கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் டிட்வா சூறாவளியால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டது, அதனனால் தனது ஊழியர்கள் தங்கள் வீடுகளை புதுப்பித்துக் கொள்வதற்கு HNB FINANCE PLC நிதி நன்கொடைகளை வழங்கியுள்ளது. டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட HNB FINANCE ஊழியர்களுக்கு இரண்டு கட்டங்களாக நிவாரணம் வழங்கப்பட்டது, மற்றும் அவசர உதவி உணவு உட்பட 8 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது. பதுளை, கண்டி, நுவரெலியா, நாவலப்பிட்டி, கடுவலை மற்றும் வலபனை ஆகிய பகுதிகளில் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்த வீடுகளை புதுப்பிக்க 12 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது, மொத்தம் 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நிதி நன்கொடைகள் வழங்கப்பட்டன.
இந்த இயற்கைப் பேரிடர் காரணமாக, HNB FINANCE ஊழியர்களுக்கு சொந்தமான 3 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன, மேலும் 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. முழுமையாக சேதமடைந்த ஒவ்வொரு வீட்டிற்கும் தலா 2.5 மில்லியன் ரூபாவும், பகுதியளவில் சேதமடைந்த ஒவ்வொரு வீட்டிற்கும் தலா 0.5 மில்லியன் ரூபாவும் கொண்ட நிதி நன்கொடைகள் சமீபத்தில் HNB FINANCE PLC இன் தலைமையகத்தில் உத்தியோகப்பூர்வமாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் HNB FINANCE PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் மற்றும் துணை பிரதம நிறைவேற்று அதிகாரி மதுரங்க ஹீன்கெந்த உட்பட சிரேஷ்ட முகாமையாளர்கள் மற்றும் HNB FINANCE ஊழியர்களின் பேரிடர் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
டிட்வா சூறாவளி எதிர்கொள்ளும் அவசரகால சூழ்நிலையை எதிர்கொண்ட HNB FINANCE PLC நிறுவனம், சூறாவளியால் பாதிப்பபிற்குள்ளான மாவட்டங்களில் பணியாற்றும் தனது ஊழியர்களுக்கு உலர் உணவு, உடை, மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களை விரைவாக வழங்கியது. இதற்குத் தேவையான நிதி, நிறுவனத்தின் முதன்மை சமூக பொறுப்பான ‘மிஷன்’ திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது, மேலும் HNB FINANCE நல நிதியும் இந்த முக்கியமான முயற்சிக்கு பங்களித்தது. சேதமடைந்த வீடுகளை புதுப்பிக்க ஒதுக்கப்பட்ட 12 மில்லியன் ரூபாய் தொகைக்கு விசேட பணிப்பாளர் சபையின் ஒப்புதலுடன் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட HNB FINANCE ஊழியர்களின் வீடுகளை புதுப்பிக்க நிதி நன்கொடைகளை வழங்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த HNB FINANCE PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத், “இயற்கை பேரிடர் அல்லது வேறு எந்த கடினமான சூழ்நிலையிலும், எங்கள் ஊழியர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஏற்படக்கூடிய பேரிடர் சூழ்நிலையில், அவர்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க விரைவாக செயல்படுவதற்கு நாங்கள் எப்போதும் வேலை செய்து வருகிறோம். எங்கள் தொழிலின் இருதயமான எங்கள் ஊழியர்களை முதலில் பாதுகாப்பது எங்கள் கடமை மற்றும் பொறுப்பாகும். ஒரு நிறுவனமாக, இந்த ஒவ்வொரு அணுகுமுறையிலும் நம் மனிதாபிமானம் மற்றும் சகோதரத்துவ பிணைப்பு வெளிப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். மேலும், பேரிடர் ஏற்பட்ட தருணத்திலிருந்து தங்கள் கடமைகளில் ஈடுபட்டு, இன்று வரை பேரிடர் நிவாரணம் வழங்க பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.


