தெற்காசியாவில் முதன்முறையாக BYD-இன் ஏழு ஆசனங்களைக் கொண்ட அதிநவீன SUV ரக வாகனமான BYD SEALION 8 இலங்கையில் அறிமுகம்

இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற புதிய சக்தி வாகன (NEV) வர்த்தக நாமமான BYD, அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ (JKCG Auto) நிறுவனத்துடன் இணைந்து, அதிநவீன ‘BYD SEALION 8’ ரக வாகனத்தை 2026 மார்ச் 10ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக இலங்கை சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் நடைபெற்ற விசேட அங்குரார்ப்பண நிகழ்வின் போது, BYD நிறுவனத்தின் முதன்மைத் தயாரிப்பான ஏழு ஆசனங்களைக் கொண்ட ‘பிளக்-இன் ஹைப்ரிட்’ (Plug-in Hybrid) […]
உற்பத்தியின் தரம் மற்றும் விநியோகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் பைரஹாவினால் 500 டன் கொள்ளளவு கொண்ட புதிய குளிரூட்டப்பட்ட களஞ்சிய கூடம் திறந்து வைப்பு

இலங்கையின் முன்னணி ஒருங்கிணைந்த கோழி இறைச்சி உற்பத்தி நிறுவனமான பைரஹா ஃபார்ம்ஸ் பிஎல்சி (Bairaha Farms PLC), தனது உற்பத்தி ஆற்றல், கையிருப்பு முகாமைத்துவம் மற்றும் அதன் விநியோகச் சங்கிலி ஊடான செயற்பாட்டு திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பயணத்தின் ஒரு மைல்கல்லாக 500 டன் கொள்ளளவு கொண்ட குளிரூட்டப்பட்ட புதிய களஞ்சிய கூடம் ஒன்றை (Cold storage facility) ஆரம்பித்துள்ளது. 2026 ஜனவரி 14ஆம் திகதி பைரஹா ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரியால் யாகூப் அவர்களினால் […]
2025இல் வலுவான கடன் வளர்ச்சி மற்றும் மேம்பட்ட இருப்புநிலை அறிக்கையுடன் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஒத்துழைக்கும் HNB

HNB குழுமம் 2025 ஆம் ஆண்டில் வலுவான நிதிச் செயல்பாட்டைப் பதிவு செய்துள்ளது. குழுமத்தின் வரிக்குப் பிந்தைய இலாபம் 49.8 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளது, இது அதன் தொடர்ச்சியான முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது. வங்கியின் வரிக்குப் பிந்தைய இலாபம் 45.4 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது. வலுவான இருப்புநிலை விரிவாக்கம் மற்றும் சொத்துத் தரத்தில் ஏற்பட்டுள்ள நிலையான முன்னேற்றங்கள் இதற்குப் பெரும் பக்கபலமாக அமைந்தன. வங்கியின் நிதிச் செயல்பாடு குறித்து கருத்துத் தெரிவித்த HNB PLCஇன் தலைவர் திரு. நிஹால் […]
BYDஇன் புதிய காட்சியறையும் சேவை நிலையமும் கண்டியில்

BYD நிறுவனம் மற்றும் அதன் இலங்கைக்கான முகவரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ, இந்திரா சர்வீஸ் பார்க் (Indra Service Park) உடன் இணைந்து கண்டியில் புதிய ‘3S’ (விற்பனை காட்சியறை, சேவை நிலையம் மற்றும் உதிரிப்பாகங்கள்) வசதியை அண்மையில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளது. மத்திய மாகாணத்தில் உள்ள BYD வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்குப் பின்னரான சேவைகளை மிக இலகுவாகவும், விரிவாகவும் வழங்கும் நோக்கில் இந்த விஸ்தரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அங்குரார்ப்பண நிகழ்வில், BYD இன் ஆசிய பசிபிக் […]
சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில் கலைநயத்துடன் அரங்கேறிய காதலர் தினக் கொண்டாட்டம்

கொழும்பு, 23 பெப்ரவரி 2026: காதலின் உன்னதத்தையும், கலைநயத்தையும் பறைசாற்றும் வகையில், சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa விடுதியில் இவ்வாண்டு காதலர் தினம் மிகுந்த நேர்த்தியுடன் கொண்டாடப்பட்டது. மனதைக் கவரும் நுணுக்கமான கலைவண்ணத்தில் உருவான இனிப்பு வகைகள் இந்த கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்தன. பளபளப்பான இதய வடிவிலான பிராலின்கள் (Pralines), புத்தம் புதிய ஸ்ட்ராபெர்ரி பழங்களால் அலங்கரிக்கப்பட்ட இனிப்புகள் மற்றும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ‘பெட்டிட் ஃபோர்ஸ்’ (Petit Fours) என ஒவ்வொன்றும் அன்பின் அடையாளமாக […]
The Selvern Trust புதிய மொழி app ஐ அறிமுகம் செய்துள்ளது

