இலங்கை கடன் தகவல் பணியகத்தால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் 2026 CRIB தரவு நிர்வகிப்பு மற்றும் இணக்க விருது வழங்கும் நிகழ்வில், தரவு சமர்ப்பிப்பின் நான்காவது பிரிவில் வெள்ளி விருதை HNB Finance PLC வெற்றி பெற்றது.
HNB Finance பெற்றுக்கொண்ட இந்த விருது, இலங்கை கடன் தகவல் பணியகத்தின் வருடாந்திர முதன்மை நிர்வாக அதிகாரிகள் மாநாடு மற்றும் நிறுவனத் தரவரிசை விருது வழங்கும் நிகழ்வுடன் இணைந்து வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில், இலங்கை வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் துறையில் சிறந்த கடன் தரவு நிர்வகிப்பு, நிறுவன இணக்கம் மற்றும் பொறுப்பான நிதிப் பயன்பாடுகளைப் பேணுதல் ஆகிய அம்சங்களில் நிதி நிறுவனங்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
நிதி நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் தரவு சரிபார்ப்பு, தரவு நிர்வகிப்பு திறன் மற்றும் தரவு சமர்ப்பிப்பு திறன் ஆகிய முக்கிய பிரிவுகளின் கீழ் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல விருதுகள் மூலம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. மேலும், விருதுகளுக்கு விண்ணப்பித்த நிதி நிறுவனங்களின் அளவு மற்றும் அவர்கள் சமர்ப்பித்த தகவல்களின் திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, விண்ணப்பதாரர்கள் அந்தந்த பிரிவுகளில் பட்டியலிடப்பட்டனர்.
HNB Finance நிறுவனத்திற்குக் கிடைத்த இந்த வெள்ளி விருது, துல்லியமான, முழுமையான மற்றும் காலத்திற்கேற்ற கடன் தகவல்களைத் தொடர்ந்து சமர்ப்பிப்பதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. மேலும், வாடிக்கையாளர்களின் தரவுகளைப் பொறுப்புடன் நிர்வகிப்பு செய்வதற்குத் தேவையான அமைப்புகள், உள்ளகக் கட்டுப்பாட்டு முறைகள் மற்றும் நல்லாட்சித் தரங்களை வலுவாகப் பேணுவதற்கு நிறுவனம் வழங்கும் முன்னுரிமையும் இந்த மதிப்பீட்டின் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.
கடன் தகவல் பணியகத்திற்குச் சமர்ப்பிக்கப்படும் கடன் தகவல்களின் செல்லுபடியாகும் தன்மை, துல்லியம், ஒருமைப்பாடு, முழுமை மற்றும் காலத்திற்கேற்ற தன்மை ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில், நிறுவன மட்டத்தில் மேற்கொள்ளப்படும் கடுமையான மதிப்பீட்டு செயல்முறைக்குப் பின்னரே இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. தரவு நிர்வகிப்புத் திறன் மட்டுமல்லாமல், தொடர்புடைய அறிக்கையிடல், ஒழுங்குமுறை மற்றும் இணக்கத் தேவைகளைச் சரியாகப் பின்பற்றுவதும் இந்த மதிப்பீட்டில் கருத்தில் கொள்ளப்படுகின்றன.
HNB Finance PLC இன் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் அவர்கள் இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவிக்கையில்: “துல்லியமான மற்றும் காலத்திற்கேற்ற கடன் தகவல்களைப் பேணுவது என்பது ஒரு ஒழுங்குமுறைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு மட்டும் அல்ல. அது வாடிக்கையாளர்கள் நிதி உதவிகளைப் பெறுவதற்கான திறனையும், நிதி நிறுவனங்கள் மேற்கொள்ளும் கடன் முடிவுகளின் தரத்தையும் நேரடியாகப் பாதிக்கிறது. வாடிக்கையாளர்களின் கடன் பதிவுகள் துல்லியமாகப் பேணப்படும்போது, பொறுப்புடன் கடன் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் நபர்கள் மிகவும் நியாயமான முறையில் மதிப்பிடப்பட முடியும். இதன் மூலம் கடன் முடிவுகளை மிகவும் திறம்பட எடுப்பதற்கும், நிதி உதவிகளைப் பெறும்போது ஏற்படும் தேவையற்ற தாமதங்களைக் குறைப்பதற்கும் முடியும்.” என தெரிவித்தார்.
“வலுவான கடன் தரவு நிர்வகிப்பானது நிதிப் பொறுப்புணர்வை வலுப்படுத்துவதற்கும் பங்களிக்கிறது. அபாயங்களை மிகவும் பொறுப்புடன் விலை நிர்ணயம் செய்து நிர்வகித்து செய்வதற்கும், கடன் இருப்புகளின் தரத்தைப் பாதுகாப்பதற்கும், வைப்பாளர்கள் உள்ளிட்ட பிற பங்குதாரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இது நிதி நிறுவனங்களுக்கு உதவுகிறது. பொறுப்பான மற்றும் வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட நிதி நிறுவனத்தை மேலும் கட்டமைப்பதில், ஒழுக்கமான செயல்முறைகளைப் பேணுவதற்கு எங்கள் குழுக்கள் காட்டும் அர்ப்பணிப்பு இந்த மதிப்பீட்டில் பிரதிபலிக்கிறது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வாடிக்கையாளர்களின் பார்வையில் பார்க்கும்போது, கடன் தரவுகளின் தரத்தை உயர்த்துவதன் மூலம் கடன் விண்ணப்பங்களை மிகவும் விரைவாக மதிப்பிடுவதற்கும், வெளிப்படைத்தன்மையுடன் கூடிய கடன் முடிவுகளைப் பெறுவதற்கும், தங்கள் தேவைகளுக்குப் பொருந்தும் நிதி வசதிகளை நன்கு அணுகுவதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. நிறுவன மட்டத்தில், இது கடன் இடர் முகாமைத்துவம், பொறுப்பான கடன் வழங்கல் மற்றும் எதிர்கால திருப்பிச் செலுத்தும் அபாயங்களை முன்கூட்டியே அடையாளம் காணுதல் ஆகிய துறைகளை மேலும் வலுப்படுத்துகிறது.
இந்த விருது, நிறுவனத்தின் தரவு நல்லாட்சி அமைப்புகள், ஒழுங்குமுறை இணக்கக் கட்டமைப்பு, டிஜிட்டல் அறிக்கையிடல் திறன்கள் மற்றும் வாடிக்கையாளர் தகவல் நிர்வகிப்பு முறைகளை மேலும் வலுப்படுத்த ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது என்று HNB FINANCE நிறுவனம் தெரிவித்தது.
இலங்கையில் சட்டப்பூர்வ அதிகாரம் பெற்ற கடன் தகவல் ஆணையமான CRIB நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்படும் நிறுவனத் தரவரிசை விருதுகள், நிதிச் சேவைத் துறையில் கடன் தரவு நிர்வகிப்பு மற்றும் ஒழுங்குமுறை இணக்கம் ஆகியவற்றில் சிறப்பான செயற்பாட்டை மதிப்பிடுவதற்காக வழங்கப்படும், இந்நாட்டின் மிகவும் கௌரவமான மற்றும் உயர்ந்த அங்கீகாரம் பெற்ற விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.





