இலங்கையில் உணவு தர மேம்பாட்டு செயல்முறையை வலுப்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தல்

Share

Share

Share

Share

ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பு (UNIDO) மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆகியவற்றால் செயல்படுத்தப்படும் விவசாய உணவுத் துறைக்கான (BESPA-FOOD) திட்டங்களுக்கான சிறந்த தரநிலைப்படுத்தல் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதியளித்துள்ளது. அந்த நோக்கத்திற்காக, அவர்கள் இலங்கையில் தரநிலை மேம்பாட்டு செயல்முறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அண்மையில் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தனர்.

தரத்தை உயர்த்துவதற்கு அரசு-தனியார் ஒத்துழைப்பு என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை உணவு மற்றும் பானங்கள் ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு உலகளாவிய தரத்தை உயர்த்துவதற்கான செயல்முறைகள் குறித்து நன்கு புரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

நாட்டில் தேசிய தரம் மற்றும் நியமங்களை மேம்படுத்தும் செயற்திட்ட நோக்கத்துடன், நியமங்களை அபிவிருத்தி செய்வதில் ஈடுபட்டுள்ள இலங்கை உத்தியோகத்தர்களை அறிவுப்பூர்வமாக ஆயத்தப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கிணங்க, தொடர்ந்து மாறிவரும் தொழில் தரநிலைகள் மற்றும் அவற்றின் பொருத்தம்/பொருத்தமற்ற தன்மையை மேம்படுத்துவதற்கான பொறுப்புடன் சர்வதேச தரத்தை உருவாக்குவதற்கான அறிவை இந்த மாநாடு அவர்களுக்கு உணர்த்தியது. தரத்தை மேம்படுத்துவதில் அரச மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான பங்காளித்துவத்தை அதிகரிப்பதன் முக்கியத்துவம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை மற்றும் மாலைதீவிலுள்ள ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் ஒத்துழைப்புத் தலைவர் கலாநிதி Johann Hesse, சர்வதேச தரத்திற்கு ஏற்ற உணவு முறையை உருவாக்குவதற்கு அரச-தனியார் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அவர் மேலும் கூறுகையில், “அரச மற்றும் தனியார் துறைகளின் திறன்கள் மற்றும் பங்களிப்புகள் மூலம் நிலையான பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய போட்டித்தன்மைக்கான தரங்களை உயர்த்துவதன் மூலம் இலங்கை பயனடையும் வாய்ப்பு உள்ளது” என தெரிவித்தார்.

தொழில் பங்குதாரர்கள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒத்துழைப்பை வெளிப்படுத்திய திட்டத்தின் மூலம் ஆலோசனைகள் மற்றும் வழக்கு ஆய்வுகள் பகிரப்பட்டன. இந்த வாய்ப்பு பங்கேற்பாளர்களுக்கு தரத்தை உயர்த்துவதில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்களைப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பை வழங்கியது மற்றும் எதிர்கால ஒத்துழைப்புகளுக்கு வழி வகுத்தது. இதன் காரணமாக, இது தரநிலைகளை உயர்த்துவது பற்றிய ஒரு கணிசமான விவாதத்திற்கான வாய்ப்பை வழங்கியது மற்றும் அரச மற்றும் தனியார் துறைகளுக்கு இடையே கருத்துப் பரிமாற்றத்தை எளிதாக்கியது.

இந்த மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் (SLSI) பணிப்பாளர் நாயகம் கலாநிதி சித்திக்க ஜி. சேனாரத்ன விவசாய உணவுத் துறையில் அதிகரித்து வரும் சவால்களை எதிர்கொள்வதில் அரச மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்த தொடர்ச்சியான ஒத்துழைப்பின் மூலம் தொழில்துறை, அரசாங்கம் மற்றும் நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தரநிலைகள் நடைமுறையில் இருப்பதையும் பயனுள்ளதாக இருப்பதையும் உறுதிப்படுத்த முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

இந்த விழிப்புணர்வு மாநாட்டுக்கு முன்னதாக, 60 க்கும் மேற்பட்ட இலங்கை தர நிர்ணய நிறுவன அதிகாரிகளுக்கு தர மேம்பாடு, சர்வதேச தர நிர்ணய அமைப்பின் தரப்படுத்தல் திட்டம், திட்டத்தின் கீழ் தேசிய கண்ணாடி குழுக்களை ஸ்தாபித்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் பற்றி மூன்று நாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

UNIDO இன் சர்வதேச சிரேஷ்ட நிபுணரான கலாநிதி Jairo Villamil-Diaz, இன்றைய வேகமாக வளர்ந்து வரும் தொழில்துறை சூழலில் தயாரிப்புகளின் தரம், பாதுகாப்பு மற்றும் இயங்கக்கூடிய தன்மையை உறுதி செய்வதற்கான தரநிலைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். UNIDOவின் தேசிய உணவு பாதுகாப்பு நிபுணரும், இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளருமான சனஸ் மெண்டிஸ், ‘தரம் மற்றும் தரநிலைகளின் தன்மையை’ சுட்டிக்காட்டி பொருளாதார அபிவிருத்திக்கான தேசிய தர நிர்ணய சபையை நிறுவுவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.

தரநிலை மேம்பாட்டு முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கும், நிலையான தொழில் வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கும், உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதற்கும் பங்கேற்பாளர்களின் அர்ப்பணிப்புடன் பட்டறை நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

TikTok Expands AI Literacy Efforts...
34 වන FACETS Sri Lanka...
Asia-Pacific Business Leaders to Convene...
MAS Unveils Official Kits for...
ஜப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர்...
Panda Farmacy announces reopening following...
வாடிக்கையாளர்களுக்கு அதிவேக டிஜிட்டல் சேவைகளை வழங்க...
பிராந்திய செயல்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில், BYD...
Panda Farmacy announces reopening following...
வாடிக்கையாளர்களுக்கு அதிவேக டிஜிட்டல் சேவைகளை வழங்க...
பிராந்திய செயல்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில், BYD...
சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் NÜWA...