HNB FINANCE பொசொன் உதானா” புதிய அனுபவத்துடன் வெற்றிகரமாக நிறைவு

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC, கடந்த ஜூன் மாதம் 20ஆம் திகதி நாவலையிலுள்ள HNB FINANCE இன் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக, நிறுவனத்தின் தலைமை அலுவலக ஊழியர்களால் பொசொன் பக்தி பாடல்களும் “பொசொன் உதான” நிகழ்ச்சித் தொடரையும் டிஜிட்டல் குழு ஏற்பாடு செய்தது. மேலும் HNB FINANCE பொசோன் உதனயவின் அன்னதான நிகழ்ச்சியும் வண்ணமயமாக இருந்ததை படத்தில் காணலாம்.

Dipped Products நிறுவனம் மின்சார வாகனத் துறைக்காக உலகின் முதல் EVPRO கையுறையை அறிமுகப்படுத்தியது

ஹேலிஸ் குழுமத்தின் உறுப்பினரும், நிலையான தரமான, உயர் மதிப்பு கொண்ட கையுறை உற்பத்தியில் உலகளாவிய முன்னோடியுமான Dipped Products PLC (DPL), மின்சார வாகன (EV) தொழில் நிபுணர்களின் தனித்துவமான கை பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் குறிப்பாக வடிவமைக்கப்பட்ட முதல் தயாரிப்பான EVPRO கையுறையை அறிமுகப்படுத்தியது. மின்சார பொறியியலாளர்களுக்கு இணையற்ற பாதுகாப்பையும், இயக்க சுதந்திரத்தையும் வழங்கும் வகையில், மின்சார வாகனங்களை கையாளுதல் மற்றும் பராமரிப்பு செய்யும் போது மின்சார அதிர்ச்சியிலிருந்து முக்கியமான பாதுகாப்பை வழங்கும் […]

இலங்கையின் முன்னணி சுகாதார சேவை வர்த்தக நாமமான நவலோக்க மருத்துவமனை, 2023/24 நிதியாண்டில் சிறப்பான இலாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது

இலங்கையில் தனியார் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி சுகாதார சேவை வழங்குநரும், நாட்டின் முன்னணி சுகாதாரப் பாதுகாப்பு வர்த்தக நாமமும் கொண்ட நவலோக்க மருத்துவமனை குழுமம், 2023/24 ஆம் ஆண்டிற்கான சிறந்த நிதிச் செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. அதன் காரணமாக, நவலோக்க மருத்துவமனை குழுமத்தால் மீள்தன்மை மற்றும் செயற்பாட்டுச் சிறப்பிற்கான குழுவின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்த முடிந்தது. அதன்படி, மார்ச் 31, 2024 இல் முடிவடைந்த நிதியாண்டில், நவலோக்க மருத்துவமனை குழுமம் 347.8 மில்லியன் ரூபா வரிக்குப் பின்னரான ஒருங்கிணைக்கப்பட்ட […]

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மரங்கள் நடும் திட்டத்தை ஆரம்பித்துள்ள லங்கெம் அக்ரிகல்ச்சர் நிறுவனம்

2024 ஜூன் 05 – லங்கெம் லங்கா பொது நிறுவனத்தின் விவசாயப் பிரிவான லங்கெம் அக்ரிகல்ச்சர், ஜூன் 5ஆம் திகதி உலகச் சுற்றாடல் தினத்தை முன்னிட்டு தொடர்ச்சியான மரநடுகை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தனித்துவமான திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி நாடளாவிய ரீதியில் 1300 பலா மரக்கன்றுகள் மற்றும் 200 மரக்கன்றுகள் உட்பட 1500 மரக்கன்றுகளை நடுவதற்கு லங்கெம் அக்ரிகல்ச்சர் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. நிறுவனத்தின் அடிப்படை நெறிமுறைகள் மற்றும் நீண்டகால நிலையான இலக்குகளுக்கு இணங்க, சுற்றுச்சூழல் […]

சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கியமைக்காக 10 ROSPA தங்க விருதுகளை வென்ற MAS KREEDA

உலகளாவிய ஆடைத் துறையில் தலைசிறந்த நிறுவனங்களில் ஒன்றான MAS Holdingsஇன் துணை நிறுவனமான MAS KREEDA, அண்மையில் மேலும் பல தனித்துவமான சாதனைகளை அடைந்துள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான தமது சுகாதார மற்றும் பாதுகாப்பு செயல்திறன் கொண்ட விபத்துக்களை தடுப்பதற்கான சமூகத்தின் (The Royal Society for the Prevention of Accidents -ROSPA) 10 தங்க விருதுகளை தனதாக்கிக் கொண்டது. துபாயில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வொன்றின் போது, MAS KREEDA ஆனது பின்வரும் பத்து மூலோபாய வணிக […]

