Eco Spindles மற்றும் Green Earth குழுமம் “Green Wheels” திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன

Share

Share

Share

Share

இலங்கை முழுவதும் பிளாஸ்டிக் சேகரிப்பில் புரட்சியை ஏற்படுத்தவும், அடிமட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

BPPL ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் முழு உரிமை நிறுவனமான ஈகோ ஸ்பிண்டில்ஸ், கிரீன் எர்த் குழுமம் N.V உடன் இணைந்து அண்மையில் மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் கிரீன் வீல்ஸ் பிளாஸ்டிக் சேகரிப்பு திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் டாக்டர் தம்மிக பட்டபெந்தி, இரு நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நிலைபேறாண்மை, மறுசுழற்சி துறையின் பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.

தேசிய பிளாஸ்டிக் கழிவுப் பட்டியல் 2024-ன்படி, இலங்கையில் ஆண்டுதோறும் 249,037 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன, ஆனால் அதில் வெறும் 11% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. இந்த பாரிய இடைவெளியை நிரப்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட கிரீன் வீல்ஸ் திட்டம், கிராமப்புற, நகர்ப்புற மற்றும் குறைந்த சேவை கிடைக்கும் பகுதிகளிலிருந்து நேரடியாக பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 50 மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்துகிறது. VERRA-சான்றிதழ் பெற்ற இத்திட்டம், சேகரிக்கப்படும் பிளாஸ்டிக்கின் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட வெளிப்படைத்தன்மை, சரிபார்ப்பு மற்றும் கண்காணிப்பை உறுதிப்படுத்துகிறது.

ஆண்டுக்கு 6,500 டன் பிளாஸ்டிக்கை சேகரித்து மறுசுழற்சி செய்யும் இலக்குடன், இத்திட்டம் சமூக மேம்பாட்டில் பெரிதும் கவனம் செலுத்துகிறது. பெண்கள், இளைஞர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேகரிப்பு மற்றும் வரிசைப்படுத்தும் பணிகளில் இணைத்து, நிலையான வருமான வாய்ப்புகளை உருவாக்குவதுடன், இலங்கையின் மறுசுழற்சி உட்கட்டமைப்பின் அணுகலையும் திறனையும் கணிசமாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதன் ஆரம்ப விழாவில் உரையாற்றிய சுற்றாடல் அமைச்சர் டாக்டர் தம்மிக பட்டபெந்தி, இந்த அரசு-தனியார் ஒத்துழைப்பை தேசிய அளவில் பிரதிபலிக்கக்கூடிய மாதிரியாக பாராட்டி கூறியதாவது: “இலங்கையின் பிளாஸ்டிக் மாசு பிரச்சினையை அரசாங்கத்தால் மட்டும் தீர்க்க முடியாது. புத்தாக்க சிந்தனையால் இயக்கப்படும் அளவிடக்கூடிய, சமூக மையப்படுத்தப்பட்ட தீர்வுகள் நமக்குத் தேவை. தொழில்நுட்பம், தனியார் துறை தலைமைத்துவம் மற்றும் அடிமட்ட பங்கேற்பு எவ்வாறு ஒன்றிணைந்து நமது தேசிய கழிவு மேலாண்மை நிகழ்ச்சிக்கு ஆதரவளிக்க முடியும் என்பதற்கு கிரீன் வீல்ஸ் திட்டம் சிறந்த உதாரணமாகும். இந்த திட்டம் வாழ்வாதாரங்களை பலப்படுத்துகிறது, மறுசுழற்சி திறனை விரிவாக்குகிறது, மற்றும் இலங்கை உறுதியளித்துள்ள நிலைபேறான வளர்ச்சி இலக்குகளுக்கு நேரடியாக பங்களிக்கிறது.” என்றார்.

கைவிடப்பட்ட பிளாஸ்டிக்குகளை பாலியஸ்டர் நூல் மற்றும் மோனோஃபிலமென்ட்களாக (monofilaments) மாற்றுவதில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஈகோ ஸ்பிண்டில்ஸ், இத்திட்டத்தின் மூலம் தனது நாடு தழுவிய சேகரிப்பு வலையமைப்பை வலுப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பில் ஈகோ ஸ்பிண்டில்ஸ் ரீசைக்ளிங் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரசாந்த மாலிம்படகே கருத்து தெரிவிக்கையில், “மக்களுக்கு உண்மையான மதிப்பை வழங்கும்போது நிலைபேறாண்மை சிறப்பாக செயல்படுகிறது என்பதை எங்கள் அனுபவம் காட்டுகிறது. நிலைபேறான போக்குவரத்தை சமூக அடிப்படையிலான சேகரிப்புடன் இணைப்பதன் மூலம், கிரீன் வீல்ஸ் எரிக்கப்படும், கொட்டப்படும் அல்லது நமது ஆறுகள் மற்றும் கடல்களில் கழுவப்படும் பிளாஸ்டிக்கை மீட்டெடுப்பதற்கான திறமையான மற்றும் பரவலாக்கப்பட்ட அமைப்பை உருவாக்குகிறது. இத்திட்டம் எங்கள் மூலப்பொருள் வழங்கலை மேம்படுத்துகிறது. சமூக வருமானங்களை வலுப்படுத்துகிறது, மற்றும் நாடு முழுவதும் பயனளிக்கும் கணிக்கக்கூடிய மற்றும் சரிபார்க்கக்கூடிய தாக்கத்தை உருவாக்குகிறது.” என தெரிவித்தார்.

ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் சான்றளிக்கப்பட்ட நிலைபேறாண்மை திட்டங்களை செயல்படுத்தும் கிரீன் எர்த் குழுமம் N.V, உள்ளடக்கிய மறுசுழற்சி மாதிரிகளில் பிராந்திய தலைவராக மாற இலங்கையின் திறனை எடுத்துரைத்தது.
கிரீன் எர்த் குழுமத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் பணிப்பாளர் ஜீஷான் அலி கருத்து தெரிவிக்கையில், “உலகம் முழுவதும் எங்கள் திட்டங்கள் மூலம், உண்மையான சுற்றுச்சூழல் முன்னேற்றத்திற்கு சமூக பங்கேற்பு அவசியம் என்பதை பார்த்திருக்கிறோம். கிரீன் வீல்ஸ் சுத்தமான போக்குவரத்து, உள்நாட்டு உற்பத்தி மற்றும் உள்ளடக்கிய கழிவு சேகரிப்பை அளவிடக்கூடிய மற்றும் அளவீடு செய்யக்கூடிய வழியில் ஒன்றிணைக்கிறது. ஈகோ ஸ்பிண்டில்ஸ் மற்றும் BPPL உடனான எங்கள் கூட்டாண்மை பிளாஸ்டிக்கை திறமையாக மீட்டெடுப்பது மட்டுமல்லாமல், அதை மிகவும் தேவைப்படும் குடும்பங்களுக்கு நிதி நெகிழ்ச்சித்தன்மையையும் கொண்டுவரும் முறையை அறிமுகப்படுத்த உதவுகிறது.” என்றார்.

கிரீன் வீல்ஸ் திட்டம் இலங்கையின் தேசிய நிலைபேறாண்மை முன்னுரிமைகளை நேரடியாக முன்னெடுக்கிறது. வறுமையைக் குறைத்தல், பெண்களுக்கான பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், கண்ணியமான வேலையை வலுப்படுத்துதல் மற்றும் நிலைபேறான மற்றும் நெகிழ்ச்சித்தன்மையான சமூகங்களை ஆதரித்தல் உட்பட பல ஐக்கிய நாடுகளின் நிலைபேறான வளர்ச்சி இலக்குகளுடன் இணைகிறது. பொறுப்பான நுகர்வு மற்றும் உற்பத்தி முறைகளை மேம்படுத்தி, சூழலமைப்புகளுக்குள் பிளாஸ்டிக் ஓட்டத்தைக் குறைப்பதன் மூலம், இத்திட்டம் காலநிலை நடவடிக்கை மற்றும் கடல் மற்றும் நிலப்பரப்பு சூழல்களின் பாதுகாப்புக்கும் பங்களிக்கிறது. முக்கியமாக, அதன் சான்றளிக்கப்பட்ட கடன் கட்டமைப்பு நாட்டிற்கு நிலையான வெளிநாட்டு நாணய வரவுகளைக் கொண்டுவருகிறது. இத்திட்டத்தை சுற்றுச்சூழல் தீர்வாகவும் இலங்கையின் பொருளாதார நெகிழ்ச்சித்தன்மைக்கு நீண்டகால பங்களிப்பாளராகவும் நிலைநிறுத்துகிறது.

முன்னுரிமை மாவட்டங்கள் முழுவதும் செயல்பட ஆரம்பித்துள்ள நிலையில், கிரீன் வீல்ஸ் பிளாஸ்டிக் சேகரிப்புத் திட்டம் இன்றுவரை இலங்கையின் மிக முக்கியத்துவம் வாய்ந்த மறுசுழற்சி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களில் ஒன்றாக நிற்கிறது. சுத்தமான சூழல் மற்றும் வலிமையான, நெகிழ்ச்சித்தன்மையான சமூகங்களை நோக்கிய நடைமுறை பாதையை வழங்குகிறது.

TikTok 2026 පළමු කාර්තුවේ ප්‍රජා...
ITC Ratnadipa Secures Coveted ‘Sustainable...
LPL තරඟාවලිය ශ්‍රී ලංකාවේ අනාගත...
ITC Ratnadipa Introduces Rūhāniyat, an...
JKCG Auto and Green EV...
කලාපීය වර්ධනය ශක්තිමත් කිරීම සඳහා...
“இலங்கையின் இளம் வீரர்களை பட்டை தீட்ட...
නව ජවයකින් සහ නව මුහුණුවරකින්...
කලාපීය වර්ධනය ශක්තිමත් කිරීම සඳහා...
“இலங்கையின் இளம் வீரர்களை பட்டை தீட்ட...
නව ජවයකින් සහ නව මුහුණුවරකින්...
Prime Lands Residencies සමාගමේ ‘The...