தெமோதர எஸ்டேட்டின் பாரம்பரியத் திட்டம்

Share

Share

Share

Share

உயரமான மலைச்சரிவுகளாலும், குளிர் மூடுபனியாலும் சூழப்பட்ட ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள தெமோதர எஸ்டேட், இலங்கையின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான செயல்பாட்டில் இருக்கும் தேயிலை தோட்டங்களில் ஒன்றாக பெயர் பெற்றுள்ளது. 130 ஆண்டுகளுக்கும் மேலாக தேயிலை சாகுபடி செய்யப்படும் தெமோதரா தோட்டம், தேயிலை விவசாயம் தொடர்பான ஒரு உயிரியல் அருங்காட்சியகம் போன்றது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தோட்டம், நுட்பமான சாகுபடி முறைகள் மற்றும் புதுமைகள் உள்ளிட்ட தேயிலை வரலாற்றின் முக்கியமான நிகழ்வுகள் பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த எஸ்டேட் ஐந்து வெவ்வேறு வளர்ச்சி மண்டலங்களைக் கொண்டுள்ளது, அவை சவுத்ஹாம், வேவல் ஹேன, Oetumbe, Netherville மற்றும் Rossett என்பனவாகும். கடந்த சில தசாப்தங்களில் பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்ட இத்தோட்டம், 2010 ஆம் ஆண்டில் ரொசெட் வளர்ச்சி மண்டலம் மீண்டும் தோட்டத்துடன் இணைக்கப்பட்டது. தற்போது, இத்தோட்டத்தின் மொத்த பரப்பளவு 1,109.25 ஹெக்டேயர் ஆகும், இது நான்கு முக்கிய வளர்ச்சி மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் செய்கை செய்யப்படும் நிலத்தில் 45% புதிய செய்கைக்கான பகுதிகளாகவும், மீதமுள்ள 55% பாரம்பரிய தேயிலை செய்கைக்கான பகுதிகளாகவும் உள்ளன. தேயிலை செய்கையை மையமாகக் கொண்ட இந்த நிலப்பகுதி, யூகலிப்டஸ் செய்கை மற்றும் சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் மற்றும் தோட்டத்திற்கு உதவும் இயற்கையான உரத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விவசாயத் தோட்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

1959 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட புதிய தேயிலை செய்கை, பின்னர் தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு உட்பட்டது. ஆனால், தெமோதர எஸ்டேட் இன்னும் அதன் பாரம்பரியத்தைப் பாதுகாத்து வருகிறது மற்றும் தொடர்ந்து செய்கை செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. பல முறை வெவ்வேறு உரிமையாளர்களுக்கு கைமாறிய இந்த எஸ்டேட், Wittal Bosted, மக்கள் தோட்ட மேம்பாட்டு சபை, ஜேம்ஸ் பின்லேஸ் (James Finlays) ஆகியோரின் உரிமையில் இருந்தது. 2021 ஆம் ஆண்டு முதல், இத்தோட்டம் பிரவுன்ஸ் பெருந்தோட்ட குழுமத்தின் உரிமையில் உள்ளது, இது மிகவும் நிலையான மற்றும் சமூகத்துடன் இணைக்கப்பட்ட தேயிலை உற்பத்தி செயல்முறையைத் தொடங்கியுள்ளது.

