei Hosts the 1st Global...
Sunshine Foundation for Good strengthens...
வரலாற்று சிறப்புமிக்க காலியில் LANKATILES தனது...
2026இல் பள்ளி மாணவர்களின் கல்விக்கு தொடர்ந்து...
Appe Lanka Restores Naranthalu Tank...
வரலாற்று சிறப்புமிக்க காலியில் LANKATILES தனது...
2026இல் பள்ளி மாணவர்களின் கல்விக்கு தொடர்ந்து...
Appe Lanka Restores Naranthalu Tank...
CINEC CAMPUS Earns IESL Conditional...