STEM கல்வியின் ஐந்தாவது தூண்: அறிவியலுடன் ‘பாதுகாப்பையும்’ ஏன் கற்பிக்க வேண்டும்?

Share

Share

Share

Share

பல தசாப்தங்களாக STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) கல்வி புத்தாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படையாக விளங்கி வந்துள்ளது. ஆனால் தொழில்நுட்பம் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாறியுள்ள இன்றைய சூழலில், பாதுகாப்பு இல்லாத புத்தாக்கம் என்பது மறைமுகமான பலவீனமாகும். இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் யுகத்தில், ஒவ்வொரு புதிய தொழில்நுட்பமும் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பை விரிவுபடுத்துகிறது. எனவே, அடுத்த தலைமுறையை டிஜிட்டல் பொருளாதாரத்தில் தலைமைத்துவத்திற்குத் தயார்படுத்த, STEM கல்விக்கு பாதுகாப்பு என்ற ஐந்தாவது தூண் அவசியமாகிறது.

புத்தாக்கத்தின் வேகம் பாதுகாப்பின் வேகத்தைக் கடந்துவிட்டதால், மாணவர்கள் தொழில்நுட்பத்தை உருவாக்க கற்கிறார்கள் ஆனால் அதை பாதுகாக்க கற்பதில்லை. பல்கலைக்கழகங்கள் தரவு பகுப்பாய்வை கற்பிக்கின்றன. ஆனால் நெறிமுறைகளுக்கு போதிய கவனம் செலுத்துவதில்லை. இதன் விளைவாக, ரான்சம்வேர் தாக்குதல்கள், தரவு கசிவுகள், தவறான தகவல்கள் போன்றவை அதிகரித்துள்ளன.

இவை தொழில்நுட்பத் தோல்விகள் மட்டுமல்ல, கல்வித் தோல்விகளும் கூட. இணையப் பாதுகாப்பு நீண்ட காலமாக கூடுதல் துறையாகவே கருதப்பட்டது, ஆனால், கணிதம் பொறியியலுக்கு அடித்தளம் போல் பாதுகாப்பும் டிஜிட்டல் கற்றலின் அடித்தளமாக இருக்க வேண்டும். பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களில் இணையப் பாதுகாப்பு அடிப்படைகளை கற்பிப்பது, அபாய விழிப்புணர்வு, தனியுரிமை மதிப்பு, டிஜிட்டல் பொறுப்புணர்வு கொண்ட பாதுகாப்பான மனநிலையை வளர்க்கும், இதன்மூலம் வலுவான அமைப்புகளையும் சிறந்த டிஜிட்டல் ஆட்சியையும் உருவாக்க முடியும்.

STEM-க்கு பாதுகாப்பைச் சேர்ப்பது டிஜிட்டல் யுகத்தின் அடிப்படையான நம்பிக்கையைப் பாதுகாப்பதாகும், இது இல்லாமல் தொழில்நுட்ப முன்னேற்றம் நிலைக்காது. டிஜிட்டல்மயமாக்கலை விரிவுபடுத்தும் இலங்கைக்கு இது மிக அவசரமானது. ஆனால் நாட்டின் கல்வி அமைப்பு இன்னும் இணையப் பாதுகாப்பை சிறப்புத் திறனாகவே கருதுகிறது. இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் போன்ற முன்னணி நாடுகள் ஏற்கனவே பாடசாலைகளில் பாதுகாப்பு விழிப்புணர்வை ஒருங்கிணைத்துள்ளன. இலங்கையும் நெருக்கடிக்காக காத்திருக்காமல் இதைச் செய்ய வேண்டும். பாதுகாப்புக் கல்வி தொழில்நுட்பத்தைத் தாண்டி ‘சைபர் குடிமையியல்’ (Cyber Civics) ஆக விரிய வேண்டும். இது டிஜிட்டல் நெறிமுறைகள், உரிமைகள், பொறுப்புகளைக் கற்பிக்கும். மாணவர்கள் தங்கள் ஆன்லைன் செயல்கள் மற்றவர்களையும் நிஜ உலகையும் பாதிக்கின்றன என்பதை உணரும்போது, விழிப்புணர்வே பாதுகாப்பாக மாறும் ஒரு மனித ஃபயர்வால் (firewall) கலாச்சாரம் உருவாகும்.

