கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் புதிய தொழில்நுட்ப சூழலை உருவாக்க Huawei இன் ‘AHEAD’ திட்டம் அறிமுகம்

Share

Share

Share

Share

புத்தாக்கத் தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்படும் கல்வி மற்றும் சுகாதாரச் சேவையை ஒன்றிணைந்து வலுப்படுத்துவோம்’ என்ற கருப்பொருளின் கீழ், 2026 உலகளாவிய கல்வி மற்றும் சுகாதாரப் பங்காளர்களின் மாநாடு அண்மையில் சீனாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 40-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளைச் சேர்ந்த 500-க்கும் அதிகமான வாடிக்கையாளர்களும், பங்காளர்களும் கலந்துகொண்டனர். இதன்போது, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக Huawei நிறுவனம் தனது ‘AI Digitalization 2.0-AHEAD’ வேலைத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியது.

காலத்தின் தேவைக்கேற்ப கூட்டாண்மைகளை மேம்படுத்துதல் மற்றும் AI மூலம் ஏற்படும் மிகப்பெரிய மாற்றம்
Huawei நிறுவனத்தின் துணைத் தலைவரும், உலகளாவிய பொதுத் துறையின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. Junfeng Li தனது முதன்மை உரையில், நாம் தற்போது AI தொழில்நுட்பத்தினால் வழிநடத்தப்படும் ஒரு மாபெரும் உருமாற்ற அலையை எதிர்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். மனிதனின் அத்தியாவசியத் தேவைகளாகக் கருதப்படும் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளும் இந்த தொழில்நுட்ப மாற்றத்திற்கு உள்ளாக வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், அதற்கான பரந்த வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்தார். உலகளவில் அனைவருக்கும் உயர்தரமான, திறமையான கல்வி மற்றும் சுகாதாரச் சேவைகளை வழங்குவதற்காக AI உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு Huawei நிறுவனம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக வலியுறுத்திய அவர், ‘AHEAD’ நிகழ்ச்சித் திட்டம் அதற்கான ஒரு மாபெரும் முன்னோடிப் படியாகும் என்றும் குறிப்பிட்டார்.

6 துறைகளின் ஊடாக உலகளாவிய ஒத்துழைப்பு
இதன்போது அறிமுகப்படுத்தப்பட்ட ‘Partner Alliance 2.0’ திட்டத்தின் கீழ் 6 முக்கிய ஒத்துழைப்பு காரணிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அவை முறையே: புதிய போக்குகளைக் கண்டறிதல், தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை ரீதியாக வலுப்படுத்துதல், புதிய தீர்வுகளை உருவாக்குதல், சந்தைப்படுத்தல் மேம்பாடு, புதிய வணிக வாய்ப்புகளைப் பரிமாறிக்கொள்ளுதல் மற்றும் வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் ஆகியவையாகும்.

Huawei நிறுவனத்தின் உலகளாவிய பொதுத்துறை மற்றும் பங்காளித்துவ முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. Robert Yang, இந்த கூட்டணியின் நவீனமயமாக்கல் திட்டத்தை வெளிப்படுத்தினார். உலகெங்கிலும் உள்ள பங்காளர்களின் கூட்டு அறிவையும் அனுபவத்தையும் அதிகபட்சமாகப் பயன்படுத்துவதற்கு Huawei எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்த ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் மூலம் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு சிறப்புமிக்க மிகவும் பொருத்தமான தொழில்நுட்பத் தீர்வுகளை அறிமுகப்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் இத்துறைகளின் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களை மிக வேகமாக முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த உலகளாவிய கல்வி மற்றும் சுகாதார பங்காளர்களின் மாநாட்டின் வெற்றியானது, இத்துறைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக Huawei நிறுவனமும் அதன் பங்காளர்களும் கொண்டுள்ள கூட்டு அர்ப்பணிப்பை மிகச்சிறப்பாகப் பிரதிபலிக்கிறது. Huawei நிறுவனம் தனது பங்காளர்களுடன் கொண்டுள்ள மூலோபாய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் மூலம், அதிக மதிப்புமிக்க நடைமுறைத் தேவைகளை அறிமுகப்படுத்தவும், நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், அதே போல் உலகளாவிய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளவும் தொடர்ந்து பாடுபடும். அதற்கமைய, Huawei மற்றும் அதன் பங்காளர்கள் ஒன்றிணைந்து உலகளாவிய ரீதியில் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் டிஜிட்டல் மற்றும் AI தொழில்நுட்பத்தின் மாற்றமிக்கதொரு எதிர்காலத்தை உருவாக்குவதற்கு பாடுபடுவர்.

கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் புதிய...
உணவு மேசையில் குடும்பங்களை ஒன்றிணைக்கும்‘TikTok அப்பா’
Mahindra Ideal Finance කොළඹ ප්‍රධාන...
Xiaomi 17T அறிமுகத்துடன், Xiaomi இன்...
காலி நகரின் பிரம்மாண்டமான கொண்டாட்டங்களுக்கான புதிய...
அகமதாபாத் – கொழும்பு இடையே நேரடி...
Perituza engages Sri Lanka’s agency...
Prime Lands களுத்துறையின் முதலாவது பாதுகாப்பு...
அகமதாபாத் – கொழும்பு இடையே நேரடி...
Perituza engages Sri Lanka’s agency...
Prime Lands களுத்துறையின் முதலாவது பாதுகாப்பு...
First Capital සමාගම ප්‍රාග්ධන වෙළඳපොළ...