போக்குவரத்து துறையின் எதிர்காலத்தை மேம்படுத்த ‘EV Motor Show 2024’க்கு அனுசரணை வழங்கும் BYD

ஜோன் கீல்ஸ் CG Auto மின்சார வாகன சுற்றுச்சூழல் அமைப்பினை மேம்படுத்த அறிமுகப்படுத்தும் புத்தாக்கத்துடன் கூடிய புதிய ஆற்றல் வாகன தீர்வு கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இலங்கையில் உள்ள மிகப் பெரிய பட்டியலிடப்பட்ட குழுமமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (John Keells Holdings PLC) இனதும் துபாயைத் தலைமையகமாகக் கொண்ட CG Corp Global ஆகியவற்றின் கூட்டு தொழில்முயற்சியாக John Keells CG Auto (Pvt) Ltd (JKCG Auto) Asia Exhibition & Convention […]

முதன்முறையாக லேசர் மூலநோய் அறுவை சிகிச்சையை அறிமுகப்படுத்தியுள்ளது நவலோக்க மருத்துவமனை

நவலோக்க மருத்துவமனை முதல் முறையாக லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் மூலநோய் அறுவை சிகிச்சையை அண்மையில் அறிமுகப்படுத்தியது. தனியார் துறையில் இலங்கை வைத்தியசாலை ஒன்றின் ஊடாக லேசர் மூலநோய் சத்திரசிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்ட முதலாவது சந்தர்ப்பமும் இதுவாகும். இந்த லேசர் மூலநோய் அறுவைசிகிச்சையானது எந்த திசுக்களையும் அகற்றாது மற்றும் சேதமடைந்த திசுக்களை உறைய வைக்க ஒரு சிறந்த லேசர் கற்றையைப் பயன்படுத்துகிறது. மூலநோய்க்கான இந்த சமீபத்திய சிகிச்சை முறையால், நோயாளிகள் வலியின்றி மிக விரைவாக குணமடையவும், 2 நாட்களுக்குப் […]

70% சம்பள அதிகரிப்பை அரசு விதித்ததை எதிர்த்து தாங்கள் நீதிமன்றம் செல்லவுள்ளதாக RPCகள் தெரிவிப்பு

தேயிலை மற்றும் இறப்பர் தொழிற்துறை தொழிலாளர்களின் சம்பளத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் எதுவித அடிப்படியுமின்றி 70% ஆல் உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்ற சம்பள நிர்ணய சபையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதைத் தவிர வேறு வழியில்லை என இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இந்தத் தீர்மானத்திற்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யவுள்ளதாக சம்மேளனம் தெரிவித்துள்ளது. வியாபார நிறுவனங்களின் நீடித்த நிலைத்தன்மைக்கும் […]

பிரத்தியேக T20 உலகக் கோப்பை டிவி ஒப்பந்தங்களை அறிமுகப்படுத்தும் Samsung

இலத்திரனியல் துறையில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Samsung Sri Lanka, தனது பிரத்தியேக T20 உலகக் கோப்பை தொலைக்காட்சி ஒப்பந்தங்களை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது, இது நாடு முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு இணையற்ற சேமிப்பு மற்றும் கிரிக்கெட் உற்சாகத்தை அளிக்கிறது. இலங்கையில் கிரிக்கெட் ரசிகர்களிடை கிரிக்கெட் போட்டி குறித்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், Samsung அதன் அதிநவீன தொலைக்காட்சிகள் மூலம் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்கு பார்க்கும் அனுபவத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், இப்போது எங்கேயும் இல்லாத […]

இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware

2023 ஜனவரி முதல் டிசம்பர் வரை இலங்கையில் வணிகங்களுக்கான Kaspersky இணைய பாதுகாப்பு தீர்வுகளால் மொத்தம் 2,650 ransomware சம்பவங்கள் கண்டறியப்பட்டு தடுக்கப்பட்டுள்ளன. உலகளாவிய Cybersecurity நிறுவனத்தின் நிபுணர்கள், அமைப்புகளின் வடிவம் மற்றும் அளவைப் பொருட்படுத்தாமல், ransomware, குறிப்பாக இலக்கு வகை, பிராந்தியத்தில் உள்ள நிறுவனங்களுக்கு தீங்கு விளைவிக்கும் அச்சுறுத்தலாகத் தொடர்ந்து தங்கள் IT பாதுகாப்பு நிலையை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். “தனிநபர்கள் மற்றும் வணிகங்கள் ஆகிய இருவர் மீதும் encryptorகளால் பரவலான வெகுஜன தாக்குதல்களின் […]