Pedro Estateஇல் அமைச்சர் தொண்டமானின் அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு முதலாளிமார் சம்மேளனம் கோரிக்கை

Share

Share

Share

Share

அமைச்சர் ஜீவன் தொண்டமான், நுவரெலியா, பீ ட்று பெருந்தோட்டத்தில் அண்மையில் நடந்துகொண்ட விதம் சட்டத்திற்கு முரணானது எனவும், அவரின் நடத்தையை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சட்டத்தை புறக்கணிக்கும் வகையில் அமைந்த அமைச்சரின் இந்த வன்முறைச் செயற்பாடு பெருந்தோட்ட மக்களிடையே அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் நீதி மற்றும் சட்டத்தின் மதிப்பை குறைப்பதாகவும், இது பாதுகாப்பிற்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்தின் சிற்றூழியர் ஒருவரை சட்டவிரோதமான முறையில் தாக்கி நிறுவனத்தின் உபகரணங்களை சேதப்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று ஊழியர்கள் பணி இடைநிறுத்தப்பட்டனர். அழுத்தத்தின் மத்தியில், மே 30 அல்லது அந்தத் திகதியை அண்மைய நாளில், அமைச்சர் தொண்டமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குழு இந்த அச்சுறுத்தல்களை விடுத்தது, இதனால் இடைநிறுத்தப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் இங்கு தேயிலை பயிர் செய்கை நிறுத்தி கோபி பயிர் செய்கையை மேற்கொள்வதை உடனடியாக நிறுத்துமாறும் கடுமையாக கூறியுள்ளனர்.

அதன் பின்னர் ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள இடைநிறுத்தப்பட்ட ஊழியர்களின் கடுமையான போக்கு மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது, இதன் காரணமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. ஆனால் ஒழுக்காற்று விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து, நிறுவன நிர்வாகம் நிறுவன நடைமுறையை பின்பற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.

இதுகுறித்து, உதவி தொழில் ஆணையாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில் பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அது தோல்வியில் முடிவடைந்தது. தொழிற்சங்கங்கள் உள்ளக விசாரணைக்குப் பிறகு இந்த விஷயத்தில் முடிவெடுக்க மறுத்துவிட்டன. குறித்த மூன்று ஊழியர்களையும் மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ளுமாறு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியை வற்புறுத்தும் நோக்கில் நுவரெலியா உதவி ஆணையாளருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதன் பின்னர் களனிவெளி பெருந்தோட்ட நிறுவத்தின் நிர்வாகத்தை அச்சுறுத்தும் வகையில் மது போதையில் இருந்த வன்முறையாளர்கள் குழுவொன்றை களமிறக்க அமைச்சர் தொண்டமான் ஏற்பாடு செய்துள்ளார். பொலிஸாரின் தலையீட்டின் பேரில், நிறுவன நிர்வாகத்தினர் உரிய பாதுகாப்புடன் நிறுவன வளாகத்தில் இருந்து வெளியேறினர்.

அதன் பின்னர், பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் குழுவினர் பீ ட்று பெருந்தோட்டத்தில் தங்கியிருப்பதை அறிந்த அமைச்சர் மற்றும் குழுவினர் அத்துமீறி தோட்டத்திற்குள் நுழைந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொழிற்சாலை வளாகத்தில் 4 மணி நேரம் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளனர். அங்கு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ள தொழிலாளர்களை உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும் எனவும், மறுநாள் வேலை செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டுமெனவும் அச்சுறுத்தினர். அமைச்சரின் உத்தரவுக்கு எதிராக செயல்பட்டால், எதிர்காலத்தில் மேலும் சிக்கல் ஏற்படலாம் எனவும் கூறியுள்ளனர்.

இச்சம்பவத்தின் போது மிகவும் மோசமாக நடந்து கொண்ட அமைச்சர் மற்றும் அவரது சகாக்கள் களனிவெளி பெந்தோட்ட நிறுவனத்தின் சொத்துக்களுக்குள் அத்துமீறி நுழைந்து ஊழியர்களின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததோடு பணியிடத்தை விட்டு வெளியேறுமாறு ஊழியர்களை அச்சுறுத்தியும் திட்டியும் உள்ளனர். அமைச்சர் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்தால் தோட்டங்களை அழித்து விடுவோம் என்றும் மிரட்டினர்.