இணையப் பாதுகாப்புக் கல்வியை பிரதான நீரோட்டமாக்க பொதுத்துறை, கல்வி நிறுவனங்கள், தனியார் தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும். வுமைவுழம போன்ற தளங்கள் STEM கல்வி உள்ளடக்கத்தை வழங்குவதில் திறனை நிரூபித்துள்ளதால், அடுத்த கட்டமாக இத்தகைய தளங்களில் பாதுகாப்பு எழுத்தறிவை ஒருங்கிணைக்க வேண்டும். உயர்கல்வி நிறுவனங்கள் ஒவ்வொரு STEM திட்டத்திலும் இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் நெறிமுறைகளை இணைக்க வேண்டும், முதலாளிகள் பொறுப்புள்ள டிஜிட்டல் குடியுரிமை கொண்ட பட்டதாரிகளை மதிக்க வேண்டும். இணையப் பாதுகாப்பு தொழில்நுட்பப் பிரச்சினையல்ல. மனித வளர்ச்சி சவால் – ஒரு நாட்டின் நெகிழ்ச்சித்தன்மை ஃபயர்வால்களைவிட விழிப்புணர்வைப் பொறுத்தது. டிஜிட்டல் ஈடுபாடுள்ள, உலகளாவிய தொடர்புடைய இலங்கை இளைஞர்களுக்கு பாதுகாப்பை பகிரப்பட்ட கற்றல் இலக்காக மறுவடிவமைப்பதன் மூலம், தொழில்நுட்பத்தை விவேகமாக நிர்வகிக்கும் திறனை வழங்கி தெற்காசியாவில் முன்னணியில் செல்ல முடியும்.

STEM-இலிருந்து STEM-க்கு – அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம், பாதுகாப்பு – மாறுவதற்கான காலம் வந்துவிட்டது. குழந்தைகளுக்கு நிரலாக்கம் கற்பிக்கும் ஒவ்வொரு வகுப்பறையும், பாதுகாப்பையும் சேர்த்து கற்பிக்க வேண்டும். ஒவ்வொரு புத்தாக்க முயற்சியிலும் அபாயம் குறித்த பாடம் அடங்கியிருக்க வேண்டும்.

பாதுகாப்பு என்பது மீறல் நடந்த பிறகு நினைவுகூரும் ஒன்றாக இல்லாமல், சாதனை நிகழும் முன் கற்பிக்கப்படும் ஒன்றாக இருக்க வேண்டும். புத்தாக்கமான, உள்ளடக்கிய, நம்பிக்கைக்குரிய டிஜிட்டல் இலங்கையை உருவாக்க, புத்திசாலித்தனமான மனங்களுடன் பாதுகாப்பான மனங்களையும் கட்டியெழுப்ப வேண்டும்.

BYD ඉතිහාසයේ ප්‍රථම වරට මෝටර්...
TikTok හරහා මැණික් ගැන ලෝකෙටම...
எல்.பி.எல் 2026: உள்ளூர், சர்வதேச நட்சத்திர...
Samsung Sri Lanka Celebrates the...
Father’s Day Special: Meet the...
ජනශක්ති ෆිනෑන්ස් සමාගම ලාභදායීත්වය වැඩිදියුණු...
MAS Linea Intimo විසින් නිර්මාණය...
Sri Lanka’s IMF review: Stabilisation...
ජනශක්ති ෆිනෑන්ස් සමාගම ලාභදායීත්වය වැඩිදියුණු...
MAS Linea Intimo විසින් නිර්මාණය...
Sri Lanka’s IMF review: Stabilisation...
පසුගිය වසරේදී ආයතනවලින් 71%කට අවම...