இலங்கையின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் உணவு, வெறும் உடல் ஊட்டத்திற்கு அப்பாற்பட்டு, ஒரு பாரம்பரிய சொத்தாகவும், அன்பின் மொழியாகவும் திகழ்கிறது. இந்த ஆழமான உணவு பாரம்பரியத்தை TikTok தளத்தில் பகிர்ந்து வரும் கொடமுன உஷானி தேவ்னி, தனது அமைதியான ஆனால் உணர்வுபூர்வமான பிரசன்னத்தால் ஆயிரக்கணக்கானோரின் மனங்களை கவர்ந்துள்ளார். அழகான கைகளாலும், இனிமையான குரலாலும், இலங்கையின் சுவையான உணவுகளாலும் நிறைந்த அவரது காணொளிகள், வெறும் பிரபலமாவதற்காக ஆரம்பிக்கப்படவில்லை. மாறாக, அவரது இந்த டிஜிட்டல் பயணம் ஆழமான அன்பில் இருந்து தோன்றியது. இதுவே அவரது வெற்றியின் இரகசியமும் கூட.
உஷானியின் சமையல் பயணம் ஆர்வத்தினால் அல்ல, ஒரு தேவைக்காக ஆரம்பிக்கப்பட்டது. 13 வயதில், அவரது சகோதரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, பெற்றோருக்கு உதவும் பொருட்டு முதல்முறையாக சமையலறையில் அடியெடுத்து வைத்தார். இந்த சவாலான காலகட்டத்தில், சமையல் என்பது வெறும் உணவு தயாரிப்பதற்கு அப்பாற்பட்டு, வார்த்தைகள் இல்லாமல் அன்பை வெளிப்படுத்தும் வழியாக மாறியது. இந்த ஆரம்பகால அனுபவமே இன்று அவர் ஒரு சிறந்த முன்மாதிரியான பெண்ணாகவும், சிறந்த படைப்பாளியாகவும் உருவாக அடித்தளமாக அமைந்தது.
உஷானியின் சமையல் கலையை உலகுடன் பகிர்வது அவரது சகோதரியின் ஊக்குவிப்பால் ஆரம்பமாகியது. தனது சகோதரியே முதல் வீடியோவை படமெடுத்து, அவருக்காக சமூக ஊடக கணக்கை உருவாக்கினார். TikTok தளத்தில் உஷானி போலித்தனமின்றி, trends-களை துரத்தாமல், தான் நேசிக்கும் இலங்கை உணவுகளை அன்புடன் பகிர்ந்து வந்தார். அவர் இலங்கைக்கு வெளியே வளர்ந்திருந்தாலும், அவரது பாரம்பரியத்துடனான தொடர்பு உறுதியாக இருந்தது.
‘நவீன வாழ்க்கையை ஏற்றுக்கொள். ஆனால் உனது பாரம்பரியத்தை விட்டுவிடாதே’ என்ற தந்தையின் அறிவுரை அவரை வழிநடத்தியது. பழமைக்கும், புதுமைக்கும் இடையேயான இந்த சமநிலை அவரது ஒவ்வொரு படைப்பிலும் பிரதிபலிக்கிறது. பாரம்பரிய உணவுகளை நவீன தொடுதலுடன் புதுப்பித்து, எளிமையில் இருக்கும் செழுமையை உலகுக்கு காட்டுகிறார்.
உஷானி தனது வெற்றிக்கு TikTok தளத்தின் பங்கை உண்மையுடன் ஏற்றுக்கொள்கிறார். ‘மற்ற சமூக ஊடகங்களை விட, TikTok படைப்பாற்றல் மிக்க உள்ளடக்கத்திற்கு அதிக காட்சித்தன்மையை வழங்குகிறது’ என்று அவர் கூறுகிறார். இன்னும் பலர் இந்த தளத்தின் மதிப்பை புரிந்துகொள்ளவில்லை என்றாலும், ‘அறிவாற்றலுடனும், படைப்பாற்றலுடனும் பயன்படுத்தினால், இது பலருக்கு வருமானம் ஈட்டும் வழியாக மாறலாம்’ என நம்புகிறார்.
போலித்தனமின்றி, வெறுமனே சமைத்து, நேசித்து, குணப்படுத்தும் உஷானியின் பயணம், சமூக ஊடகங்கள் உண்மையை விட trends-களுக்கு முன்னுரிமை கொடுக்கும் இக்காலத்தில் நேர்மையின் சக்தியை நினைவூட்டுகிறது. உஷானி போன்ற படைப்பாளர்களுக்கு இடமளிப்பதன் மூலம், TikTok வெறும் தளம் மட்டுமல்ல. கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும், உள்ளடக்கத்திற்கும் உறவுக்கும், மற்றும் ஒருபோதும் சந்திக்காத ஆனால் அன்பு, ஆறுதல் மற்றும் இதயத்தால் தயாரிக்கப்பட்ட உணவிற்கான பொதுவான ஏக்கத்தை பகிரும் மக்களுக்கிடையே அமைந்த ஒரு பாலம்.
உஷானியை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துவது, அவரது படைப்புகள் மக்களின் உணர்வுகளை ஆழமாக தொடும் விதம். அவர் வெறுமனே சமைப்பதில்லை. மாறாக ஆறுதலளிக்கிறார். அவரது கைகளில், எளிய இலங்கை உணவு மீள்திறன், அன்பு, மற்றும் ஒற்றுமையின் செய்தியாக மாறுகிறது. ‘துன்பப்படுபவர்களுக்கும் மன போராட்டங்களை சந்திப்பவர்களுக்கும் நேர்மறையான செய்தியை அனுப்ப முயல்கிறேன்’ என்கிறார். இதன் விளைவாக, பல பெண்கள் தங்கள் தனிப்பட்ட கதைகளை அவருடன் பகிர்ந்து கொள்கின்றனர். இது அவருக்கு ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களை (followers) விட மதிப்புமிக்கது. TikTok இல்லாமல், உஷானியின் கதை அவரது குடும்ப வட்டத்திற்குள்ளேயே மட்டுப்பட்டிருக்கலாம். ஒவ்வொரு காட்சியிலும் உணவு என்பது வெறும் ஊட்டத்திற்கு அப்பாற்பட்டது என நினைவூட்டும் உஷானி, உறவு, அன்பு, மற்றும் பாரம்பரியத்தை போற்றுகிறார். இதற்கு TikTok போன்ற தளங்கள் பாலமாக விளங்குகின்றன.