தேயிலை தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியம்
இலங்கையின் தேயிலைத் தொழிலின் திருப்புமுனையைக் குறிக்கும் வரலாற்றில் ஒரு முக்கியமான அடையாளமாக தெமோதர எஸ்டேட் விளங்குகிறது. இங்குள்ள தேயிலை பதப்படுத்தும் தொழிற்சாலைகள், கடந்த கால தேயிலை உற்பத்தி செயல்முறையின் பாரம்பரிய சொத்தை நாட்டிற்கு வழங்கியுள்ளன. 1893ஆம் ஆண்டில் கொழும்பு-பதுளை முக்கிய வீதியில் அருகில் கட்டப்பட்ட இந்த தொழிற்சாலை, இன்றும் BMF தேயிலை மறுசீரமைப்பு தொழிற்சாலையாக செயல்படுகிறது. இரண்டாவது தொழிற்சாலை தோட்டத்தின் சவுத்ஹாம் வளர்ச்சி வலயத்தில் அமைந்துள்ளது, இது ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது. 1912ஆம் ஆண்டு முதல் இன்று வரை சிறப்பாக செயல்படும் இந்த தொழிற்சாலை, ஆண்டுக்கு 1.2 மில்லியன் கிலோகிராம் பாரம்பரிய கருந்தேயிலையை உற்பத்தி செய்கிறது. மேலும், அருகிலுள்ள பல தோட்டங்களின் உற்பத்தி செயல்பாடுகளும் இந்த தொழிற்சாலையில் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இங்கு குறிப்பிடத்தக்க மற்றொரு முக்கியமான நிகழ்வு என்னவென்றால், 1937ஆம் ஆண்டில் தெமோதர எஸ்டேட்டிற்குச் சொந்தமான நீர்மின்சார நிலையம் அமைக்கப்பட்டதாகும். இன்று வரை செயல்பட்டு வரும் இந்த சிறிய நீர்மின் நிலையம், ஒரு நிலையான மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாக 750 கிலோவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இந்த நீர்மின்சாரம் உற்பத்தி பணிகளுக்காக பயன்படுத்தப்படுவதால், தெமோதர எஸ்டேட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைத்து, உற்பத்தி செயல்பாடுகளை மேற்கொள்ள முடிகிறது. எஸ்டேட்டின் மையப்பகுதியிலுள்ள இரண்டு ஆறுகளைக் கடந்து இந்த சிறிய நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்கால தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்கள் தெமோதர தோட்டத்தின் உற்பத்தி செயல்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஆற்றல் திறன் கொண்ட உலர்த்தும் இயந்திரங்கள், விரகுகளைப் பயன்படுத்தும் கொதிகலன்கள், சோலார் பேனல்கள், பாரம்பரிய தேயிலை உற்பத்தி செயல்பாட்டு முறைகள் மற்றும் கூட்டு உர முறைகள் ஆகியவற்றின் உதவியுடன், தற்போது சுமார் 20 வகைகளான சிறப்பு வகை தேயிலைகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. கைமுறையாகப் பறிக்கப்படும் தேயிலையினால் பிரபலமான ஊவா தேயிலை காலத்தின் போது உற்பத்தி செய்யப்படும் தேயிலை, தனித்துவமான சுவை மற்றும் நறுமணத்தைக் கொண்டிருப்பதால், உலகின் முன்னணி தேயிலை உற்பத்தியாளர்கள் பெருமளவில் தெமோதர எஸ்டேட்டில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையைப் பயன்படுத்துகின்றனர்.

தொழில்நுட்பத்தை அதிகரித்த தெமோதர எஸ்டேட், சர்வதேச விருதுகளால் கௌரவிக்கப்பட்ட ஒரு தோட்டமாக உயர்ந்துள்ளது. 2024ஆம் ஆண்டில், நாட்டின் சிறந்த தேயிலை தொழிற்சாலை என தோட்டத் தொழில் அமைச்சும் மற்றும் தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் இதனைப் பாராட்டின. நெறிமுறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளைப் பாதுகாத்து தேயிலை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு ஒரு புதிய அளவுகோலை நிர்ணயித்த ஒரு தொழிற்சாலையாகவும் இது விளங்குகிறது.

தேயிலைத் தோட்டத்தின் சமூகப் பங்களிப்பு
தெமோதர பிராந்தியத்தில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழ் தோட்ட சமூகத்தினரின் முதன்மை வருமான வழி மற்றும் வாழ்வாதாரம் இந்த தோட்டத்துடன் நெருக்கமாக இணைந்துள்ளது. இது இலங்கையின் ஏற்றுமதி வருமானத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வருகிறது. இதனுடன், போக்குவரத்து, தோட்டத்துடன் தொடர்புடைய சிறு வணிகங்கள் போன்றவற்றின் மூலம் மேலும் பலரின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் தெமோதர தோட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