ஆங்கில மொழி தொடர்பாடலை இலகுவாக்கும் வகையில் real-time AI ஆதரவுடன் ஆங்கில பேச்சுத்திறனை மேம்படுத்தும் புத்தாக்கமான app ஆக SELVE அமைந்துள்ளது. ஆங்கிலம் பேச்சுத்திறனில் போதியளவு முன்னேற்றமின்மையால் தமது தொழில்நிலைகளில் மேம்பட முடியாதவர்களுக்கு உதவும் வகையில் Selvern Trust இனால் இந்த app வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற மொழிசார் தடைகளை தீர்ப்பதற்கு உதவும் வகையில் SELVE செயலாற்றும். 2026 மார்ச் மாதத்தில் உபயோகிப்பதற்கு இலவச பரீட்சார்த்த காலத்தை வழங்கும் SELVE, ஆங்கிலப் பேச்சுத் திறன் குறைபாட்டினால் பல்வேறு […]
தனியார் சுகாதார சேவைத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் நிபுணர்களை ஒரே மேடைக்கு அழைக்கும் APHNH சுகாதார சேவை தலைமைத்துவ மாநாடு 2026

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் செவிலியர் சேவைகள் சங்கம் முதல் முறையாக ஏற்பாடு செய்த சுகாதார சேவை தலைமைத்துவ மாநாடு 2026, மார்ச் 9ஆம் திகதி வோட்டர்ஸ் ஏஜ் வளாகத்தில் மிகவும் வெற்றிகரமான முறையில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் தனியார் வைத்தியசாலைத் துறையின் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஒழுங்குபடுத்துனர்கள், காப்புறுதி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சர்வதேச நிபுணர்கள் கலந்துகொண்டனர். அத்துடன், இலங்கையின் சுகாதார சேவைத் துறையில் நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய முன்னுரிமைகளை அடையாளம் கண்டு அவை கலந்துரையாடப்பட்டன. தனியார் வைத்தியசாலைகள் மற்றும் […]
எரிசக்தி மாற்றத்திற்கான புதிய வழிகாட்டி: 2026-ஆம் ஆண்டிற்கான முக்கிய போக்குகளை வெளியிட்டது Huawei

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையானது தற்போது அதிவேக வளர்ச்சிக் கட்டத்தைக் கடந்து, ஒட்டுமொத்த மின் விநியோகக் கட்டமைப்புடன் முழுமையாக ஒன்றிணையும் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. இந்த மாற்றத்தினால், மின் விநியோகக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை, செலவுத் திறன் மற்றும் பெருமளவிலான பெருமளவிலான நுண்ணறிவு ஒருங்கிணைப்பு போன்ற புதிய சவால்களை இத்துறை எதிர்கொண்டு வருகின்றது. இந்தச் சவால்களுக்குத் தீர்வாக, சூரிய சக்தி, காற்று மற்றும் எரிசக்தி சேமிப்பு (ESS) நம்பகமான மற்றும் முதன்மையான எரிசக்தி ஆதாரங்களாக மாற்றலாம் என்பது குறித்த […]
உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், கிரிக்கெட் வரலாற்றில் இது பல புதிய விடயங்களை இணைத்துள்ளது. இலங்கையில் வயது வேறுபாடின்றி அனைவராலும் நேசிக்கப்படும் ஒரு விளையாட்டாக கிரிக்கெட் காணப்படுகின்றது. இதன் காரணமாகவே, இம்முறை நடைபெற்ற T20 உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்ப்பதில் இலங்கை ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். போட்டிகளைப் பார்ப்பதுடன் மட்டுமன்றி, கிரிக்கெட் விளையாட்டின் சுவாரஸ்யமான விடயங்கள் மற்றும் கலந்துரையாடல்களைக் கேட்பதற்கு ரசிகர்கள் பழகிவிட்டனர். ஏனெனில், இது போட்டியைப் […]
இலங்கையின் தோட்டச் சமூகத்தைப் பாதுகாப்பதில் 100 ஆண்டுகளை நிறைவு செய்யும் இலங்கை பொருந் தோட்ட உரிமையாளர்களின் வருங்கால வைப்பு நிதிச் சங்கம்

இலங்கையில் முதலில் நிறுவப்பட்ட நலன்புரி நிதிகளில் ஒன்றான இலங்கைத் பெருந்தோட்ட உரிமையாளர்களின் நலன்புரிச் சங்கம், 2026 மார்ச் 10ஆம் திகதியன்று தனது நூற்றாண்டு விழாவை மிகுந்த பெருமிதத்துடன் கொண்டாடுகிறது. இச்சங்கம் உத்தியோகப்பூர்வமாக இன்றிலிருந்து நூறு ஆண்டுகளுக்கு முன் கண்டியில் ஆரம்பிக்கப்பட்டது. தொழில் ரீதியாக தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள தோட்ட உரிமையாளர்களின் ஓய்வூதியத்தை பாதுகாப்பதே இந்நிதியின் நோக்கமாகும். தன்னார்வ ஓய்வூதிய சேமிப்புத் திட்டமாக 331 உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிதியமானது, ஆண்டுக்காண்டு பலமாக வளர்ச்சியடைந்து இன்று 1700க்கும் மேற்பட்ட […]