MAS பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஊழியர் நலனை முதன்மைப்படுத்துகிறது

Share

Share

Share

Share

இலங்கையின் மிகப்பெரிய ஆடை ஏற்றுமதியாளரும் தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப உற்பத்தியாளருமான MAS Holdings, ஊழியர் நலனுக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தி ஆடைத் துறையில் பணியாற்றும் சமூகங்களுக்கு ஆதரவளிக்க மீண்டும் முன்வந்துள்ளது. நிறுவனத்தின் சமீபத்திய ஊழியர் நலன் மற்றும் அனுகூலமான திட்டங்கள் அதிக பணவீக்கத்தை கூட்டாக எதிர்கொள்ளும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகின்றன.
உடனடி நடவடிக்கையாக, MAS குறிப்பாக அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவை எதிர்கொள்ள முடிந்ததுடன், அனைத்து ஊழியர்களுக்குமான மேலதிக கொடுப்பனவுகளை செலுத்துகிறது, இது மொத்தமாக 2022 இல் அவர்களின் மாதாந்த சம்பளத்தில் 125% ஆகும்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் தொற்றுநோய்களின் போது அதன் ஊழியர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களைப் போக்க MAS பல முயற்சிகளை ஆரம்பித்தது. MAS Holdingசின் மனித வள செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் சரக குணவர்தன, MAS மக்கள் முதலாவதாக தொடர்பு கொள்வது என்னும் அணுகுமுறை மூலம் அதன் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். “தற்போதைய பொருளாதார நெருக்கடியின் மத்தியில், எங்கள் ஊழியர்களை கைவிட்டு விடாமல் அவர்களுக்கு உதவ முடிவு செய்தோம். நாங்கள் எங்கள் ஊழியர் நலக் கொள்கையை வெறும் காகிதத்தில் மட்டும் மட்டுப்படுத்தாமல் அதை நடைமுறைப்படுத்துகிறோம். அதன்படி, அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு போதுமான உணவுப் பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஊழியர்களின் நிதி நிலைமையை மேம்படுத்தவும், அவர்களுக்கு மன நிம்மதியை வழங்கவும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.”
“எங்கள் ஊழியர்களின் சம்பளத்தை ஜனவரி 2022ல் சரிசெய்தோம், பின்னர் மீண்டும் ஏப்ரலில் சரி செய்தோம். அதிகரித்து வரும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் நிலையில், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிப்பதாகவும், சுமையைக் குறைக்க உதவும் மற்றொரு சம்பள மாற்றத்தைக் கருத்தில் கொள்வதாகவும் உறுதியளிக்கிறோம். இந்த கடினமான காலங்கள் விரைவில் சீராகிவிடும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதை நாங்கள் காண்கிறோம், மேலும் 2023 இல் எமது ஊழியர்களுக்கு தேவையானதை நாங்கள் செய்வோம்,” என குணவர்தன குறிப்பிட்டார்.
நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார சவால்கள் மற்றும் உணவுப் பற்றாக்குறைகளை சமாளிக்கும் வகையில், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் MAS முன்னணி வகித்தது. MAS 80,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களுக்கு உலர் உணவுகளை வழங்கியமை, அதன் நலன்புரி திட்டங்களில் குறிப்பிடத்தக்க நன்கொடையாகும்.
வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான அதன் அர்ப்பணிப்பை உணர்ந்து, MAS உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதைத் தாண்டி அதன் ஊழியர்களின் குழந்தைகளின் கல்வித் தேவைகளையும் பூர்த்தி செய்தது. அண்மையில் MAS சிசு திரிய திட்டத்தை அண்மையில் அறிமுகம் செய்தது. இதன் மூலம் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் உட்பட அனைத்து மட்டங்களிலும் உள்ள ஊழியர்களின் குழந்தைகளுக்கு அத்தியாவசிய பாடசாலைப் பொருட்களை வழங்குகின்றது. மேலும், நாட்டின் எரிபொருள் நெருக்கடியின் போது, 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கிய 80 பஸ்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டது.
அதன் ஊழியர்களின் மன ரீதியான ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி, MAS அவர்களின் ஆலைகளில் மனநல ஆலோசகர்களின் இருப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தது, அதன் மூலம், மனநலம் பேணுவதன் முக்கியத்துவம் மற்றும் சவாலான காலங்களில் ஆரோக்கியத்தை எவ்வாறு பேணுவது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
MAS இப்போது “மானுடம் நடவடிக்கை” முன்முயற்சியில் நாட்டின் முன்னணி வணிகங்களுடன் கைகோர்த்துள்ளது, இது 119,0000 குடும்பங்களுக்கு பயனளிக்கும் ஒரு மனிதாபிமான உதவித் திட்டமாகும், இதில் நாட்டின் குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு உதவுவதற்காக MAS ரூ.100 மில்லியனை சர்வோதயா இயக்கம் மூலமாக முதலீடு செய்தது.

