சுவீடன்: புகைபிடித்தல் இல்லாத எதிர்காலத்திற்கான ஒரு பொது சுகாதாரத் திட்டம்

Share

Share

Share

Share

முன்னேற்றத்திற்கான வாக்குறுதி
புகைப்பிடிப்பதால் ஏற்படும் சுகாதாரப் பாதிப்புகளைக் குறைப்பது உலக நாடுகளின் பொதுவான இலக்காகும். இது ஒரு சவாலான விஷயம் என்பதால், இதற்குப் பல்வேறு தீர்வுகளை ஆய்வாளர்கள் பரிசீலிக்கின்றனர். “புகையிலை தீங்கைக் குறைத்தல்” (Tobacco Harm Reduction) என்பது ஒரு முக்கிய அணுகுமுறையாகும். புகைப்பிடிப்பதை நிறுத்தாதவர்கள், புகை வெளிவராத மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவதை இது குறிக்கிறது. இந்த முறை எந்தளவிற்குப் பயன் தருகிறது என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த வெற்றியினைச் சுவீடன் நாட்டில் மிகத் தெளிவாகக் காணமுடிகிறது. புகை வெளிவராத நிகோடின் பொருட்களை ஏற்றுக்கொண்டதன் மூலம், அந்நாட்டின் புகைப்பிடிப்போரின் விகிதம் 5% க்கும் கீழ் குறைந்துள்ளது. இது உலக சுகாதார நிறுவனம் (WHO) நிர்ணயித்த இலக்காகும். இதன் விளைவாக, ஐரோப்பாவிலேயே புகையிலையினால் ஏற்படும் உயிரிழப்புகள் சுவீடனில்தான் மிகக்குறைவாக உள்ளன. ஒரு நாட்டின் கொள்கைகள் ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்தால் என்ன மாதிரியான மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த சான்றாகும்.

இலங்கையில் மரணம், தீராத நோய்கள் மற்றும் அங்கவீனம் ஏற்படுவதற்கான முதல் பத்து முக்கிய காரணங்களில் புகையிலை பயன்பாடும் ஒன்றாகும். இது உயர் இரத்த அழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம் மற்றும் காற்று மாசுபாடு ஆகியவற்றிற்கு இணையாகப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மறைக்கப்பட்ட ஒரு பாதை
இலங்கையின் தற்போதைய கொள்கைகள், பல்வேறு நிகோடின் தயாரிப்புகளுக்கு இடையே உள்ள அபாய வேறுபாடுகளைக் கருத்தில் கொள்வதில்லை. சிகரெட்டுகளையும், புகையிலை இல்லாத நிகோடின் பவுச்சுகளையும் (Nicotine pouches) ஒரே மாதிரியாகக் கருதுவது, புகைப்பிடிப்பவர்கள் பாதுகாப்பான மாற்று பயன்பாடுகளைத் தேர்வு செய்வதைத் தடுக்கும் தடையாக மாறுகிறது.

தற்போதைய அணுகுமுறை நல்ல எண்ணத்துடன் உருவாக்கப்பட்டிருந்தாலும், அது எதிர்பார்த்ததற்கு மாறான பாதிப்புகளையே ஏற்படுத்துகிறது. மிகவும் ஆபத்தான சிகரெட் பழக்கத்திலிருந்து வெளியேற நினைப்பவர்களுக்கு, பாதுகாப்பான மாற்று வழிகள் கிடைப்பதை இது தடுக்கிறது. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட, ஆபத்து குறைந்த பொருட்களை மக்களுக்கு வழங்கத் தவறும்போது, நாம் லட்சக்கணக்கான புகைப்பிடிப்பவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையிலிருந்து தவறிவிடுகிறோம்.

தீர்வு: ஆதாரங்களின் அடிப்படையிலான கலந்துரையாடலுக்கான அழைப்பு
புகைப்பிடிப்பவர்கள் மற்றும் நிகோடின் பயன்படுத்துபவர்கள், சிகரெட் பழக்கத்தைக் குறைக்க ‘நிகோடின் பவுச்சுகள்’ (Nicotine pouches) எவ்வாறு உதவுகின்றன என்பது குறித்த அறிவியல் பூர்வமான உண்மைகளைத் தெரிந்துகொள்ள தகுதியுடையவர்கள். தற்போதைய சட்டங்கள் உண்மையிலேயே பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கின்றனவா அல்லது முன்னேற்றத்தைத் தடுத்துப் பாதிப்பை ஏற்படுத்துகின்றனவா என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும்.

ஒரு நவீன காலச் சட்டதிட்டமானது “ஒப்பீட்டு அபாயத்தின்” (Relative risk) அடிப்படையில் அமைய வேண்டும். அதாவது, அதிக ஆபத்துள்ள சிகரெட்டுகளையும் குறைந்த ஆபத்துள்ள மாற்றுப் பொருட்களையும் அரசு வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். பெரியவர்கள் பாதுகாப்பான தயாரிப்புகளுக்கு மாறுவதை ஊக்குவிக்கும் அதேவேளையில், தரக்கட்டுப்பாடுகளையும் உறுதி செய்ய வேண்டும்.

சுவீடன் நாட்டின் வெற்றியை முன்மாதிரியாகக் கொண்டு, இலங்கை தனது நாட்டுச் சூழலுக்கு ஏற்ற ஒரு வலுவான சட்டக் கட்டமைப்பை உருவாக்க முடியும். இதன் மூலம், புகைப்பிடிப்பவர்கள் தாங்கள் பயன்படுத்தும் மாற்றுப் பொருட்கள் தரமானவை மற்றும் குறைவான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்ற நம்பிக்கையுடன் சிகரெட் பழக்கத்திலிருந்து மாற முடியும்.

அறிவியல் முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில் நமது கொள்கைகள் குறித்து விவாதிக்க வேண்டிய நேரமாகும். இது அரசு, சுகாதார நிபுணர்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் என அனைவரும் இணைந்து செய்ய வேண்டிய ஒரு கூட்டுப் பொறுப்பாகும். ஆதாரங்களின் அடிப்படையில் ஒரு முறையான சூழலை உருவாக்குவதன் மூலம், இந்த நவீன தயாரிப்புகளைப் பயன்படுத்தி இலங்கையின் பொது சுகாதாரத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

TikTok 2026 පළමු කාර්තුවේ ප්‍රජා...
ITC Ratnadipa Secures Coveted ‘Sustainable...
LPL තරඟාවලිය ශ්‍රී ලංකාවේ අනාගත...
ITC Ratnadipa Introduces Rūhāniyat, an...
JKCG Auto and Green EV...
කලාපීය වර්ධනය ශක්තිමත් කිරීම සඳහා...
“இலங்கையின் இளம் வீரர்களை பட்டை தீட்ட...
නව ජවයකින් සහ නව මුහුණුවරකින්...
කලාපීය වර්ධනය ශක්තිමත් කිරීම සඳහා...
“இலங்கையின் இளம் வீரர்களை பட்டை தீட்ட...
නව ජවයකින් සහ නව මුහුණුවරකින්...
Prime Lands Residencies සමාගමේ ‘The...