அமைச்சரின் ஒழுங்கீனமான செயற்பாடுகளுக்கு மத்தியிலும் இக்கட்டான காலகட்டம் முழுவதிலும் நிதானமாக நடந்துகொண்டதற்காக, களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அனுர வீரகோனை, இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் பாராட்டுகிறது.

அப்போது, பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் வருகையைத் தடுக்கவும், அதனால் ஏற்படும் உயிர் மற்றும் உடமைச் சேதங்களைத் தடுக்கவும் அமைச்சர் தொண்டமானின் கோரிக்கைகளை களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாகம் தயக்கத்துடன் ஏற்க வேண்டியிருந்தது. இத்தகைய கட்டாய நடவடிக்கைகள் தோட்டங்கள் எதிர்கொள்ளும் கடுமையான சவால்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன மற்றும் சட்டத்தை நிலைநிறுத்துவதற்கான தீர்க்கமான நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை எதிர்கொண்ட KVPL இன் சிரேஷ்ட முகாமைத்துவ உறுப்பினரான அவர் எதிர்கொண்ட அச்சுறுத்தல்களால் ஏற்பட்ட கடுமையான மன அழுத்தத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொழிற்சாலை தொழிலாளர்கள் நெற்றியில் வைக்கும் ‘சிவப்பு பொட்டை’ அகற்றுமாறு தோட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்ததாகவும், அதன் பின்னர் அமைச்சர் தனது தலையீடு சம்பளம் தொடர்பானது என பொய்யாகக் கூறி மக்களை ஏமாற்ற முயன்றதாகவும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

மூன்று தொழிலாளர்கள் சட்ட விரோதமாக நடந்துகொண்டது தொடர்பான சர்ச்சையை ஊதியம் தொடர்பான பிரச்சினையாக மாற்ற அமைச்சரின் கோழைத்தனமான முயற்சியால் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம்ன் அதிர்ச்சியடைந்துள்ளது.

தொழிலாளர்கள் மீது எந்தவித சட்டவிரோதமான அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை எனவும், இது அமைச்சர் தொண்டமானின் ஏமாற்று வேலை எனவும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் வலியுறுத்துகிறது. சர்வதேச வாங்குபவர்களின் தேவையான ஏற்றுமதி பொருட்கள் மாசுபடுவது தொடர்பான ISO விதிமுறைகளுக்கு இணங்க, ‘பொட்டுகள்’ போன்ற பொருட்களை அகற்ற அறிவுறுத்தல்கள் தேவை. எனவே இது பிராந்திய தோட்டக் கம்பனிகளின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விடயமாகும்.

பெருந்தோட்டத் தொழிலில் சட்டம் ஒழுங்கைப் பேண வேண்டிய அவசியத்தை இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. சட்டம் மற்றும் சமாதானத்தை சீர்குலைக்கும் அல்லது பெருந்தோட்டக் கைத்தொழிலின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்தவொரு செயலையும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இச்சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கமும் பொலிஸாரும் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு, இதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் கோரிக்கை விடுக்கின்றது. மேலும் பெருந்தோட்டத் தொழிற்துறையில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பங்குதாரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசர நடவடிக்கை தேவை. தோட்ட நம்பிக்கை என்பது தொழிலாளர்கள், நிர்வாகம் மற்றும் தொடர்புடைய அனைவரின் நலனைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தங்கியுள்ளது என்பதை சம்மேளனம் மேலும் வலியுறுத்துகிறது.

இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் காத்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Hope Is Just a Scroll...
Hope Is Just a Scroll...
Samsung Sri Lanka 2026 අලෙවි...
වාහන සඳහා මූල්‍ය පහසුකම් සැලසීමට...
ඔබ අප කෙරෙහි තැබූ විශ්වාසය...
Dear Besties, Your Long-Weekend Plans...
රක්ෂණ ක්ෂේත්‍රයේ ශක්තිය, සහයෝගීතාව සහ...
උතුරු පළාතේ ආ¾ථික ව¾ධනයට උරදෙමින්...
Dear Besties, Your Long-Weekend Plans...
රක්ෂණ ක්ෂේත්‍රයේ ශක්තිය, සහයෝගීතාව සහ...
උතුරු පළාතේ ආ¾ථික ව¾ධනයට උරදෙමින්...
விற்பனை மற்றும் பங்களிப்பில் சிறந்து விளங்கிய...