தோட்டத்துடன் தொடர்புடைய குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவதற்காக வழங்கப்படும் கல்வி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், தெமோதர தோட்டத்தில் வாழும் கல்வி துறையில் இயல்பான திறமை கொண்ட மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தோட்டத்தில் செயல்படும் கிராமப்புற மருத்துவமனை மற்றும் பிற மருத்துவமனைகள் மூலம், இங்குள்ள தோட்ட சமூகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக மேம்படுத்தப்படும் தோட்ட சமூகத்தின் வீடுகள், நீர் வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியவை மூலம் சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், திறமைகளை வளர்ப்பதன் மூலம் பெண்களை மேம்படுத்துவதற்கும், தோட்ட மனித வள மேம்பாட்டு பிரிவின் உதவியுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் தெமோதர தோட்டம் செயல்பட்டு வருகிறது.

தெமோதர எஸ்டேட்டில் நடைமுறைப்படுத்தப்படும் விவசாய முறைகள், சூழலையும் சமூகத்தையும் பாதுகாக்கும் ஒரு அணுகுமுறை என விவரிக்கப்படலாம். மண் பாதுகாப்பு, நீர் பாதுகாப்பு மற்றும் திறமையான நீர் பயன்பாடு, சூழல் நன்மை தரும் பசளை நிர்வகிப்பு போன்ற அடிப்படைக் காரணிகள் பேணப்படுகின்றன. இப்பிராந்தியத்திற்கு உரிய இனமான மரங்கள் தோட்டம் முழுவதும் நடப்பட்டிருப்பதால், தோட்டத்தின் உயிரியல் பல்வகைமையைப் பாதுகாப்பதற்கும், இது பாதுகாப்பு மற்றும் விவசாயத்தின் நிலைப்புத்தன்மைக்கான ஒரு முக்கியமான படியாகவும் அமைந்துள்ளது.

இங்கு உள்ள சிறப்பம்சமாக இருப்பதால், டெமோதர எஸ்டேட் சிறப்பு சுற்றுலாத் தளமாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட டெமோதர விருந்தினர் மாளிகை, 1926 ஆம் ஆண்டுக்கு முந்தையது மற்றும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான இடமாகும், ஏனெனில் இது எஸ்டேட்டையும் ஊவா பள்ளத்தாக்கின் அழகையும் ஒன்றாக அனுபவிக்க முடியும்.

அருகிலுள்ள 9 வளைவு பாலம் முதல் ராவணா அருவி வரை உள்ள பகுதி, கலாச்சார மற்றும் இயற்கை இடைமுகங்களால் (Cultural and Natural Junctions) பிரகாசிப்பதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் தேயிலை விரும்பிகளின் கவனத்தை எளிதாகவே ஈர்க்கிறது. ரயில் நிலையத்தின் கீழ் ஓடும் தெமோதரவின் அரிய ரயில் பாதையில் உள்ள பாம்பு வடிவ சுழல் (serpentine loop), அடியில் காலத்துவ காலத்தின் அற்புதமான பொறியியல் மேன்மையை வெளிப்படுத்துகிறது.

தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இலங்கை தேயிலை சபை ஆகியவற்றின் கூட்டு முயற்சிகள் மூலம், தெமோதர தோட்டத்தின் பாரம்பரியம், புத்தாக்கம், பாரம்பரியம் மற்றும் மாற்றம் ஆகியவற்றை இணைக்கும் ஒரு எதிர்காலத்தை நோக்கி இது நகர்கிறது.

Janashakthi Finance Wins Silver at...
Lina Manufacturing wins two awards...
Sri Lanka International Insurance Summit...
MAS සමුහයේ සහ Brandix ලංකා...
Capital Trust Properties wins Asia...
CIC හෝල්ඩින්ග්ස් 2026/27 පළමු කාර්තුවේදී...
Janashakthi Finance relocates Kandy branch...
Samsung Sri Lanka හි නවතම...
CIC හෝල්ඩින්ග්ස් 2026/27 පළමු කාර්තුවේදී...
Janashakthi Finance relocates Kandy branch...
Samsung Sri Lanka හි නවතම...
HNB FINANCE பணிப்பாளர் சபைக்கு சிவராஜா...