MAS Holdings தொடர்பாக
தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப நிறுவனமான MAS Holdings, ஆடைகள் மற்றும் ஜவுளிகளின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட வடிவமைப்பு-விநியோகஸ்தர் ஆகும். 110,000 க்கும் மேற்பட்ட உலகளாவிய சமூகத்துடன், இன்று, MAS 17 நாடுகளில் பரந்து விரிந்துள்ளது, உலகெங்கிலும் உள்ள முன்னணி நவநாகரீக மையங்களில் நிறுவப்பட்ட வடிவமைப்பு இடங்கள் உள்ளன. MAS போர்ட்ஃபோலியோ அதிவேகமாக விரிவடைந்துள்ளது; உலகளவில் அணியக்கூடிய தொழில்நுட்பம், ஃபெம்டெக், ஸ்டார்ட்-அப்கள், ஏற்றி இறக்கல்கள் மற்றும் ஆடை பேட்டைகள். 30 ஆண்டுகளுக்கும் மேலாக, MAS அதன் நெறிமுறை மற்றும் நிலையான பணிச்சூழலுக்காகவும், அதன் கைவினைத்திறன் மற்றும் தயாரிப்பு சிறப்பிற்காகவும் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. மாற்றத்திற்கான MAS திட்டம், பொருட்கள், உயிரினங்கள் மற்றும் பிரபஞ்சம் ஆகிய மூன்று தூண்களின் கீழ் நிலையான மாற்றத்தை உருவாக்குவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை கோடிட்டுக் காட்டுகிறது. இதன் மூலம், MAS அதன் அனைத்து ஊழியர்களையும் மாற்றங்களை உருவாக்குபவர்களாக இருக்க ஊக்குவிக்கிறது, கனவுகளை செயல்படுத்துகிறது மற்றும் நமது கிரகத்தில் வாழ்க்கையின் கட்டமைப்பை வளப்படுத்துகிறது.

සම්පත් බැංකුවේ තිරසාර නායකත්වය, ශ්‍රී...
The Impossible Shot – வனவிலங்கு...
Samsung Sri Lanka Celebrates International...
GenAI இன் தொழில்நுட்பக் குறைபாடுகள் நிறுவனங்களின்...
නවතම Samsung Galaxy S25 මාදිලිය...
JAAF, ඇඟලුම් කර්මාන්තය මුහුණ දෙන...
ඇඟලුම් කර්මාන්තයේ උන්නතිය කාන්තාවන්ගේ කැපවීමයි
She shapes the fabric: Women...
JAAF, ඇඟලුම් කර්මාන්තය මුහුණ දෙන...
ඇඟලුම් කර්මාන්තයේ උන්නතිය කාන්තාවන්ගේ කැපවීමයි
She shapes the fabric: Women...
2024 ජාතික විකිණුම් සම්මාන උළෙලේදී...